Sunday, August 30, 2009

ஒரு தொடர்பதிவும் அறிவிப்பும்...

பல நாளா எதுவும் எழுதாமலே இருக்கறதால, பாவம் பொண்ணுன்னு பெரிய மனசு பண்ணி, நம்ம g3 tag பண்ணிடாங்க.

1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
2. காதல் மனிதனுக்கு அவசியமா?
மனசுல காதல் இருந்தா, பாக்குற எல்லாமே அழகு.
அழகு குறைந்தாலும் மறையாத காதல் அழகு.
எல்லாமே அழகா தெரியுனும்னா, அழகிய காதல் அவசியம்.

3. கடவுள் உண்டா?
நம்பிக்கை தான் கடவுள். நான் நம்பறேன் :)

4. பணம் அவசியமா?
g3 பதில் தான் இதுக்கு ரொம்ப பொருத்தமானது. so, நானும் அதுவே :)
(ஆடம்பரமாய் வாழும் அளவிற்கு தேவையில்லை என்றாலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் அவசியம் தேவை)

அறிவிப்பு என்னன்னா, கூடிய சீக்கரத்துல (hopefully :)) 'ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்' என்ற தொடர் கதைய போடலாம்னு இருக்கேன்.

இந்த பதிவை தொடர இவரை அழைக்கிறேன்...welcome to the tamil blog world muni sir ;)

Saturday, August 1, 2009

சூர்யகாந்தி கவிதைகள் - II

ஆடிப் பாடி அகமகிழ்ந்து,

அன்பில் திளைத்தோம்,

நினைவில்லையா?

பூவில் இருவர் பெயரெழுதி,

பார்த்து ரசித்தோம்,

நினைவில்லையா?

சிரித்து சிரித்து கண்களிலே,

கண்ணீர் துளிர்த்தோம்,

நினைவில்லையா?

கண்னோடு கண் உறவாடி,

பல கதைகள் பகர்ந்தோம்,

நினைவில்லையா?

கைகள் கோர்த்து இருவருமே,

உலகம் மறந்தோம்,

நினைவில்லையா?

விரல் நுனியின் ஸ்பரிசத்திலே,

உடல் சிலிர்த்தோம்,

நினைவில்லையா?

இருவர் இதயம் பரிமாறி,

உயிரோடு உயிரானோம்,

நினைவில்லையா?

ஒரு விரல் வந்து எனைத் தீண்ட,

என் வசம் நான் தோற்று…

மறுவிரல் வந்து தீண்டவும்,

என்னிடமிருந்து விடைபெற்று…

உன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,

உன்னிடமே தஞ்சமடைந்தேன்!

நீ சூடி வந்த பூக்களின் வாசத்தைக் கூட மறக்க முடியவில்லை,

பின்பு எப்படியடி நீ அள்ளித் தெளித்த நேசத்தை மறப்பேன்?

நிறம் மாறினாலும் மனம் மாறவில்லையடி இந்த பூக்கள்

உன் சுவாசத்தை இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறது!

என் அன்பை நீ மறுத்தாலும்,

என்னை அடியோடு வெறுத்தாலும்,

ஏதோ ஒரு உலகத்தில்…

ஏதோ ஒரு தருணத்தில்…

வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்,

நம் கடந்த காலத்தை!


அன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…

தேனில் தோய்த்த கனியாய்,

கடைந்தெடுத்த அமுதாய்,

பாலைவனத்து நீராய்,

என் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…