Sunday, September 6, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 2

பாகம் 1

“இவங்க அக்கா பொண்ணு தான்…லீவுக்கு ஊருக்கு வந்திருந்துச்சாம்…”

“இருபத்தி ரெண்டு…இல்லை இருபத்தி மூணு தான் இருக்கும் போல…”

இப்படி பல குரல்களுக்கு இடையே ஒரு குரல் மட்டும், பெருங்குரலெடுத்து அழும் சக்தி கூட இல்லாமல் கம்மி போய் ஒலித்துக் கொண்டிருந்தது. புடவை தலைப்பால் வாயை மூடிக் கொண்டு குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தார் காமாட்சி, அவருக்கு அருகிலேயே அவரை ஒட்டியவாறு ஒரு சிறுவன்.

“நீங்க என்ன வேணும் இந்த பொண்ணுக்கு?”

“நான் இவ சித்தி சார்…என் சொந்த அக்கா பொண்ணு…” சொல்லிவிட்டு மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினார் காமாட்சி.

“அழாம கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்கம்மா….ப்ளீஸ்…பொண்ணு இறந்து கிட்ட தட்ட ஆறு மணி நேரம் ஆகப் போகுது…இந்த விசாரணை எல்லாம் முடிச்சா தான் ஆஸ்பத்திருக்கு அனுப்ப முடியும்…”

“----“

“பொண்ணோட அப்பா, அம்மா எங்க?”

“அப்பா குவைட்ல இருக்காரு சார்…அவருக்கு விஷயத்த சொல்லியாச்சு…இன்னேரம் கிளம்பியிருப்பாரு…”
“ஓ....சரி, அவங்க இங்க எங்க தங்கியிருந்தாங்க? உங்களோடையா?”

“இல்லை சார்…அவ தின்டுக்கல்ல காலேஜ்ல படிச்சிகிட்டு இருக்கா…வெளிய லேடீஸ் ஹாஸ்ட்டல்ல தங்கி இருந்தா…”

“ஓஹ்ஹ்…பொண்ணுக்கு காலேஜ்ல எதாவது பழக்கம், அப்படி….இந்த மாதிரி எல்லாம் எதாவது உண்டா?”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார்…யார்கிட்டையும் தேவையில்லாம பேச கூட மாட்டா…”

“வேற எதாவது சோகம், இல்லை உடம்பு சரியில்லை…இப்படி எதாவது?”

“அப்படி எல்லாம் ஒன்னுமே இல்லை…அருமையா தான் இருந்தா…ஆசையா, நான் உங்க வீட்டுக்கு வந்து நாளாச்சு…உங்கள பாக்கனும் போல இருக்கு சித்தின்னு கிளம்பி வந்த பொண்ணு…பாவி…இப்படி பண்ணுவான்னு எனக்கு தெரியலையே…”

“ஹ்ம்ம்…உங்க வீட்ல எத்தனை பேரு?”

“எனக்கு ஒரே பையன் சார்…இவன் தான்…ஏழாவது படிக்கறான்…எங்க வீட்டுக்காரரும் குவைட்ல தான் இருக்காரு…இப்ப அவரும் கிளம்பி வந்துகிட்டு இருக்காரு…”

“ஹ்ம்ம்…ஒரு கவலையும் இல்லாத பொண்ணுங்கறீங்க…எந்த பழக்கமும் கிடையாது…அப்புறம் எப்படி? இவ்ளோ பெரிய காரியத்த பண்ணுவா? வேற எதாவது இருக்காம்மா? கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க…”

“எங்கக்கா…அதான் அவ அம்மா திடீர்ன்னு இறந்துட்டா…அதுல தான் மனசொடிஞ்சு போய்ட்டா….ஆனா, அது நடந்து ரெண்டு வருஷம் ஆகப் போகுதே…”

“சரி, இப்ப போஸ்ட் மார்ட்டமுக்கு அனுப்ப போறோம்…நீங்களும் ஆஸ்பத்திருக்கு வரனும்…ஆமா…பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?”

“மது சார்…மதுவந்த்தி

****************************************************************

“மது!!! மதும்மா!!!”

“---“

“யேய் மது!!! காட்டுக் கத்தல் கத்திட்டு இருக்கேன், என்ன பண்ணிட்டு இருக்க? மது….ஏய் மதுமந்தி…”

“அம்மா!!! நீங்களே என் பேரை கிண்டல் பண்றீங்களே!!!” சிணுங்கலுடன் அம்மாவை கோபித்துக் கொண்டாள் மது, மதுவந்த்தி…ஒடிந்து விழுந்துவிடும் அளவுக்கு மெல்லிய தேகம், மிகவும் கலையான மாநிறம், செதுக்கி அளவெடுத்து வைத்தாற் போல் முகவெட்டு. இவள் சிரிப்பதற்காவே பிறந்தவளோ என்று அவளை பார்ப்பவர்கள் எல்லாம் ஆச்சர்யப் படும் அளவிற்கு, என்னேரமும் சிரித்துக் கொண்டே இருப்பாள்.
“கண்ணா….உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டா…”
“என்ன கொஞ்சல் ஜாஸ்தியா இருக்கு? சொல்லுங்க…”

“அப்பா காலையில கூப்பிட்டிருந்தார்ல?”

“என்னவாம்? இந்த தடவையும் லீவுக்கு வர முடியாது, வேலை இருக்கு…பிசினஸ பாக்கனும், வேணும்னா நீங்க கிளம்பி வாங்கன்னு சொல்லியிருப்பாரு….வருஷாவருஷம் இது தான நடக்குது?”

“ஹ்ம்ம்…அது தான் இல்லை…அப்பா அங்க எல்லாத்தையும் ஓரக் கட்டிட்டு இங்கயே வந்துடறேன்னு சொன்னாரு…”

“ஹா….இது ஷாக் ஆஃப் தி சென்ட்சுரியா இல்லை இருக்கு…இரு…” என்றபடி அம்மாவை கிள்ளினாள்.“ஏய்!! எதுக்கு டீ கிள்ளுற?”

“இல்லை, கனவா, நிஜமான்னு பாத்தேன்…”

“முழுசா கேளு…உனக்கு முதல்ல ஒரு கல்யாணத்த பண்ணி வச்சுட்டு, நீ இங்கிருந்து போனப்புறம் நான் தனியா தான இருப்பேன்? அப்ப இங்கயே வந்துடறேன்னு சொன்னாரு…” சொல்லிவிட்டு நக்கல் சிரிப்பு ஒன்றை சிரித்தார், மதுவின் அம்மா.

“ஆரம்பிச்சிட்டீங்களா? என்னடா நமக்கு இன்னும் மணியடிக்கலையேன்னு பாத்தேன்…ஏற்கனவே ஜோதி, வாசுகி…இவங்க வீட்லையும் மணியடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்…”

“என்னடி மணியடிக்கறது?”

“அதான்மா…இந்த கோர்ட்ல எல்லாம் கைதி, சாட்சிகளை கூப்பிடறதுக்கு முன்னாடி மணியடிச்சு கூப்பிடுவாங்களே! அந்த மாதிரி தான்…உனக்கு வீட்ட விட்டு கிளம்ப டைம் வந்தாச்சுன்னு சொல்லி மணியடிக்கறது…எங்க க்ளாஸ்ல லைனா எல்லாருக்கும் மணியடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்…”

“அவங்கவங்க பொண்ணுக்கு காலாகாலத்துல கல்யாணம் ஆகனுமேன்னு வயத்துல நெருப்ப கட்டிகிட்டு இருந்தா, நீங்க இதுவும் பேசுவீங்க…இன்னமும் பேசுவீங்க…”

“இன்னும் எத்தன நாளைக்கு தாம்மா இதே டைய்லாக பேசிட்டு இருப்பீங்க? கொஞ்சம் புசுசா யோசிக்க கூடாது? வெயில் காலத்துக்கு தகுந்த மாதிரி வயத்துல ஐஸ கட்டிக்க வேண்டியது தான?”

“சரி…சரி…சொல்ல வந்த விஷயத்த சொல்ல விடாம பண்ணிடுவியே! முதல்ல நான் சொல்றது கேளும்மா…என் கண்ணில்லை?”

“இல்லை…நான் உன் கண்ணும் இல்லை…மூக்கும் இல்லை…”

“இத பாரு மது…அப்பா உன்னை கேட்டுட்டு தான் மாப்ளை பாக்க ஆரம்பிக்கனும்னு இருந்தாரு…ஆனா, நம்ம ராமன் அங்கிள் இல்லை? அவரு தான்…நல்ல ஒரு இடம் வந்துருக்கு…பாருங்க…ஒத்துவந்தா செய்யலாம்….பையனுக்கும், அவங்க குடும்பத்துகும் நான் கியாரண்டின்னு சொல்லியிருக்காரு…அதான், எனக்கும் அப்பாவுக்கும் உடனே பாக்கலாம்னு ஒரு எண்ணம்…”

“என்னம்மா, பெருசா ப்ரீத்திக்கு நான் கியாரண்டிங்கற மாதிரி, காமடி பண்ணிட்டு இருக்கீங்க? இந்த காலத்து பசங்களுக்கு, அவங்க அப்பா அம்மாவே கியாரண்டி குடுக்க முடியாது தெரிஞ்சுக்கோ…”“சும்மா வளவளன்னு பேச்ச வளக்காத….என்ன சொல்ற? பாக்கலாமா? வேண்டாமா?”

“வேண்டாம்…” ஒற்றை பதிலை திட்டவட்டமாய் சொன்னபடி கம்ப்யூட்டரில் மீண்டும் மூழ்கினாள் மது. உடனே பக்கத்தில் இருந்த கைபேசியை எடுத்து, கணவரை அழைத்தார் மது அம்மா.

“ஹலோ…நான் தான் பேசுறேன்…”
“ஹ்ம்ம்…ஆமா…நீங்க என்ன பண்றீங்க? சாப்டாச்சா?”
“அவகிட்டையா? ஹ்ம்ம்…ஹ்ம்ம்…கேட்டாச்சு….அவ என்ன சொல்ல போறா? சரி ன்னு தான் சொல்லுவா…நீங்க அவங்க வீட்ல பேசுங்க…”
“ஆமாங்க…பாப்போமே…ஒத்துவந்தா பண்ணலாம்…பொறுமையா பாப்போம்…”

“என்னமா? நான் வேண்டாம்னு சொல்றேன்…நீங்க என்னடான்னா அப்பா கிட்ட சரின்னு தான் சொல்லுவான்னு கூலா சொல்றீங்க?”

“கூல் தான்…நீ தான வயத்துல ஐஸ கட்டிக்க சொன்னே?”

“உங்கள!!! என்னவோ பண்ணித் தொலைங்க…”

“இந்தா…பாரு ஃபோட்டோ…”
உச்சு கொட்டியபடி தலையை திருப்பிக் கொண்டு, மது மீண்டும் கம்ப்யூட்டர் திரையை பார்க்கவும், அவளது அம்மா, “மதும்மா…நீ மட்டும் ஃபோட்டோவ பாக்கனுமே! உனக்கு கண்டிப்பா பிடிக்கும்…உனக்கு பிடிச்ச மாதிரி இருக்காரேன்னு தான் நான் கூட அப்பா கேட்ட போது உடனே ஒத்துகிட்டேன்…”

“அதென்னம்மா எனக்கு பிடிச்ச மாதிரி? உங்களுக்கு என்ன தெரியும்? கண்டிப்பா உங்க டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் ஒத்து வராது….”

“அது தான் இல்லை…அன்னிக்கு நீயும், திவ்யாவும் மதுரை டைம்ஸை பாத்துட்டு பேசிட்டு இருந்தீங்களே…எதோ TDH, TDH ன்னு, என்னததுன்னு நானும் தான் பேப்பர எடுத்து பாத்தேன்…” நமட்டு சிரிப்போடு அம்மா கூறவும், மது, “கொடுமை மா…இத வேற ஒட்டு கேட்டீங்களா? ச்சே…போங்கம்மா…” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

“இதுல ஒட்டுக் கேக்கறதுக்கு என்ன இருக்கு? இப்ப பாரு…உனக்கு பாத்துவச்சிருக்க மாப்ளை கூட TDH தான்” என்றபடி கண்களை சிமிட்டினார்.

“நிஜமாவாம்மா? எங்க? காட்டுங்க…” அம்மாவின் கைகளில் இருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த மாத்திரத்தில் மதுவின் முகம் மலர்ந்தாலும், வேண்டுமென்றே உதட்டை சுழித்தாள்…”ஹ்ம்ம்…ஓ…க்கே…ஆமா…இந்த பையன் பேரென்ன சொன்னீங்க?”

“நான் சொல்லவே இல்லையே…” என்றபடி சிரித்தார் மது அம்மா.

“சரி…வேணாம்…சொல்லாதீங்க…”

“சரி…சரி…சொல்றேன்…சொல்றேன்…ரஞ்சி்த்…ரஞ்சித்குமார்…”

********************************************************
ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் மொட்டை மாடியில், இன்டு இடுக்குகளில் எல்லாம் டார்ச் விளக்கின் உதவியுடன், கடமை கண்ணியத்துடன் கண்ணில் எதாவது புலப்படுகிறதா என்று தேடிக் கொண்டிருந்தார், வயது முதிர்ந்த முருகேசன் என்ற அந்த கான்ஸ்டபில். ஒரமாக நின்றபடி ஏதோ யோசனையுடன், ஒரு கரத்தில் கைகுட்டையில் சுற்றியிருந்த ஒரு பெரிய மெழுவர்த்தியை உற்றுப் பார்த்தபடி, புகை பிடித்துக் கொண்டிருந்த அந்த இளவயது இன்ஸ்பெக்டரின் சிந்தனையை கலைத்தது, கான்ஸ்டபிலின் குரல்.“சார்…இங்க என்னவோ இருக்கு…”

கைவசம் வைத்திருந்த வெள்ளை கைக்குட்டையால், முருகேசன் அதை குனிந்து எடுக்க, புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை காலில் போட்டு அனைத்து விட்டு உடனடியாக அவரிடத்தில் வந்தார் இன்ஸ்பெக்டர் பரத்.

“என்ன முருகேசன்?”

“இங்க பாருங்க சார்!!!”

அவரது வெள்ளை கைக்குட்டையின் நடுவில், ஜொலித்துக் கொண்டிருந்தது ஒரு அழகிய தங்க ப்ரேஸ்லட். கான்ஸ்டபில் அதை திருப்பிப் பிடிக்க, டார்ச் உதவியில்லாமையே, அதிகாலை நேரத்து சூர்ய ஒலியில் தகதகவென மின்னியது, அதில் அழகாய், கலைநயத்தோடு பொறிக்கப்பட்டிருந்த பொன்னெழுத்துக்கள்.

முகில்” என்று சத்தமிட்டு படித்தபடி யோசனையுடன் கான்ஸ்டபிளை பார்த்தார் இன்ஸ்பெக்டர்!

[தொடரும்]

18 comments:

Karthik said...

me the first this time! yay! :))

Karthik said...

chanceless narration, really. leaves with so much suspense.

dont make us wait another week. post the next soon plzzz...

gils said...

rauvusu..sonnapolavay murder mystery poatu kalakareenga...seekram adutha part phulees

Karthik said...

ennanga apartments la SOFA mathum thaan irukka?? :D avalavu kaasu koduthu apartments vaangureenga.. innum konjam furnitures podalaam la?? :D

கதிரவன் said...

அது என்னங்க TDH ? ;-)

Nimal said...

அருமையாக இருக்கிறது, திரில்லர் கதையிலும் கலக்கிறீங்க....!

TDH என்றால் என்ன...?

சங்கர் said...

ரொம்ப அழகா கதைய நகர்த்திட்டு போறீங்க.... கலக்குறீங்க... அந்த TDH na என்னாங்க????

mvalarpirai said...

நல்லாயிருக்கு இதுவரைக்கும்..இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பாக்கிறோம் :):)

Raghav said...

அடடா.. கதையின் கடைசியில இப்புடி யோசிக்க வைக்குறீங்களே கலக்கல்ஸ்..

sri said...

ennama ezudhareenga :) super appu.
Madhuvandhi intro ellam supera erukku, vayathula ice kattikara joke sema kalai :) TDH na ennanga ?

mugil per potta braceletaa , achicho! waiting for the next part

G3 said...

//“சரி…சரி…சொல்றேன்…சொல்றேன்…ரஞ்சி்த்…ரஞ்சித்குமார்…”//

என்னமா லிங்க் பண்றாய்ங்கப்பா :)))))


சீக்கிரம் அடுத்த பார்ட் ப்ளீஸ் :)))

Prabhu said...

TDH?
அது ஏன் கதைய மதுரையில செட் பண்ணிருக்கீங்க!

Monicz said...

Wow! Superb!It is my first time in your blog. I was reading some of your previous stories too and they were all awesome and very engaging.Very well narrated.Keep writing!Cheers :)

Monicz said...

And hey, TDH = Tall Dark & Handsome or TDH = Too Damn Hot???? :P

Divyapriya said...


@karthik/gils

Thanks karthik...i m planning to post this story relatively faster :))

------
@lollu karthik
உங்க ப்ளாக் தான் லொள்ளு பண்றீங்கன்னா இங்கயுமா? ;)

------
@கதிரவன்/ NiMal/சங்கர்/ Pappu

TDH - Tall Dark Handsome :)

------
mvalarpirai/Raghav/Srivats

Thanks :) next part soon :))

-------
@G3
உங்களக்கு மட்டும் கதை தனியா அனுப்பி வைக்கிறேன்...ஓகே வா? ;)

-------
@Monicz

Thanks a lot Monicz...keep reading...
btw a TDH (Tall dark handsome) is really TDH (Too damn hot)...so it can be either ;)

ஜியா said...

:)) semaiya kalakirukeenga... waiting for the next..

TDH.... :(((

anbudan vaalu said...

superb narration....good plot too...

சிம்பா said...

நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... உங்கள் நினைவலைகளுக்கு உள்ளே வர எங்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்?