Tuesday, October 13, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 9

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8

சித்தி வீட்டுக்கு போவதா வேண்டாமா என்று தனக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தாள் மது. “நான் உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன் சித்தின்னு சொன்னது தான் தாமதம்…உடனே சித்தி இப்படி ஓவரா சந்தோஷப்பட்ட மாதிரி ஏன் பேசறாங்க?”


இப்படி தேனொழுக பேசும் வழக்கம் காமாட்சிக்கு எப்பொழுதுமே உண்டு. ஆனால் ஏனோ மதுவிற்கு அது பிடிப்பதில்லை. தன் அம்மாவை போல் குதூகலமாய், சகஜமாய் பேசாமல், காமாட்சி செயற்கை தனமாக எதோ ஆதாயத்தை எதிர்பார்த்து பேசுவதை போன்றே தோண்றும் அவளுக்கு. அம்மா இறந்தவுடன் இது போல ஏதேதோ அவள் அப்பாவிடம் குழைந்து பேசி, அவள் அம்மாவின் சேலைகளையெல்லாம் காமாட்சி எடுத்துக் கொண்டு போனதை மதுவால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனாலோ, இல்லை வேறு காரணத்தினாலோ அவர் மீது வெறுப்பு தட்ட, ஒரே ஒரு முறை மட்டும் சித்தி வீட்டுக்குச் சென்றவள், அதன்பின் அவர் பல முறை அழைத்தும் செல்லாமல் தட்டிக் கழித்து வந்தாள்.

ஆனால் அன்று வேறு வழியில்லாமல் சித்தி வீட்டுக்கு கிளம்பியவள் திவ்யாவிடம் விடை பெற்ற பின், வழி நெடுகிலும் அங்கே சென்று தன் வேலையை எப்படி செய்வது, அந்த இடம் வசதியாய் இருக்குமா என்று பலவாறு யோசித்துக் கொண்டே சென்றாள். ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் வளாகத்தை அடைந்தவள், பலத்த யோசனையுடன் லிஃப்டுக்காக காத்திருக்காமல், இரண்டாவது மாடியில் இருந்த சித்தி வீட்டுக்கு படிகளில் ஏறத் துவங்கினாள். அருகில் ஏதோ நிழலாட யாரது என்று நிமிர்ந்து பார்த்தாள். எதிரே பற்கள் அனைத்தையும் காட்டியபடி அந்த பில்டிங் செக்கரட்டரி ராமசாமி. அவரை பார்க்காதைப் போல், மீண்டும் ஏறத் துவங்கினாள். ஆனால் அவர், “என்ன பாப்பா? என்னை ஞாபகம் இருக்கா?” என்று குழைந்தார்.

சுட்டெறிக்கும் பார்வையால் அவரை திரும்பி முறைத்தவள், மேலே தொடர்ந்து நடக்கவும், அவளுக்கெதிரில் மிக அருகே நின்று கொண்டு அவள் பாதையை மறைத்தார்.

“நீயா வழிவிடறியா? இல்ல…” என்று செறுப்பை பார்த்தாள் மது. அவளது பார்வையின் அர்த்தம் புரிய, அவருக்கு கோபம் தலைக்கேறியது, “இன்னும் உனக்கு திமிரு அடங்கலையா? உனக்காக தான்டீ ஒரு வருஷமா காத்துகிட்டு இருக்கேன்…என்ன அசிங்கப் படுத்திட்டு நீ அவ்வளவு சீக்கரம் தப்பிக்க முடியாது…நீ இங்கிருந்து போறதுக்குள்ள உன் பேர நாரடிக்கல…என் பேரு ராமசாமியில்ல!” “உன்னால ஆனத பாத்துக்க…!” என்று கத்திவிட்டு அங்கிருந்து அகன்றாள் மது.

மது கதவை தட்டவும், வழக்கமான பெரியதொரு புன்னகையுடன் அவளை வரவேற்றார் அவளது சித்தி காமாட்சி. சிரிக்கும் போது அவள் அம்மாவை போன்றே தெரிந்த சித்தியை பார்த்ததும், அங்கு வருவதற்கு முன் மனதில் அவரை பற்றி ஓடிய எண்ணங்களையெல்லாம் தூரப் போட்டுவிட்டு ’சித்தி’ என்றவாறு காமாட்சியை கட்டியணைத்தாள் மது.

*****************************************************************************
லேசாய் மேடிட்ட வயிறுடன், மெல்ல மெல்ல கவனமாக எட்டு வைத்து நடந்து கொண்டிருந்த அந்த பெண்ணை முகத்தில் ஆர்வம் பொங்க முகில் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ரஞ்சித்,
“என்ன முகில் அப்படி பாக்குற?” என்று சிரித்துக் கொண்டே வினவினான்.
முகத்தில் அரும்பிய புன்னகையுடன் அவளும், “ஒன்னுமில்லீங்க…”
“என்ன ங், ஞ், சைங்க் ன்னு ஒரே ச்சைனீஸ் பாஷையா பேசிகிட்டு? எத்தனை தடவை
சொல்லியிருக்கேன்? ரஞ்சித் னு கூப்டுன்னு?” செல்லமாய் அவன் கோபித்துக் கொள்ள,
“எல்லாரும் உங்கள அப்படி தான் கூப்பிடறாங்க…நானும் அப்படியே கூப்பிட்டா என்ன நல்லா இருக்கும்? அதுக்கு ஏங்க, என்னங்க வே பரவாயில்லை…”

“ஓஹோ…அப்படியா விஷயம்? சரி, ரஞ்சித்துன்னு கூப்பிட வேண்டாம்…அதை சுருக்கி ஸ்டைலா ரேன்ஸ் னு கூப்பிடு…”

“அய்யே…இது நல்லாவே இல்லை…நான் வேணா ரஞ்சி ன்னு கூப்பிடவா?”

“இது மட்டும் என்ன? ரஞ்சி ட்ராஃபி மாதிரி தான இருக்கு? சரி…சரி…எப்படியோ ச்சைனீஸ் பாஷை பேசாம தமிழ்ல பேசினா அதுவே போதும்…சரி, மொதல்ல விஷயத்துக்கு வா…எதுக்கு அந்த பொண்ணையே வச்ச கண் வாங்காம பாத்துகிட்டு இருந்த?”

“அவங்க குழந்தை உண்டாகியிருக்காங்கல்ல? அதான் பாத்தேன்…எவ்ளோ அழகா இருக்காங்க பாத்தீங்களா?”

“ஹ்ம்ம்…இப்ப தான் கல்யாணம் ஆச்சு …அதுக்குள்ள என் பொன்டாட்டிக்கு குழந்தை ஆசை வந்துடுச்சு…”

ரஞ்சித் இப்படி சொல்லவும், முகில் முகம் வாடிப் போனது, அவளுடைய மனநிலையை புரிந்து கொண்டவனாக அவனும், “சரி சொல்லு….அம்மா வேற இன்னிக்கு காலையில பேரம்பேத்தின்னு ஏதோ சொல்லிட்டு இருந்தாங்களே? நீ என்ன நினைக்கற?”

திடீரென்று ரஞ்சித் இப்படி கேட்கவும், என்ன சொல்வதென்று தெரியாமல், முகில், “உங்க இஷ்டங்க…”

“ம்ம்…அப்ப சரி…என்னை பொறுத்த வரைக்கும், கல்யாணம் ஆனப்புறம் இந்த குழந்தை குட்டி இதெல்லாம் இல்லாம, ஒரு ரெண்டு இல்ல இல்ல…மூணு வருஷமாவது போகனும், ஒரு நாலு இடம் நல்லதா சுத்திப் பாக்கனும்…என்ன சொல்ற?”

“என்னது? மூணு வருஷமா???” ஆச்சர்யத்தில் முகிலின் கண்கள் விரிந்ததைப் பார்த்து, ரஞ்சித்திற்கு சிரிப்பு வரவே, “யேய்…என்னவோ பெருசா உங்க இஷ்டம்னு சொன்ன? இப்ப என்னடான்னா, இப்படி பேய் முழி முழிக்கற?”

“மூணு வருஷம் ரொம்ப ஜாஸ்தி ரஞ்சி….”

முதன் முறையாக ரஞ்சி என்று கொஞ்சும் குரலில் அவள் அழைத்ததில் கிறங்கிப் போன ரஞ்சித், “அப்ப நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிருவோம் மேடம்…சொல்லுங்க…”

“ஹ்ம்ம்…வேணும்னா ஒரு ஆறு மாசம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம்…”

“என்னது ஆறுமாசமா? ரொம்ப ஜாஸ்தியா இருக்கேம்மா….” என்று ரஞ்சித் நக்கலடிக்கவும்,

“சரி…அப்ப வேணா ஒரு…ஒரு…எட்டு மாசம்?”

“அடேங்கப்பா….ஆறு மாசத்துக்கும், எட்டு மாசத்துக்கும் ரொம்ப வித்யாசம் ஜாஸ்தி தான் போ…”
“என்ன ரஞ்சி…”

“சரி, சரி….மேடம் சொன்னா அப்பீல் ஏது? நம்ம முதல் கல்யாண நாளப்போ, நீ நாலு இல்லைன்னா, மூணு மாசமா இருப்ப…போதுமா?

“நீங்க கன்ஸீவ் ஆயிருக்கீங்க…ட்லெல் வீக்ஸ்!!!” டாக்டர் சொன்னது மீண்டுமொருமுறை அவள் காதில் ஒலித்தது. தன் கணவனுக்காக அவள் உயிர் துடித்துக் கொண்டிருந்த அதே வேளையில், அவனது உயிர் தனக்குள் துளிர்விட்டிருப்பதைக் கூட அறியாமல் இத்தனை நாட்களாய் இருந்ததை எண்ணும் போது, அவள் இதயத்தையே பிளக்கும் அளவிற்கு மனதில் வலி உண்டானது. அவள் கண்களில் பெருக்கெடுத்த அவளது அன்பின் ஊற்று, மெல்ல மெல்ல அவள் கைகளில் ஏந்தியிருந்த அந்த வெள்ளைச் சட்டையை நனைத்தது.

இவற்றையெல்லம் கதவருகில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த தனலட்சுமி, கையிலிருந்த அந்த வெள்ளைச் சட்டையை நீவியபடி, கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த மருமகளை அதற்கு மேல் பார்க்கும் சக்தியற்றவறாய் உடனே அங்கிருந்து அகன்றார்.

அன்று அளவுக்கதிகமாய் அவனது நினைவுகள் அவள் மனதை வாட்ட, அன்புக் கணவனின் அருகாமைக்கு, அவள் உடம்பின் ஒவ்வொரு செல்லும் துடியாத் துடிக்க, தனிமையின் பாரம் இதயத்தையே பிளக்க, அப்படியே மெத்தையில் சரிந்தாள். தன் இதயத்தை பிளவிலிருந்து காப்பாற்றுவதைப் போல், சட்டையை அணைத்தவாறு, கைகளையும் கால்களையும் குறுக்கிக் படுத்துக் கொண்டு, ரஞ்சித் கைதானதிலிருந்து முதன்முதலாய் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினாள் முகில்.

துகள் துகளாய் உடைந்துவிட்ட
ஒவ்வோர் இதயச்சில்லிலும்
உன் முழு முகம்!

மருநாள் காலை வேக வேகமாக எட்டு மணிக்கெல்லாம் வெளியே கிளம்ப தயாரான மனைவியையும், மருமகளையும் முகத்தில் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சுப்பிரமணியம்.
“தனம்! எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும் காலங்காத்தால?”
“கோவிலுக்கு…” தேங்காய், இன்ன பிற சாமான்களை பைக்குள் அடைத்தவாறே பதிலளித்தார் தனலட்சுமி, அப்போதும் முகத்தில் கேள்விக்குறி மாறாமல் நின்ற கணவனை கவனிக்காமல், “முகில்! ரெடியாம்மா?”
“என்ன விஷயம்? திடீர்ன்னு கோவிலுக்கு எதுக்கு போறீங்க?”
“ஹ்ம்ம்…எதுக்…கா?” என்று கோபமாக இழுத்தவர் முகில் தயாராகி வரவும், “நாங்க கிளம்பறோம்!!! ஊர்ல நடக்கற எல்லா விஷயமும் அத்துப்படி!! ஆனா, வீட்டு விஷயம் ஒரு மண்ணும் தெரியாது…இனிமே உங்களுக்கு எதாவது ஞாபகப் படுத்தறதுன்னா, நியூஸ் பேப்பல விளம்பரம் குடுக்கறோம்!! நீ வாம்மா..” என்றபடி முகிலை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினார்.

சாமி தரிசனம் முடிந்த பின் கோவில் பிரகாரத்தில் வந்தமர்ந்தனர். கோவிலின் அமைதியை மிகவும் ரசிப்பவர் தனலட்சுமி. ஆனால் அன்று, முகிலின் அமைதியை அவரால் தாங்க இயலவில்லை.

“என்னம்மா? என்ன யோசிக்கற?”

வலுக்கட்டாயமாக தருவிக்கப் பட்ட ஒரு புன்னகையுடன் முகில், “ஒன்னும் இல்லை அத்தை…இங்க தான முதன்முதலா உங்க எல்லாரையும் பாத்தேன்? நாங்க ரெண்டு பேரும் இதே இடத்துல தான் உக்காந்து பேசினோம்”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், தனலட்சுமி, “சரி…நேரம் ஆச்சு…இப்ப போனா தான் ஒன்பது மணிக்குள்ள அங்க இருக்க முடியும்…கிளம்பலாம்”. பிறகு வழிநெடுகிலும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த மருமகளை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. சிறைச்சாலையை அடைந்தவுடன், அலுவலக அறையில் சற்றே தயங்கி நின்றார் தனலட்சுமி.
“என்ன அத்தை? வாங்க போலாம்…”
“இல்லம்மா…நீ போ…நான் கொஞ்சம் இருந்து வரேன்…”

அவர்கள் வரவை சற்று முன்னரே அறிந்திருந்ததால், அவர்களை எதிர் நோக்கி அந்த சிறிய அறையில் காத்திருந்த ரஞ்சித்தின் முகம், முகிலை பார்த்ததும் உடனே மலர்ந்தது. எதுவும் பேசாமலே, அவனை பார்த்தவாறே அவனெதிரே அமர்ந்தாள் முகில். அவளையும் அறியாமல் அவள் கண்கள் பனிக்கத் துவங்கியது. ரஞ்சித் பார்க்கும் முன்னர், விழிமீறத் துடித்த நீர் துளிகளை, இமைத் திரையிட்டு அடக்க முற்பட்டாள்.

“என்ன முகில்? திடீர்ன்னு புதன் கிழமை அதுவுமா வந்திருக்க? இன்னிக்கு காலையில வார்டன் சொல்லித் தான் எனக்கே தெரிஞ்சுது…எதாவது முக்கியமான விஷயமா?”

அதற்கு மேல் அவளால் கண்ணீருக்கு வேலி போட இயலவில்லை. கரகரவென கண்ணீர் துளிகள் அவள் கன்னங்களில் சரியத் துவங்க, பதறிப்போனவனாய், “என்னாச்சு முகில்?” என்று அவள் கைகளைப் பற்றினான்.

பற்றியிருந்த அவனது கரங்களை எடுத்து, தன் கன்னங்களில் ஒற்றிக்கொண்டு, அவன் கன்களை ஊடுருபவளை போல், உற்று நோக்கினாள். அக்கறையுடன் கலந்த கேள்விக்குறியோடு அவள் மீது நிலைத்து நின்ற அவனது கருவிழிகளும், அந்த கணமே அவன் விழிகளோடு கலந்திடத் துடித்து, ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அலைபாய்ந்த அவளது கருவி்ழிகளும் உரசிக் கொண்டதில், அந்த சிறிய அறையெங்கிலும் காதல் ஜுவாலை கொழுந்து விட்து எறிந்தது. ஆயிரம் ஆயிரம் கதைகள் பேசத் துடித்தும், அவளுக்கு நா எழவில்லை, தொண்டையை ஏதோ அடைத்துகொள்ள, மிகுந்த சிரமத்துடன், “இன்னிக்கு… இன்னிக்கு…நம்ம கல்யாண நாள் ரஞ்சி…”.

ஒரு வருடத்துக்கு முன்பு, சரியாக இதே நாளில், திருமணம் முடிந்து முதன் முதலாய், அவனை தனிமையில் சந்திக்கக் கிடைத்த அந்த ஒரு சில நிமிடங்களில், ஆயிரம் ஆயிரம் கதைகள் பேசத் தவித்தும், பேச வார்த்தைகளின்றி தத்தளித்த அந்த சுகமான பொழுது ஏனோ அப்போது அவள் நினைவுக்கு வர, வயிருக்குள்ளிருந்து பெரிதாய் ஏதோ ஒன்று வெளிக்கிளம்பி வந்து அவள் நெஞ்சை அடைத்தது.

தனலட்சுமி அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில், பெரிதாய் அழத் துவங்கினார். என்ன சொல்லியும் அவரை தேற்ற முடியவில்லை. அவர்கள் பேசட்டும் என்று முகில் சற்று நேரம் அமைதி காத்தாள். அவர்கள் கிளம்பும் நேரம் வந்ததும், அத்தையை முதலில் போக சொல்லிவிட்டு ரஞ்சித்திடம் திரும்பியவளின் கண்கள் குளமாகியிருந்தன.

“என்னம்மா?” என்று பதறியபடி அவன் வினவ, தளுதளுத்த குரலில் முகில், “ரஞ்சி! இது வரைக்கு நான் உங்கள கேட்டதில்லை...நீங்க எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டீங்கன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு...ஆனா...ஆனா...இப்ப கேக்க வேண்டிய நிலைமையில இருக்கேன்...”

“சொல்லு முகில்...”

“இப்பெல்லாம் என்னவோ தெரியல...என்னால...என்னால தூங்கவே முடியல....” கண்களை துடைத்துக் கொண்டவள், அவனை உற்றுப் பார்த்தாள்.

“ஒவ்வொரு நிமிஷமும் நீங்க என் கூடயே இருக்கனும் போல தோணுது...கண்ண மூடி படுத்தாலே, நீங்க எங்கயோ என் பக்கத்துல தான் இருக்கீங்கன்னு தோணுது...கண்ண திறந்து பாத்தா நீங்க இல்ல...ஆனாலும் ராத்திரி ஒரு பத்து தடவையாவது எழுந்து பாக்கறேன்...இதெல்லாம் ஒரு கெட்ட கனவா இருக்கக் கூடாதா, நீங்க எப்பவும் போல என் பக்கத்துலையே படுத்து தூங்கிட்டு இருக்க கூடாதான்னு...என்னவோ தெரியல வேற எப்பயும் விட இப்ப தான் நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்...வக்கீல் சொல்றாரு, நீங்க எதையும் மறைக்காம முழுசா சொல்லிட்டா கண்டிப்பா ஜெயிச்சிடலாம்னு...தயவு செஞ்சு என்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க ரஞ்சி... அன்னிக்கு எதுக்கு மாடிக்கு போனீங்கன்னு சொல்லுங்க... நம்ம குழந்தைகாகவாவது சொல்லுங்க...”

அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டான் ரஞ்சித். அவன் மீது அவளுக்கு அனுவளவு அவநம்பிக்கை இருக்குமாயின் கூட, அவனது பிடியின் அழுத்த்திலேயே அது விலகியிருக்கும்.
“நம்ம நல்லதுக்காக தான் முகில் நான் அதை சொல்ல மாட்டேங்குறேன்...புரிஞ்சுக்கோ...நாம நல்ல படியா எந்த கெட்ட பேரும் இல்லாம இருக்க தான்ம்மா...நான் எந்த தப்பும் பண்ணல, கண்டிப்பா வெளிய வருவேன்...நம்ம குழந்தை பிறக்கும் போது நான் உன்னோடையே தான் இருப்பேன்...இது சத்தியம்!”

ஏதோ வேலை விஷயமாக சிறைச்சாலை வந்திருந்த இன்ஸ்பெக்ட்டர் பரத், முகிலை அங்கு பார்த்ததும் அவர் முகத்தில் மீண்டும் அதே சந்தேக ரேகைகள் முளைத்தன. ஏதையோ கண்டுபிடித்தவர் போல், அவரை கடந்து சென்று கொண்டிருந்த முகிலையும் தனலட்சுமியையும், “ஒரு நிமிஷம்!” என்று நிறுத்தினார்.
[தொடரும்]

25 comments:

சங்கர் said...

தனலட்சுமி, முகில் கூட சேர்ந்து நானும் கொஞ்சம் கண்ணீர் விட்டுட்டேன்... :P

மெகா சீரியல் பாத்த பீலிங்..

G3 said...

Next part seekiram podunga :))

Divyapriya said...


@G3
வர வர இதே கமெண்ட்ட தான் போட்டுகிட்டு இருக்கீங்க :)) வேற எதாவது போடுங்க

Prabhu said...

அப்புறம்?

gils said...

next part seekrama podunga :D heheee

gils said...

intha part mega serial pola aadicihi

mvalarpirai said...
This comment has been removed by the author.
mvalarpirai said...

/// அவள் கண்களில் பெருக்கெடுத்த அவளது அன்பின் ஊற்று, மெல்ல மெல்ல அவள் கைகளில் ஏந்தியிருந்த அந்த வெள்ளைச் சட்டையை நனைத்தது///

அருமை ! தீபாவளி சிறப்பு பதிவாக அடுத்த பகுதியை வெளியிடுங்க :)

தீபத்திரு நாள் வாழ்த்துகள் D.P !

G3 said...

// Divyapriya said...


@G3
வர வர இதே கமெண்ட்ட தான் போட்டுகிட்டு இருக்கீங்க :)) வேற எதாவது போடுங்க//

Ada.. aduthu ennna nadakkapogudhunnu neenga suspense vechu mudikarappo adutha part dhaanga kekka thonudhu.. porumaiya indha parta paraata thonalae :P

Kandippa kadaisi episodela vera comment podaren :P

Karthik said...

மீ த 10த்!! :))

ஹிஹி.. நானும் அதான் சொல்லனும்.. அப்புறம்???

ரஞ்சித் பத்தியே யோசிச்சிட்டு கொலைய யாரு பண்ணியிருப்பாங்கனு யோசிக்கல.. இப்பதான் தோணறது.. அடுத்த பார்ட்ட சீக்கிரம் போடுங்க.. நல்லவேளை தீபாவளி வாழ்த்துக்களை இந்த பதிவில் காணல.. :))

Nimal said...

நல்லா இருக்கு...
எத்தின பார்ட்ல முடிக்கிறதா எண்ணம்...?

Anonymous said...

intresting aga poguthu.nice

pari@parimalapriya said...

hi Dhivya..the story's pace is kind of suffering in part-9..I wish u can increase the pace in the forth coming episodes... ungaloda thanithuvam indha episode la missing... oru tamil mega serial parrkura feel... sorry if its offending u...unga kita irrukara eluthu thiramai ya mergu etha ennoda comments udhavum nu nambaren...

pari@parimalapriya said...

Divya ur blog is tooooooooo much.its just irresistible. just now read ur 'slip of fingers' post.. laughing with tears rolling from my eyes.. OMG!!!
Being a girl I am happy 2 read another girl's blog.May b that makes me very intimate to ur blog.

Raghav said...

Divya, rombha sogha rasam innaikku.. vazhakkam pol sila sila ezhuththup pizhai.. :( (Sorry ngha.. kutti kutti thavarughal kannula pattu tholayuthu.. athayum thaney sollanum :)

Then, 10 naal leave pottu oor pakkam vanthachu.. Maduraikku (80Km) vanthaa thaan brwose panna mudiyuthu. So english only.

Divyapriya said...


@ சங்கர்

நீ அழுதத் ஃபீனிக்ஸ்லையே மழை வந்துடுச்சு :))

-----------------------
@pappu

அடுத்த பகுதில :)

------------------------

gils said...
//intha part mega serial pola aadicihi//

இதெல்லாம் பீலிங்ஸ் கில்ஸ் :)) கதைக்கு நடுல ஒரு entertainment வேணாமா?

-------------------------
@mvalarpirai
நன்றி valarpirai....உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

------------------------
@G3

சரி, அப்ப லாஸ்ட் பார்ட் வரைக்கும் வெய்ட் பண்றேன் :)

Divyapriya said...


Karthik said...
//மீ த 10த்!! :)) //

என்ன கொடுமை சார் இது? ;)

//ஹிஹி.. நானும் அதான் சொல்லனும்.. அப்புறம்??? //

விழுப்புறம்! ஹீ ஹீ :))

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

--------------------------
நிமல்-NiMaL said...
//நல்லா இருக்கு...
எத்தின பார்ட்ல முடிக்கிறதா எண்ணம்...?//

நன்றி நிமல்...மொத்தம் 13 பகுதி

--------------------------
Anonymous said...
//intresting aga poguthu.nice//

Thanks...

--------------------------
@pari

Thanks a lot pari, story's pace ll pick up from next to next part :) keep reading....

pari@parimalapriya said...

Sure Divya... waiting 4 the other parts... Wish u a very happy Diwali... Diwali nu sollitu blogging ku leave vittudathinga! ;)

Unknown said...

இந்த முறை கொஞ்சம் மொக்கை + செண்டிமெண்ட் + அழுகை + அறுவை.

மதி said...

கண்ணீர்தேசக்காட்சிகள்...! :)
அடுத்த பாகத்த போடுங்க

sri said...

this time less viruviruppu but more of sentiments, i was reading so fast to know what happens next, but konjam emattram :) yaaro sonnapula kadhai marakaradhukullai mudivu podunga :)

Happy Deepavali, may god shower goodness luck health and peace of mind on you.

ஜியா said...

Hi DP... I'm continuously following your story... comment varalaiye nu story padikalaiyenu nenachida vendaam.. :)) its going well.. keep writing in the same pace.. first iruntha maathiri comments varalaiye nu dont change the flow... ippadiye continue maadi...

ஜியா said...

last comment podumpothum, I haven't read other comments... ippavum solren.... don't change the flow based on reader's response :)) finally when anyone read the entire story, it'll be very good...

ரவி said...

Good. I added my Vote !!!

Divyapriya said...


parimalapriya

Thanks pari..wish u the same ...

-------------------------
@ C

இந்த பார்ட் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச பார்ட் :))

-------------------------
@மதி

சரிங்க :) போட்டாச்சு...
-------------------------
@Srivats

Hope u like the next part better :)
-------------------------

@ஜியா

thanks for the encouraging comments ji...as u said, story as a whole படிக்கும் போது எல்லா கலவையும் இருந்தா தான் நல்லா இருக்கும்.

'nyways i cannot change the pace of the story as i've planned it already :) most of my stories, i'll write the climax first n then only start off with the story :)

its really good to know that u r reading the story amidst ur busy schedule :))