Wednesday, December 31, 2008

ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா! - 3

பகுதி 1
பகுதி 2

முன்குறிப்பு: இந்த பகுதியோட ஆ அ வ அ அ முடியுது…இதுவரைக்கும் அட்டென்டன்ஸ் போடாதவங்கெல்லாம் இதுல போடலாம் :)

---

ஒரு வாரம் ஆகியும், மூவர் கூட்டணி செய்த க்ரண்டு வொர்க்குல கார்த்தி எந்த வகைன்னே கண்டு பிடிக்க முடியல…அவன் க்ளாஸ்ல வேற பொண்ணுகளே இல்ல, ஒரு இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்றதுக்கு கூட ஆளில்லைன்னு அர்ச்சனா தினமும் ஒரே பொலம்பல் தான்…

அப்ப தான் ஒரு நாள், க்ளாஸுக்கு வெளியே…

சங்கீதா, “ஹாய் சுனிதா…பாக்கவே முடியறதில்லை…எப்டி போகுது கிளாஸ் எல்லாம்…” யாரோ சுனிதாவோட பேசிட்டு வந்துட்டு இருந்தா.

“அவ யாரு சங்கீதா?” ன்னு வளர்மதி கேக்க,

சங்கீதாவும், “அவ என்னோட பர்ஸ்ட் இயர் க்ளாஸ்மேட்…” ன்னு சாதாரணமா பதில் சொல்ல, உடனே அர்ச்சனாவுக்குள்ள ஒரு தீப்பொறி…

“ஹே…சங்கீதா…இப்ப நீயும் நானும் க்ளாஸ்மேட்ஸ்…ஆனா பர்ஸ்ட் இயர்ல நீயும் அந்த சுனிதாவும் க்ளாஸ்மேட்ஸ்…அதே மாதிரி பர்ஸ்ட் இயர்ல நானும் கம்ப்யூட்டர் சைன்ஸ் அனிதாவும் க்ளாஸ் மேட்ஸ்” ன்னு உளரிக் கொட்ட ஆரப்பிச்சுட்டா.

வளர்மதி, “ஆமா…நானும் E&I வனிதாவும் கூட தான் பர்ஸ்ட் இயர் க்ளாஸ்மேட்ஸ்…அதுக்கென்ன இப்போ? என்னவோ நீயே புதுசா இன்வென்ட் பண்ண மாதிரி சொல்ற?”


ரமணா படத்துல வர யூகிசேது ரேஞ்சுக்கு முகத்த வச்சுகிட்டு “ஹா ஹா ஹா…இன்வென்ட் தான் பண்ணிட்டேன்…இப்ப கார்த்தி க்ளாஸ்ல நோ பொண்ணுக…ஆனா, பர்ஸ்ட் இயர்ல??? எப்படி?”

“ஹே…ஆமால்ல…ஆனா அவங்க க்ளாஸ் மேட்ஸ் எந்த எந்த பொண்ணுங்கன்னு எப்படி கண்டுபிடிக்கறது?”

“ஹ்ம்ம்…அங்க தான் நிக்குறா நம்ம ராஜம்மா!!!” ராஜம்மா வேற யாரும் இல்ல, அவங்க காலேஜோட பாவப்பட்ட ப்ரின்சிபால் தான்!


“அட்டென்டன்ஸ் ஆர்டர் படி தான நம்மள செக்ஷன் பிரிச்சு போட்டாங்க? இஃப் அர்ச்சனா = அனிதா, சங்கீதா = சுனிதா, வளர்மதி = வனிதா…கார்த்திக் = என்ன? என்ன?”

“என்ன?” ரெண்டு பேரும் ஒன்னும் தெரியாம முழிக்க, அர்ச்சனா, “ஹய்யோ…கார்த்திக் = கவிதா…நம்ம கவிதா அக்கா!!!”

******
லேடீஸ் டைனிங் ரூம்…

அடுத்த கட்ட வேலையா மூவர் கூட்டணி கவிதா அக்காவ முற்றுகை இட்டாங்க…

வளர்மதி, “ஹே அர்ச்சனா! நம்ம எப்படி திடீர்ன்னு அவங்க கிட்ட போய் அந்த பையன பத்தி கேக்குறது?”

“எவ்வளவோ யோசிக்கறோம், இத கூட யோசிச்சு வைக்க மாட்டோமா? இட்ஸ் அ ஜிலேபி மேட்டர்…யாமிருக்க பயமேன்?”

“இப்ப எதுக்கு முருகர் டைலாக் எல்லாம் காபி அடிக்கற?”

“ஏன்னா, நமக்கு ஹெல்ப் பண்ணப் போறதே முருகப் பெருமான் தான?”

“என்னது?”

“முருகப் பெருமான் மீன்ஸ் கார்த்திகேயன்…” ன்னு விஷமமா சிரிச்சா அர்ச்சனா.

மெதுவா எல்லாரும் போய் கவிதா அக்கா பக்கதுல உக்காந்தாங்க…அர்ச்சனா உடனே, “ஹே வளர்…Do you know? In tamilnadu, 29% of the men are named Karthik…isn’t that interesting?” ன்னு பீட்டர் விடவும், அவ எதிர் பாத்த மாதிரியே கவிதா, “அப்படியா? எங்க அர்ச்சனா படிச்ச? But 100% true…எங்க க்ளாஸ்ல கூட இப்ப நாலு கார்த்திக்…”

’மீனு மாட்டிடுச்சு, இனி வலைய வெளிய இழுக்க வேண்டுயது தான் பாக்கி!’ ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே, “நாலு பேர் தானாக்கா? எங்க க்ளாஸ்ல மொத்தம் ஐஞ்சு பேர்…” என்னவோ அவளே பேர் வச்ச மாதிரி ரொம்பவே பெருமையோட அர்ச்சனா சொல்லவும்,

உடனே கவிதா, “இதாவது பரவாயில்ல…பர்ஸ்ட் இயர்ல வேற அட்டென்டன்ஸ் ஆர்டர் படி செக்ஷனா...”

(pause…இப்ப கவிதா பேசுறதுக்கு கொஞ்சம் பாஸ் போட்டுட்டு நம்ம மூவர் கூட்டணிய கவனிப்போம்…”கமான்…கமான், இத, இத தான் நாங்க எதிர்பாத்தோம்” ங்கற மாதிரி மூனு பேரும் ஒரே ரியாக்ஷன் :) )

இப்ப மீண்டும் கவிதா, “…அட்டென்டன்ஸ் ஆர்டர் படி செக்ஷனா? அப்ப எங்க க்ளாஸ்ல மொத்தம் எட்டு கார்த்திக்!!!”


“ஓஹ்…செம கன்ஃபூஷன் தாங்க்கா…ஆமா…அப்படீன்னா உங்களுக்கு மெக் கார்த்திக் தெரிஞ்சிருக்கனுமே…”

“ஆமா…அவனும் என் க்ளாஸ் தான்…அவன பத்தி எதுக்கு கேக்குற?”

“இல்ல…அவன் எங்கண்ணாவோட எதோ ஃப்ரெண்டு…அதான்…உங்களுக்கு ஃப்ரெண்டா அவரு?”

“ச்சே…ச்சே…ஃப்ரெண்டெல்லாம் இல்ல, க்ளாஸ் மேட்…அவ்ளோ தான்…அவன் ஒரு சரியான ஹெட் வெயிட் பார்ட்டி, பொண்ணுங்க கிட்டையே பேச மாட்டான்…”

Mission accomplished ரேஞ்சுக்கு அர்ச்சனா விட்டா பாருங்க ஒரு லுக்கு…சரி, சரி இனிமே தான கதையே இருக்கு!

******
பேகி மண்டையன் ஸார் க்ளாஸ், பர்ஸ்ட் பென்ஞ்


வளர்மதி, “சரி…அவன் கெத்து பார்ட்டின்னு கண்டுபிடிச்சாச்சு…அப்புறம்?”

அர்ச்சனா, “அப்புறம் என்ன? ரொம்ப ஈஸி தான்…நாம சங்கீதாவ அவனோட இந்த வாரமே பேச வைக்கப் போறோம்…”

சங்கீதா, “என்னது???”

“ஆமா…என்ன தான் கெத்து பார்ட்டி, சிடு மூஞ்சி, ரிஸர்வட் டைப் யாரா இருந்தாலும், அவங்கவங்களுக்குன்னு ஒரு வீக் பாயின்ட் இருக்கும்…அது தான் அவங்களோட ஆ.கோ…”

“என்னது? ஆ.கோ வா? என்ன சொல்ற? ஒன்னுமே புரியல…”

“இப்போ…என்னோட ஒரு சின்ன வயசு ஃபெரண்ட எடுத்துக்கோ…அவனுக்கு சாதாரணமா புதுசா பொண்ணுக கூட பேசுறதுல ஒரு தயக்கம்…ஆனா அவன் எழுதின கதைய பத்தியோ, இல்ல கவிதைய பத்தியோ யாராவது பேசினா பொண்ணு, பையன்னு வித்யாசமில்லாம சகஜமா பேச ஆரம்பிச்சுடுவான்…அதே மாதிரி, ஓடி ஒளியற சின்ன குழந்தைங்க கூட அவங்களுக்கு பிடிச்ச கார்டூன் பத்தியோ, இல்ல மிஸ் பத்தியோ பேச ஆரம்பிச்சா, அப்படியே வந்து நம்ம கிட்ட ஒட்டிக்குவாங்க… அதே மாதிரி தான், கார்த்திக்கும் ஒரு விஷயத்துல ஆர்வக் கோளாரு, அதவாது ஆ.கோ வா இருக்கான்…”

“என்ன விஷயம் அர்ச்சனா அது?”

“உங்களுக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா? பர்ஸ்ட் இயர்ல intra college fest அப்ப ஓடி ஒளிஞ்ச நம்மளை எல்லாம் பிடிச்சுட்டு வந்து fine arts competitions ல participate பண்ண வச்சாங்களே? நீங்க ரெண்டு பேர் மட்டும் தப்பிச்சு ஓடிட்டீங்க…”

“ஆமா..அதுக்கென்ன?”

“அதுல அந்த கார்த்திக்கும் இருந்தான்! அவன நீ காட்டின உடனே இவனை எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு ஒரு வாரமா மூளைய கசக்கி பிழிஞ்சு, நேத்து நைட் கனவுல தான் கண்டுபிடிச்சுட்டேன்….அடுத்த வாரம் intra college fest இருக்கு, அதுல fine arts ல Collage competition இருக்கு…கண்டிப்பா இந்த வருஷமும் அவனும் அதுல ஒரு ஆர்கைனைஸரா இருப்பான்…சோ, நம்ம போறோம்…அதுல கலந்துக்கறோம்…”

சங்கீதா, “அதெல்லாம் சரி…ஆனா… Collage னா என்ன?”

******
Fine arts club presents…
COLLAGE
Freak out with your freakiest designs and vibrant colours!!!


Collage நடக்குற ரூம்ல பல ஆ.கோ க்களின் நடுவே, ஆறு கண்கள் மாத்திரம் திரு திருன்னு முழிச்சுட்டு இருந்துச்சு.

சங்கீதா, “ஹய்யோ…கார்த்தி முன்னாடி என் மானம் போகப் போகுது…ஐடியா குடிக்கறேன்னு சொல்லி இப்படி கவுத்துட்டியே பாவி!!! எல்லாரும் எப்படி பண்ணி இருக்காங்க பாரு!!! நம்மளது பெக்கர் வாமிட் மாதிரி இருக்கு…” ன்னு ஒப்பாரியே வக்க ஆரம்பிச்சுட்டா.

அர்ச்சனா, “சரி, சரி…விடு, அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்…”

“வெளிய வாடி, உன்ன கொல்லாம விட மாட்டேன்…”

“சரி சரி…அதான் நம்ம இன்னும் பேர் எழுதலையே…வா இப்படியே ஓடிப் போய்டுவோம்…”

முனு பேரும் யாருக்கும் தெரியாம, மெதுவா ஒவ்வொரு அடியா வச்சு கதவு வரைக்கும் போய்ட்டாங்க.

“Excuse me…hello!! உங்கள தான்…என்ன பேர் எழுத மறந்துட்டு போறீங்க?”

ஹய்யோ போச்சுடான்னு திரும்பி பாத்தா, அவங்கள தடுத்து நிருத்தினது வேற யாரும் இல்ல…சாட்சாத் கார்த்திகே தான்.

உடனே அர்ச்சனா, “ஹீ ஹீ…வந்து…மறந்துட்டோம்…”

“வந்து உங்க பேரு, டிபார்ட்மென்ட், இயர் எல்லாம் பக்கத்துல நோட் பண்ணுங்க…இன்னும் கொஞ்ச நேரத்துல ரிஸல்ட்ஸும் சொல்லிடுவோம்…ஒரு டென் மினிட்ஸ் தான்…”

வேற வழியில்லாம மூனு பேரும் மறுபடியும் அவங்க செய்து வச்சிருந்த கொலாஜ் பக்கத்துல போய் நின்னாங்க.அர்ச்சனா, “சரி ஓகே…ஆனது ஆயிடுச்சு…நடந்தத நினைச்சு வீணா வருத்தப் படாம, இனிமே நடக்கப் போறத பாப்போம்…சங்கீதா! நாங்க ரெண்டு பேரும் இங்க பேர் எழுதிட்டு இருக்கோம்…நீ போய் அப்டியே அவனோட பேசிட்டு வந்துடு பாப்போம்…”

கோழி குண்ட முழுங்கின மாதிரி சங்கீதா, “என்னது?” ன்னு பேய் முழி முழிச்சா.

“இவ்ளோ பெரிய ஆப்பர்ச்சூனிடிய ஏற்படித்துக் குடுத்திருக்கோம்…இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?? போ…டைம் வேஸ்ட் பண்ணமா மரியாதையா போய் பேசு…”

“திடீர்ன்னு போய் என்னத்த பேசுறது?”

“போ…” ன்னு ரெண்டு பேரும் பிடிச்சு தள்ளவும், சங்கீதாவும் கொஞ்சம் தைரியத்த வரவழைச்சிட்டு, கார்த்திக் கிட்ட போய், “ஹாய்…”

“சொல்லுங்க…”

“இந்த காம்ப்டீஷனெல்லாம் எந்த பேஸில ஜட்ஜ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

இப்படி மொக்கைய போட்டதுக்கே சங்கீதா லிட்டர் கணக்குல வழிய, ’இவ என்ன சம்பந்தம் இல்லாம இத்தன கேள்வி கேக்குறா?’ ன்னு கார்த்திக்கும் குழம்ப அந்த கொலாஜ் இனிதே முடிந்தது! காம்பெட்டீஷனல அவங்களுக்கு ஒரு வழியா முதல் இடம் கிடைச்சது, கடைசியில இருந்து!

*****
கான்டீன்


மறுபடியும் ஒரு நாள் கான்டீல சங்கீதா கார்த்திக்க பாக்கறதுக்கும் முன்னாடி அர்ச்சனா பாத்துட்டு, “சங்கீதா! இப்ப போ, நான் சொன்ன மாதிரி உன்னோட கவிதையெல்லாம் காலேஜ் மேகஸீன்ல போட முடியுமான்னு போய் கேளு போ!!”

“அதான் சொன்னனே அர்ச்சனா…நான் எழுதியிருக்கறதெல்லாம் இங்கலீஷ்ல…தமிழ் மேகஸீன்ல எப்படி போடுவாங்க?”

“இதே கேள்விய போய் அவன்கிட்ட கேளு போ!!!”

இப்படியா ஒரு வழியா, சங்கீதாங்கற ஒரு பொண்ண கார்த்திக் மனசுல ரெஜிஸ்டர் பண்ணாங்க, இல்ல இல்ல, அப்படி பண்ணதா தான் நினைச்சுகிட்டு இருந்தாங்க. ஆனா அவன் மனசுல நல்லா ரெஜிஸ்டர் ஆனதென்னவோ…

******
சில நாட்களுக்கு பின்…


“சரி…எங்க எனக்கு ட்ரீட்? நான் குடுத்த ஐடியால நீ கார்த்திக் கிட்ட ரெண்டு தடவை பேசிட்ட…அவனும் உன்னை எங்கயாவது வெளிய பாக்கும் போது ஸ்மைல் பண்றான்…அப்புறம் என்ன? உடனே ட்ரீட் தான்…”

“ச்சே…போ அர்ச்சனா…அவனோட பேசாமையே இருந்திருக்கலாம்…”

“அடிப்பாவி! ஏன் இப்படி சொல்ற?”

“ஆமா…க்ரஷ் னா எப்பயுமே, தூரத்துல இருந்து வழியறது தான் நல்லா இருக்கு…அவனோட பேசும் போது comfortable லாவே இல்ல…அவன பாத்து ஸ்மைல் பண்றத விட, அவனுக்கே தெரியாம அவன தூரத்துல இருந்து பாக்கறது தான் எனக்கு பிடிச்சுருக்கு…”

“ஆக மொத்தத்துல ட்ரீட் இல்லைங்கற…சரி, சரி, வாங்க வீட்டுக்காவது கிளம்புவோம்…”

சங்கீதா, “இல்ல வளர்…நீங்க போங்க…எனக்கு லைப்ரரி போனும்…நான் மெதுவா வரேன்…”

பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்த படியே வளர்மதியும், அர்ச்சனாவும் எதோ ஒரு சிதம்பர ரகசியம் பேசிக்கிட்டாங்க…அது என்னன்னு கேப்போமா?

அர்ச்சனா, “உங்கிட்ட முதல்லயே சொல்லனும்னு நினைச்சேன் வளர்…சரி, இப்பயும் ரொம்ப லேட் இல்ல…”

“என்ன பீடிகை பலமா இருக்கு?”

“சொல்றத கேளு! நான் பாத்த வரைக்கும் உன் பேட்ச் மேட் பிரசன்னா, நம்ம க்ளாஸ்லையே வச்சு, உன்கிட்ட மட்டும் தான் பேசுறான். வேற எந்த பொண்ணு கிட்டையும் அவன் பேசிப் பழகறது இல்ல…அதுக்கு அவனுக்கு கொஞ்ச நாள் ஆகும்…அவன் எல்லா பொண்ணுககிட்டையும் பாகுபாடில்லாம சகஜமா பேசிப் பழகற வரைக்கும் நீ அவன்கிட்ட ஒரு லிமிட்டோட தான் பேசனும்…”

“லிமிட்டில்லாம அப்படி என்னத்த நான் பேசிடப் போறேன்?”

“அப்படியில்ல வளர்…நீ சாதாரணமா உன்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுற மாதிரி அவனோட பேசி, அப்புறம் போகப் போக அவன் மேல அக்கறை காட்ட ஆரம்பிச்சன்னு வை…அதையே அவன் தப்பா எடுத்தக்க கூட வாய்ப்பு இருக்கு…அதுக்கு தான் சொல்றேன்…அவன் எல்லாரோடையும் நல்லா பழகுற வரைக்கும், இல்ல உனக்கு அவன் மேல முழு நம்பிக்கை வர வரைக்கும், நீ அவனோட எப்பயுமே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணிக்கறது தான் உனக்கும் நல்லது, அவனுக்கும் நல்லது!"

*****
லைப்ரரி


லைப்ரரிக்கு ப்ராஜக்ட் விஷயமாக வந்த கார்த்திக் அப்ப தான் தனியா லைப்ரரில சுத்திட்டு இருந்த சங்கீதாவ பாத்தான், “ஹாய் சங்கீதா! என்ன லைப்ரரி பக்கம்?”

“சும்மா புக்ஸ் ரிடர்ன் பண்ணலாம்னு…”

“எப்பயும் மூனு பேரா சுத்திட்டு இருப்பீங்க… அர்ச்சனா, அப்புறம் அந்த கண்ணாடி போட்ட பொண்ணு், அவங்கெல்லாம் எங்க?”


“அவங்க ரெண்டு பேரும் இப்ப தான் வீட்டுக்கு கிளம்பினாங்க…”

“ஓஹ்…சரி, ஓகே தென்…எனக்கு ஒரு முக்கியமா வேலை இருக்கு…பை…”

வேக வேகமா கார்த்திக் ஓடவும், சங்கீதா, ’என்ன இவன்? இப்ப தான லைப்ரரிகுள்ள வந்தான்? திடீர்ன்னு வேலை இருக்குன்னு ஓடிட்டான்? ’

******
பஸ் ஸ்டாப்


வளர்மதி, “ஹே அர்ச்சனா! இது வரைக்கும் எத்தன அட்வைஸ் சொல்லி இருக்கேன்னு எண்ணவே இல்லப்பா…இந்த ஒரு மாசத்துல மட்டும் எத்தனை அட்வைஸ்? அப்ப ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து நீ மொத்த க்ளாசுக்கும் சொன்னத கணக்கு போட்டா ஆயிரம் அட்வைஸ் வந்திடும் போல!!!”

ஆனா அர்ச்சனா பதில் எதுவும் சொல்லமலேயே இருக்கவும், வளர்மதி, “ஹலோ…என்ன பயங்கரமா திங்க் பண்ணிட்டு இருக்க?”


“அதில்ல வளர்…இந்த ஒரு மாசம் எப்படி போச்சுன்னே தெரியலைல்ல? க்ளாஸ் எல்லார் கிட்டயும் என்ன தான் சிரிச்சு பேசி, ஃப்ரெண்ட்லியா பழிகினாலும், உன்னையும் சங்கீதாவையும் பாக்கும் போது, ச்சே எனக்கு இந்த மாதிரி ’எனக்கே எனக்குன்னு’ ஃப்ரெண்ட்ஸ் இல்லையேன்னு தோனும்…ஆனா இந்த ஐடியா அது இதுன்னு ஒரு மாசமா உங்க கூடயே சுத்திட்டேன்…ஆனா…இனிமே…”

“அர்ச்சனா…ஃபீலிங்ஸ கன்ட்ரோல் பண்ணு, சென்டிமென்ட்ட கட் பண்ணு! ஹே…இப்ப மட்டும் இல்ல, எப்பயுமே நீயும் எங்களுக்கு ஃப்ரெண்ட் தான்! இனிமே உனக்கும் ஃபெவிகால் வாங்கிக் குடுக்கறோம்..கவலைப்படாத…”

அர்ச்சனா இதுக்கு பதிலா ஒரு அழகான புன்னகைய உதிர்க்கவும், வளர்மதி, “இதுக்கு நீ ஆனந்த கண்ணீர் இல்ல வடிக்கனும்? இப்படி புன்னகை பூவே மாதிரி போஸ் குடுத்தா என்ன அர்த்தம்?”

“ஹே…நான் அதுக்கு சிரிக்கல…கார்த்திக்க பாத்து சிரிச்சேன்…உன்கிட்ட சொல்லவே இல்லயே…கார்த்திக்கும் என் பஸ்ஸ்டாப் தான்…இத்தன நாள் எனக்கு தெரியவே இல்லை…இப்ப ஒரு வாரமா தான் பஸ்ஸ்டாப்புல ரெகுலரா பாக்குறோம்…அப்படி பாக்கும் போதெல்லாம் ஒரு சின்ன ஸ்மைல்…”

அர்ச்சனா பேசி முடிக்கறதுக்கு முன்னாடி கார்த்திக் அவங்க பக்கத்துல வந்துட்டான். இவன் என்ன பேசப் போறான்னு அர்ச்சனா முழிக்க, கார்த்திக் எந்த தயக்கமும் இல்லான, “என்ன அர்ச்சனா, இன்னிக்கு காலைல 12 c ல வரல போல இருக்கு? நான் உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணி பாத்தேன்…”

கார்த்திக் கேளியன் கணக்குல வழிய, அர்ச்சனா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்க, வளர்மதி அவள மொறைக்க அதுக்குள்ள பஸ் வந்துடுச்சு.
பஸ்ஸுக்குள்ள ஏறினதும் வளர்மதி, “என்னதிது? இவன போய் கெத்துப் பார்ட்டின்னு சொன்னாங்க? இந்த வழி, வழியறான்? பாரு இப்ப, பின்னாடி நின்னுட்டு உன்னையே தான் பாத்துட்டு இருக்கான்…நீ என்ன பண்ணித் தொலைச்ச?”

“நான் ஒன்னுமே பண்ணல வளர்…ஏதோ தெரிஞ்சவனாச்சேன்னு சொல்லி, லைட்டா, ஃபெரண்ட்லியா ஸ்மைல் பண்ணேன்…வேற எதுவும் பேசினது கூட இல்ல…”

“அட லூசே! இவ்ளோ பேருக்கு அட்வைஸ் சொல்றியே…தேவையில்லாம அவ்வளவா பழக்கமில்லாதவங்கள பாத்து சிரிக்கக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”

“இவன் இப்படி பண்ணுவான்னு எனக்கெப்படி தெரியும்? அவனுக்கு என் பேர் தெரியும்ன்னு கூட எனக்குத் தெரியாது…”

“ஒரே ஒரு தடவை அந்த கொலாஜ்ல பாத்ததுக்கு, அவன பாத்து சிரிக்கனுமா? எதுக்கு இந்த வேண்டாத வேலை? ஒரு பொண்ணு பின்னாடி சுத்துற பையன் கிட்ட போய், ’ஏன்டா இப்படி பண்றேன்னு’ யாராவது கேட்டா, ’நான் ஒன்னும் பண்ணல…அந்த பொண்ணு தான் முதல்ல என்னை பாத்து சிரிச்சான்னு’ தான் சொல்லுவாங்க…”

[அ அ அ அ]
அப்படியே அடங்கிட்டா அட்வைஸ் அர்ச்சனா

இருங்க, இருங்க இன்னும் முடியல….
அ இ பு வா! (அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!)

Friday, December 26, 2008

ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா! - 2

பகுதி 1

முன்குறிப்பு:
இந்த கதையில (?!?!?) இடாலிக்ஸ், நீல வண்ணத்துல இருக்கறது எல்லாம், குமுதம் சிநேகிதில இருந்த அட்வைஸ், என்னோட வார்த்தைகளில்…

----

“சொல்லு அர்ச்சனா, சொல்லு…” இது தான் அர்ச்சனாவுக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை! வளர்மதி இப்படி கேக்கவும் அர்ச்சனா முகத்துல ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.

“ஹுக்கூம்…வேற வேலை இல்ல இவளுகளுக்கு…” இப்படி பழிச்சிட்டு முகத்த திருப்பி வச்சுகிட்டது வேற யாரும் இல்ல, சங்கீதா தான்!

“இத பாரு வளர், இதெல்லாம் ஒரு ஜீன்ஸ் ப்ராபளம். இப்ப நாமெல்லாம் ஒருதங்கள பாத்தோம்னா, அவங்க மூக்கு நீளமா, சப்பையா…அவங்க கண்ணு யானைக்கண்ணா, இல்ல பூனைக்கண்ணா… அவங்க என்ன ட்ரெஸ் போட்ருந்தாங்க, ஏன் அவங்க என்ன தோடு போட்ருந்தாங்கங்கற வரைக்கு ஒரு நிமிஷத்துலையே பாத்துருவோம். மனுஷ முகங்கள, முகபாவங்கள புரிஞ்சிக்கற தன்மை பிறப்பிலேயே பொண்ணுகளுக்கு அதிகம்…ஆனா நம்ம பசங்களுக்கு பொதுவாவே அந்த தன்மை குறைவு!”

“சரி அர்ச்சனா, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இரு, இரு மேட்டருக்கு வரேன்…இந்த மாதிரி இருக்கறதால, பொதுவாவே ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளக் காட்டிலும் ’ஸோஷியல் ஷைனஸ்’ என்கிற சமூகக் கூச்சம் அதிகம்…ஆனா அதெல்லாம் வளர வளர சரியாயிடும், ஏன்னா நம்மள விட பசங்க அதிக இடங்களுக்கு போறாங்க, பரிட்சையமில்லாத பல பேரோட பேசி பழகறாங்க…அதனால் பொதுவாவே வளந்தப்புறம் அவங்க பொண்ணுகள விட அதிக சோஷியல் டைப்பா மாறிடறாங்க…ஆனா அதெல்லாம் அவங்க வட்டத்துக்குள்ள மட்டும் தான். “
“எத்தனையோ வீட்ல அன்னிய மனுஷங்க விருந்தாளியா வீட்டுக்கு வந்த உடனே உள்ள ஓடி ஒளியற ஸ்கூல், காலேஜ் பசங்கள நம்மளே பாத்திருக்கோம்….ஆனா பொண்ணுக அந்த மாதிரி ஓட மாட்டாங்க, யாரா இருந்தாலும் வாங்க, உக்காருங்கன்னு ஆரம்பிச்சு நல்லா வள வளன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க!”

“ஆமா, நான் கூட அந்த மாதிரி பசங்கள பாத்திருக்கேன்…ஏன் சங்கீதா தம்பியே முன்னாடி எல்லாம் நான் அவங்க வீட்டுக்கு போனா ஒரு ரூமுக்குள்ள போய்ட்டு வெளிய வரவே மாட்டான்…ஆனா இப்பெல்லாம் தலைக்கு மேல ஏறி உக்காறாத குறை தான்…”
“கரெக்டு! ஒரு வயசு வந்தா, இல்ல நல்லா பழகிட்டா அவங்களுக்கு அந்த கூச்சம் எல்லாம் போய்டும், ஆனா அது வரைகும் மூணு வகையான பசங்கள நம்ம பாக்கலாம். பொன்னுகளோட பேசுறத ஒரு விஷயமாவே நினைக்காம எல்லார்கிட்டையும் சகஜமா பழகறவங்க ஒரு வகை… பொண்ணுகளோட பேசனும்னு ஆசை இருக்கும்/இல்ல இருக்காது, ஆனா பொண்ணுகளோட பேசுறதுக்கே ஒரு பயம், கூச்சம், இது ரெண்டாவது வகை…மூனாவது வகை நம்ம மெளனம் பேசியதே சூர்யா மாதிரி, பொண்ணுகளோட பேசுறதே ஒரு தப்பு, தேவையில்லாத விஷயம்ன்னு சொல்லிட்டு திரியறவங்க!”

“ஓஹ்ஹ்…”

“இதுல முதல் வகை, அவங்க நம்ம டிஸ்கஷன்லயே இல்லை. ரெண்டாவது வகை, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்த வகை தான் அந்த பிரசன்னா…”

“ஏன் அவன் மூனாவது வகையா இருக்கக் கூடாது?” அதுவரைக்கு கம்முன்னு கேட்டுகிட்டு இருந்த சங்கீதா தான் இப்படி கேட்டது.

“எல்லாம் ஒரு கெஸ் தான்…அவன பாத்தா அப்படி தெரியல…அது மட்டுமில்லாம கெத்து காட்றதுக்கும் ஒரு மொகறக்கட்டை வேணும், அதெல்லாம் அந்த கேனப் பிரசன்னாவுக்கு கிடையாது…இந்த மூனாவது வகை பசங்க இருக்காங்களே, அவங்களால நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா பசங்க தான் அவங்க கிட்ட ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்…”

“பசங்களா? என்ன அர்ச்சனா சொல்ற?”

“ஆமா, அவங்க பொண்ணுக கிட்ட பேசாம இருக்கறது மட்டுமில்லாம, அவங்ககூட சுத்தற பசங்களோட கடலை ஆசையக் கூட தீய வச்சுருவாங்க…ஆனா அவங்க மட்டும் யாருக்கும் தெரியாம, மெளனம் பேசியதே சூர்யா மாதிரி திரிஷா, திரிஷா போனா லைலான்னு யாரையாவது ஒரு சூப்பர் ஃபிகரா பாத்து கரெக்ட் பண்ணி நீட்டா செட்டில் ஆய்டுவாங்க!!!”

“சரி, அவங்கள பத்தி நமக்கெதுக்கு? நம்ம சப்ஜெக்ட் இப்ப ரெண்டாவது வகை தான? அதப் பத்தி சொல்லு…”

“முதல்ல நம்ம சப்ஜெக்ட்டுகளுக்கு இருக்கற பிரச்சனை என்னன்னு பாப்போம்…பொதுவாவே சின்ன வயசில் இருந்து அதிக பெண்களோடு பேசிப் பழகாத நம்ம சப்ஜெக்ட்டுகளுக்கு, டீன் ஏஜ்ஜுல இது ஒரு பெரிய பிரச்சனையா இருக்கும். ஒரு பொண்ண பாத்தா, அவளோட சகஜமா பேச முடியாம, வார்த்தை தடுமாறி, அவனே என்ன பேசறதுன்னு முழிச்சுகிட்டு இருக்கும் போது, உன்னை மாதிரி பொண்ணுக போய், மூச்சு விடாம, மூனு நிமுசத்துல மூன்னூரு வார்த்தை பேசினா, அவ்ளோ தான்…உங்க பேச்சு வெள்ளத்திலையே அவன் திக்கு முக்காடி போய்டுவான்…”

“சரி, அதான் அப்பயே சொன்னியே…ஏ ஒன் பெளடர் போட்டு விளக்கறத விட்டுட்டு மேட்டருக்கு வா அர்ச்சனா!”

“இரு, இரு…ஸோ, அந்த மாதிரி பசங்கள பாக்கும் போது முக்கியமா ஒரு விஷயம் பண்ணனும். அதாவது அவங்க வெட்க உணர்வை மதிக்கனும்! அத நாம கண்டுக்காத மாதிரி இருந்து அவங்களுக்கு தைரியம் குடுக்கனும்…ஏன்னா, நம்ம ஊர்ல வேற, ’ச்சீ, ச்சீ ஒரு பையன் போய் வெட்கப்படறதா? பசங்கன்னா அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும்’ ன்னு தான் பல சட்டம் இருக்கே…அதனால் நம்ம சப்ஜெக்ட்டுகள் எல்லாம் பொதுவா, ’ஹய்யோ நம்ம வெட்கப்படறத இவ வேற கண்டுபிடிச்சுட்டா, கேவலமா நினைப்பாளோ?’ இப்படி யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க…”

“ஹ்ம்ம்…அப்டியே கண்டுக்காம விட்றனும்…”

“ஆமா…அது மட்டுமில்ல, நம்மளும் ரொம்ப கூச்ச சுபாவம் மாதிரி காட்டிக்கனும்…அவங்கள நேருக்கு நேர் பாத்து பேசக் கூடாது, சத்தமா பேசாம, நம்மகே கேக்காத மாதிரி தான் பேச ஆரம்பிக்கனும்…அப்ப நம்ம தலைவர் என்ன நினைப்பாருன்னா, “ஹை! இவ நம்மள விட ஷை டைப்பா இருக்காளே!! இவளுக்கு நம்மளே தேவலாம்…” இப்படி அவங்க கான்ஃபிடன்ஸ பூஸ்ட் குடுத்து வளத்தோம்ன்னா, தலைவரே தைரியமா வந்து கான்வெர்ஸேஷன ஆரம்பிப்பாரு!!!”

“ஒஹ்ஹ்…அப்ப நானும் இனிமே ரொம்ப கூச்ச சுபாவம் மாதிரி போஸ் குடுக்கனுமா? ஓகே…”

சங்கீதா, “ஹலோ! எங்க, அந்த கூச்ச சுபாவம் மூஞ்சிய கொஞ்சம் இப்படி காட்டு! அந்த பிரசன்னாவுக்கு கண்ணு இருக்கில்ல? இத்தன நாளு இவ அடிச்ச லூட்டிய பாக்கமையா இருந்திருப்பான்? இவ ஒரு நிமிசத்துல ஒன்றரை கிலோ வார்த்தைய உதிர்ப்பான்னு தான் இந்த ஊருக்கே தெரியுமே!”

அர்ச்சனா, “இல்ல சங்கீதா...போன செமெஸ்ட்டர்ல இருந்து தான நாம எல்லாரும் டிபார்ட்மெண்ட் படி ஒரே கிளாஸ்ல இருக்கோம்? எப்ப பாரும், நீயும் வளர்மதியும், ஒட்டி வச்ச மாதிரி ஒன்னாவே சுத்திட்டு இருக்கறதுல, நீங்க எந்த பையன் கிட்டையாவது ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசி இருக்கீங்களா? அப்படியே வளர்மதி நல்லா பேசுற பசங்கன்னு நம்ம கிளாஸ்ல பாத்தா, எல்லாரும் அவ ஸ்கூல் மேட்ஸ்…சோ, அவளுக்கு புதுசா பாக்குற பசங்களோட பேசுறதுக்கு கூச்ச சுபாவம்ன்னு கூட அவன் நினைச்சுகலாம்ல?”

வளர்மதி, “வெல் செட் அர்ச்சனா, நீ கன்டின்யு பண்ணுமா…”

“அவ்ளோ தான் வளர்மதி! அவனா கூச்சம் போய் உன்கிட்ட பேசுற வரைக்கும் அவனோட நீயும் அவ்வளவா பேசாத, நேருக்கு நேர் பாக்காத, தலைய திருப்பி வச்சுக்கோ, இல்ல குனிஞ்சு வச்சுக்கோ…அப்புறம் பாரு, அவனாவே ஒரு நாள் பேச ஆரம்பிப்பான்…”

சங்கீதா, “சரி, அப்படியே அவன் பேச ஆரம்பிச்சுட்டான்னு வச்சுப்போம்…இவளால எத்தன நாளைக்கு ஊமை வேஷம் போட முடியும்? இவ வளர்மதி இல்ல, வளவளமதின்னு தெரிஞ்சப்புறம் ஆப்போஸிட் சைட்ல எகிறி குதிச்சு ஓடிட்டான்னா?”

“அங்க தான் நீ தப்பு பண்ற…பசங்க யாரையாவது ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டா அப்புறம் என்ன நடந்தாலும் அவங்கள விட மாட்டாங்க…அது மட்டுமில்லாம, நிறைய பேத்துக்கு துருதுருன்னு இருக்கற பொண்ணுகள ரொம்பவும் பிடிக்குமே…”

ரெண்டு வாரங்கள் கழித்து…

“ஹேய் வளர்…நாளைக்கு வரும் போது அந்த பிரண்ட் அவுட் மறந்துடாத…” இப்படி கத்தினது வேற யாரும் இல்ல, சாட்சாச் நம்ம சப்ஜெக்ட் கே.பிரசன்னாவே தான்!

சங்கீதா, “என்னது? வளர் ஆ?? அடிப்பாவி? ஜஸ்ட் நாலு லேப் ஸெஷன்ஸ்ல எப்படி இதெல்லெல்லாம்?”

“அ அ அ அ தான்…”

“என்னது இது புதுசா இருக்கு?”

“அர்ச்சனா அள்ளித்தெளித்த அற்புத அட்வைஸ்…சரி வா, வீட்டுக்கு கிளம்புவோம்…”

பஸ் ஸ்டாப்ல மீண்டும் அர்ச்சனா…

வளர்மதி “ஹேய் அர்ச்சனா! நீ சொன்ன மாதிரியே, ரெண்டு வாரத்துல அவனா கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பிச்சு, இப்ப ஒரளவுக்கு நல்லாவே பேசுறான்…”

அர்ச்சனாவும், வளர்மதியும் தங்களோட வீரப் பிராதபங்கள பத்தி ஒயாம பேசிட்டு இருக்க, சங்கீதா மட்டும் முகத்த அந்த பக்கம் திருப்பிகிட்டா.
அதை கவனிச்ச அர்ச்சனா, “ஏய் சங்கீதா! ஏன் முகத்த திருப்பிகிட்ட? இப்பயும் உனக்கு இந்த டிஸ்கஷன் பிடிக்கலையா?”

“அதில்லப்பா…அந்த பக்கம் ஒரு பொறுக்கி, ரொம்ப நேரமா மொறைச்சு மொறைச்சு பாத்துகிட்டே இருக்கான்….”
“ஹே…ஹே திரும்பி பாக்காத, லூசு…”

“எங்க அவன்?”

“திரும்பி பாக்காதன்னு சொல்றேன்ல?”

“இத பாரு சங்கீதா…ஒருத்தன் உன் விருப்பதுக்கு விரோதமா உன்ன பாத்தா, முகத்த திருப்பி எந்த பிரயோஜனமும் இல்ல…நீயும் அவன மொறைச்சு பாக்கனும்…”

“என்னது???”

“ஆமா! நீயும் அவன நேருக்கு நேர் பாக்கனும்! நீ பாக்குற பார்வையிலையே ’போதும்டா, அடங்கு! தோலை உரிச்சுடுவேன்…’ ன்னு அவனுக்கு புரியனும்…”

“ஹ்ம்ம்…இது கூட சென்ஸிபிலாத் தான் இருக்கு…ஹே அர்ச்சனா! நிஜமாவே உன் அட்வைஸ் எல்லாம் அற்புதம் தான்…”

வளர்மதி, “ஹய்யோ…சங்கீதா, நீயா இப்படி சொல்ற? இன்னிக்கு மழை தான் போ…”

உடனே சங்கீதா, “அர்ச்சனா…அப்படியே எனக்கும் ஒரு அட்வைஸ் வேணும்ப்பா…”

“ஹ்ம்ம் சொல்லு சங்கீதா…”

“வந்து….வந்து…இந்த கார்த்திக் இருக்கானே, மெக்கானிகல் டிபார்ட்மெண்ட, பைனல் இயர்…”

“யாரு அவன்? எனக்குத் தெரியாதே…அவனுக்கு என்ன இப்ப?”

“வந்து…நான் ரொம்ப நாளா அவன சைட் அடிச்சிகிட்டு இருக்கேன்…”

“அதுக்கு???”

“நான் அவனோட ஒரு ரெண்டு வார்த்தை பேசிப் பழகனும், அவ்ளோ தான்…அதுக்கு மேல எதுவும் வேண்டாம்…அதுக்கு எதாவது ஐடியா குடு அர்ச்சனா…ப்ப்ளீஸ்ஸ்ஸ்…”

வளர்மதி, “இது ஓவரா இருக்கு சங்கீதா…வேணாம்….வீண் வம்பு….”

“ஹேய்…நான் என்ன சொல்லிட்டேன்? அவனோட சும்மா பேசிப் பழகனும்னு தான சொல்றேன்? நானும் எவ்ளோ நாள் தான் அவன தூரத்தில இருந்தே பாக்குறது? கொஞ்சம் கிட்டக்க இருந்து பாக்கனும், பேசனும்ன்னு ஆசையா இருக்குப்பா…அர்ச்சனா…ஹெல்ப் நோ!”

அர்ச்சனா, “சரி….ஓகே…ஓகே…அட்வைஸ பொறுத்த வரைக்கு நான் எப்பயுமே பாரி வள்ளல் தான்…யூ டோன்ட் வொரி…இப்ப அந்த பையன், அவன் பேரு என்ன சொன்ன? ஹாங்…கார்த்தி, அவன் எந்த கேட்டகரின்னு முதல்ல நம்ம கண்டுபிடிக்கனும், இப்ப இந்த சப்ஜெக்ட்டுக்கு நம்ம சில க்ரண்டு வொர்க்ஸ் பண்ணனும்…” ஏதோ ஒரு பெரிய பிராஜக்ட்டுக்கு வேலை பண்ணனும்ங்கற மாதிரி தீவிரமா அர்ச்சனா சொல்லவும்,

சங்கீதா, “அர்ச்சுமா…டோன்ட் சே சப்ஜெக்ட்…அழகா கார்த்தின்னு சொல்லு…”

இது தான் சாக்குன்னு வளர்மதியும், “ஹய்யே வழியுது…தொடச்சுக்கோ…” ன்னு அவள ஓட்ட ஆரம்பிச்சுட்டா.

“சரி சரி…ஓகே..கார்த்தி…இதுல முதல் ஸ்டெப் என்னன்னா, அவன் எந்த கேட்டகரி பையன்னு கண்டு பிடிக்கறது…”

சங்கீதா, “அவன் கண்டிப்பா முதல், இல்ல மூனாவது கேட்டகரியாத் தான் இருப்பான்…”

வளர்மதி, “நீ ரொம்ப பேசுற…கொஞ்சம் அடங்கு…”

அர்ச்சனா, “தாட் ப்ராஸஸ நடுவுல பூந்து டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா…முழுசா கேளுங்க…
முதல் ஸ்டெப் முடிஞ்சவுடனே, அடுத்த கட்டம்…அது தான் கொஞ்சம் ட்ரிக்கியானது…அவனோ ஃபைனல் இயர்…அதுவும் நமக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத மெக் டிப்பார்ட்மென்ட்…அப்படி இருக்கும் போது, அவனப் பத்தி தெரிஞ்சாலும், எப்படி போய் அவன் கிட்ட பேசறது?”

சங்கீதா, “என்னது? ரெண்டாவது ஸ்டெப்புலையே பேசப் போறோமா?”

“போறோம் இல்ல…பேசப் போற…அதுக்கு தான் சொன்னேன்…முதல் ஸ்டெப், அதாவது க்ரண்டு வொர்க்…அது ரொம்ப ரொம்ப முக்கியமானது…” அர்ச்சனா டி.வி ஆங்கர் மாதிரி எஃபெக்ட் குடுக்கவும், சங்கீதா, “அதுக்கு என்ன ஐடியா, சொல்லு அர்ச்சனா…”

“அது மட்டும் தான் எப்படின்னு எனக்கு தோனவே மாட்டேங்குது…”

“தூஊஊ…இதுக்கு தான் இந்த பில்ட்டப்பா?”

“ஜாரி…கொஞ்சம் ஓவர் பில்டப்பு ஆயிடுச்சு…இருந்தாலும் நான் கண்டு பிடிக்கறேன்…எடுத்த காரியத்த ஜெயமா முடிப்பேன்…” அர்ச்சனா சூழுரைக்கவும், பஸ் வரவும் சரியா இருந்துச்சு.

“எனக்கு பஸ் வந்துடுச்சு…இத பத்தி நாளைக்கு பேசுவோம்..பை பை…”

[அ அ அ அ]
அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…

Monday, December 22, 2008

ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா!

முன்குறிப்பு!!!
“அவளை பார்த்ததும் பேச வார்த்தைகள் தேடி தடுமாறி தவிப்பென்னும் கடலில் சிக்கித் தத்தளித்தான்...” இப்படி பசங்களோட பீலிங்கஸ்ஸ அநியாயத்துக்கு எல்லா ப்ளாகுளையும் போட்டுத் தாக்கி இருக்கோம். நம்ம ஹீரோ ஒரு பொன்னுகிட்ட பேசனும்னு நினைக்கறதும், அதுக்கு நண்பர்கள் அட்வைஸ் குடுக்கறதும், இது போல நிறைய படிச்சாச்சு.
ஆனா, பொண்ணுங்க அதே போல நினைச்சா? அந்த மாதிரி ஒரு கதையையோ, பதிவையோ போடனும்ன்னு ரொம்ப நாளா ஒரு எண்ணம் எனக்குள்ள புகைய ஆரம்பிச்சது, சமீபத்துல குமுதம் சிநேகிதியில ஒரு கட்டுரைய படிச்சதும் அந்த எண்ணம் குபுக்குன்னு பத்தி எறிய ஆரம்பிச்சுடுச்சு :) அதன் தழுவல் + சொந்த கற்பனை தான் இந்த முயற்சி! படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

பகுதி 1

“ஹாய் அர்ச்சனா!” சங்கீதாவும் வளர்மதியும் கோரஸா அர்ச்சனாவுக்கு ஒரு ஹாய் சொன்னாங்க.

“ஹாய்…”

“என்ன கிளாஸ்ல செம தூக்கம் போல? பாக்கவே சரி காமடியா இருந்துச்சு! ஆனா அதெப்படி ஒரு நாள் கூட நீ ஸ்டாஃப்ஸ் கிட்ட மாட்டினதே இல்ல?”

“எப்பயுமே, முதல் பென்ச்சுல உக்காந்து நல்லா நோட்ஸ் எடுக்குற மாதிரி ஆக்ட் குடுக்கனும், எழுதறதுக்கு எதுவும் இல்லன்னா கூட, எதாவது நோட்ல கிறுக்கி வைக்கனும்…இப்படி சில க்ளாஸ்ல சீனப் போட்டா போதும், அதுக்கப்புறம் தூக்கம் வரும் போது தூங்கிக்கலாம்…பசிக்கும் போது சாப்டுக்கலாம்…என்ன வேணா பண்ணலாம்…மாட்டவே மாட்டோம்…”

“ஆ அ அ அ…”
வளர்மதி ஏதோ ஆ அ ன்னு சொல்ல, அத கேட்ட உடனே சங்கீதாவும் சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

அர்ச்சனா “என்ன ஆ ஆ? யெஸ்.ஜே சூர்யா படம் மாதிரி எதையோ சொல்ற, அதுக்கு அவளும் சிரிக்கறா?”

“ஆ ஆ இல்ல…ஆ அ அ அ…அப்டின்னா, ஆரம்பிச்சிட்டாடா அர்ச்சனா அட்வைஸ அள்ளித்தெளிக்க!”

“போங்க போங்க…ஒரு நாள் அட்வைஸ் வேணும்ன்னு ரெண்டு பேரும் என்கிட்ட வந்து நிக்கத் தான் போறீங்க…அப்ப பாத்துக்கறேன் உங்கள…”


*******

“மினி ப்ராஜட்ட செய், மைக்ரோ ப்ராஜட்ட செய்ன்னு போர் அடிக்கறாங்கப்பா…வாரத்தில ஒரு நாள் ஃபுல்லா இதுக்கே போகுது!”

வளர்மதி இவ்வளவு நீளமா சலிச்சுகிட்டாலும், பிரசன்னாகிட்ட இருந்து தலையை நிமிர்த்தாம, ஏன் வாயக் கூட திறக்காம “ஹ்ம்ம்…” ன்னு மட்டும் தான் பதில் வந்துச்சு. வேற என்ன கேள்வி கேட்டாலும், இதே போல பதில் தான். அதுக்கு மேல வளர்மதியும் அவனோட எதுவும் பேசல. இப்படியே மூணு மணி நேரம் போச்சு.

வளவளன்னு நிறுத்தாம பேசுறது தான் வளவளமதி சாரி, வளர்மதியோட கேரக்டர். ஆனா அவளுக்கு அந்த வருஷம் வாச்ச ப்ராஜட்மேட் பிரசன்னா காசு குடித்தா கூட பேச மாட்டான் போல! அவளும் எத்தன நேரம் தான் இப்படி போர் அடிச்சுகிட்டு ஒரு இன்டராக்ஷனே இல்லாம ப்ராஜக்ட்ட பண்ணி முடிக்கறது? எப்படியும் ஒரு மூணு மாசம் இவனோட தான் ஓட்டியாகனும். பொதுவா இந்த பையன கிளாஸ்ல பாத்ததுல மத்த பசங்களோட எல்லாம் நல்லாத் தான பேசுவான், அப்புறம் ஏன் இப்படி முழுங்கி முழுங்கி பேசுறான் நம்ம கிட்ட மட்டும்னு வளர்மதிக்கு மண்டைய பிச்சுக்காத குறை தான்.

*******

“வாவ்!!! இன்னிக்கு செம ஸ்மார்ட்டா இருக்கானே! என்னமா நடக்கறான்…நடக்கறது கூட செம ஸ்டைலா இருக்கு…ஹாய் ஹான்சம், ஹாய் ஹான்சம் ன்னு எழுந்து பாடலாம் போல இருக்கே…” நல்ல வேளையா சங்கீதா டீ குடிச்சுகிட்டு இருந்ததால, அவ வாயில இருந்து வழிஞ்சத டீன்னு அப்பாவியா நினைச்சுகிட்டா அவ எதிர்ல உக்காந்திருந்த வளர்மதி.

’இந்த பாழாப்போன டீ வேற முடிஞ்சிருச்சு, இவளும் தின்னு முடிச்சிட்டா!!!’
“வளர்…இன்னொரு ஐஸ்க்ரீம் சாப்டறையா? நான் வேணா வாங்கி குடுக்கறேன்…” சங்கீதா கொஞ்சும் குரல்ல கேக்கவும், வளர்மதி, “என்ன விஷயம்? காரணமில்லாம நீ இப்படி வலிய வந்து ஸ்பான்ஸர் பண்ண மாட்டியே??” ன்னு சொல்லிட்டே காண்டீன சுத்தி முத்தி பாக்கவும் தான் தெரிஞ்சுது, அப்ப தான் கான்டீனுக்குள்ள நுழைஞ்ச கார்த்திக் கவுண்டர்ல நின்னு எதையோ வாங்கிட்டு இருந்தது!!!

“ஓ…அதானா விஷயம்…போதும் ஊத்தினது…வா போலாம்…”

“வளர் உனக்கு இரக்கமே இல்லையா?”

“இல்ல…வா முதல்ல”

“ஹ்ம்ம் இன்னும் ஒரே ஒரு செமெஸ்டர் தான் இருக்கு!” ன்னு பெருமூச்சு விட்டுகிட்டே சங்கீதா சொல்லவும், வளர்மதி, “அவனுக்கு ஒரு செமெஸ்டர் தான் இருக்கு, ஆனா நமக்கு இன்னும் ஐஞ்சு செமெஸ்டர் இருக்கு!!! அதனால ஒழுங்கா கிளாஸுக்கு நேரத்தோட போகலாம்…வா…”

கிளாசுக்குள்ள நுழையும் போது தான் வளர்மதி அத கவனிச்சா. பிரசன்னா, ஒரு டெஸ்கு மேல ஏறி உக்காந்துகிட்டு ஏதோ சொல்ல, அவன சுத்தி ஒரு ஏழெட்டு பசங்க நின்னுகிட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க.

’இவன் எல்லாத்துகிட்டையும் நல்லாத் தான பேசுறான்…அப்புறம் ஏன், நம்மள பாத்தா மட்டும் பேய் முழி முழிக்கறான்?’ ன்னு யோசிச்சுகிட்டே இருந்ததுல பக்கத்துல அர்ச்சனா வந்து உக்காந்தது கூட அவ கவனிக்கல.

அர்ச்சனா, “என்ன வளர்? பயங்கரமான திங்கிங்க போட்டுகிட்டு இருக்க?”

“அதில்லை அர்ச்சனா. இந்த பிரசன்னா இருக்கானே…”

“எந்த பிரசன்னா, ஆர்.பிரசன்னாவா இல்ல கே.பிரசன்னாவா?”

“அதான் என் புது ப்ராஜட்மேட் கே.பிரசன்னா…அவன் எல்லார் கிட்டையும் ரொம்ப நல்லா தான் பேசுறான்…ஆனா என்கிட்ட மட்டும் பேசவே மாடேங்குறான்…இந்த ப்ராஜட் இன்னிக்கு பண்ண ஆரம்பிச்சமே, அவன் வாயவே திறக்கல…முதல் நாளே செம போர்…இப்படியே போச்சுன்னா, இன்னும் மூணு மாசத்துக்கு எப்படி தான் இவனோட எல்லாம் ப்ராஜட் பண்ணப் போறனோ தெரியலையே…முதல்ல நாமளே ப்ராஜட்மேட்ஸ் செலக்ட் செய்ய விடாம சதி பண்ண அந்த பேகிமண்டையன சொல்லனும் ”

“பேகிமண்டையனா? அந்த சாருக்கு பொருத்தமான பேரு தான்…ஆனா வளர், நீ ஒன்னு கவனிச்சிருக்கியா? அந்த பிரசன்னா உன்கிட்ட மட்டும் இல்ல, எந்த பொண்ணு கிட்டையும் பேசி நான் பாத்ததில்லைப்பா…”

“ஆமால்ல? அவனுக்கு என்ன வந்ததாம்? நம்மளோட எல்லாம் பேசினா கிரீடம் விழுந்திருமா என்ன?”

“அவனுக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கே கூச்சமா இருக்கலாம்…”

“கூச்சமா? பேசுறதுல என்ன அர்ச்சனா இருக்கு?”

“அப்படியில்ல வளர்…சிட்டியிலையே பிறந்து வளந்து கோ-யெட் ஸ்கூல படிச்சுட்டு வந்த உனக்கு வேணா இதெல்லாம் பெரிய விஷயமா இல்லாம இருக்காலாம்…ஆனா அவன் சூழ்நிலை என்னவோ? யாருக்கு தெரியும்?”

“சரி அப்ப என்ன தான் பண்றது? இப்படியே என்னால இருக்க முடியாது, பேசாம அந்த பேகி மண்டையன பாத்து வேற யார்கூடையாவது சேத்து விட்ருங்கன்னு கேக்கப் போறேன்…”

“ச்சே…பாவம் வளர்…அது அவன இன்னும் மோசம் தான் ஆக்கும்…”

“ஹ்ம்ம்…சரி…அப்ப நானா பேசிப் பேசி தான் அவன பேச வைக்கனுமா? சரி, எனக்கென்ன பேசவா சொல்லிக் குடுக்கனும்? இன்னிக்கு தான் கொஞ்சம் கடுப்பாகி, நான் அவனோட பேசவே இல்ல…இனிமே, ஓயாம பேசி பேசியே அவனயும் பேச வச்சுடறேன்…”

“ஹய்யோ வளர், நீ இன்னும் வளரவே இல்ல…இன்னிக்கு நீ பண்ணது கூட ஒரு வகையில சரி தான்…நீயா போய் எடுத்தவுடனே எப்பயும் போல லொட லொடன்னு ஆரம்பிச்சீன்னா, இந்த ஜென்மத்துல அவன் உன்கிட்ட பேச மாட்டான்…”

“அப்புறம்?”

“சொல்றேன் கேளு…” ன்னு அர்ச்சனா ஆரம்பிக்கவும், சங்கீதா, “ஆ அ அ அ…”
ன்னு சொல்லி சிரிக்கறதுக்குள்ள பேகிமண்டையன் எனப்படும் கம்யூனிகேஷன் இஞ்சினியரிங் எடுத்து இம்சிக்கும் சார் வந்துட்டாரு.

“சரி சரி, கிளாஸ் முடியட்டும் சொல்றேன்…” ன்னு அர்ச்சனாவும் தீவிரமா நோட்ல எதையோ எழுத ஆரம்பிச்சிட்டா.

[அ அ அ அ]
அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…

Sunday, December 21, 2008

பட பட பட பட்டாம்பூச்சி…


பட்டாம்பூச்சி அவார்டுன்னு ஒரு அவார்ட், அத நம்ம ப்ளாகுக்கு கொடுத்து உணர்ச்சி பராவகத்துல திக்குமுக்காட செஞ்சது வேற யாரும் இல்ல, நம்ம G3 அக்கா தான். (எல்லாரும் மரியாதையா அக்கான்னு கூப்டறதால, எனக்கும் அக்கா ;)

சரி அதென்ன பட்டாம்பூச்சி அவார்டு ன்னு ரெண்டு மூனு நாளா நானும் என்னோட சின்ன மூளைய கசக்கி பிழிஞ்சு காயப்போட்டதுல தான், அட இது தானான்னு விஷயமே புரிஞ்சது.

படபடன்னு பறக்குற பட்டாம்பூச்சிய பாத்தா, நமக்கு அத உடனே புடிக்கனும்னு தோனும்,
அதே மாதிரி சில பேரோட பதிவ பாத்தா, நமக்கு அத உடனே படிக்கனும்னு தோனும்…
அதனால தான் இதுக்கு பேரு பட்டாம்பூச்சு அவார்டு, சரி தான? சரி, அந்த history of the incident, geography of the accident எல்லாம் நமக்கு வேண்டாம். நாம வந்த வேலைய பாப்போம்.

Coolest blogs I ever know…இதோ, இவங்க தான்…

ஸ்ரீமதி– நம்ம அருமை தங்கச்சி எழுதறத பாத்து எனக்கு எப்பயுமே ஒரு பிரமிப்பு தான்…பி.ந பதிவுகளாகட்டும், கவிதைகளாகட்டும், ஸ்ரீமதிக்கு நிகர் ஸ்ரீமதி தான். இதுக்கு மேல சொல்றதுக்கு உன்னளவுக்கு எனக்கு டமில் நாலேட்ஜ் போதாதும்மா!

விஜய் – விதவிதமா பதிவுகள் போட்டு அசத்துவார். விஜய் ப்ளாக்ல எனக்கு பிடிச்சது ரெண்டு விஷயம், எப்பயுமே கூலா இருக்க அவரோட ப்ளாக் டெம்ப்ளேட், அப்புறம் நல்லா சிரிக்க வைக்குற அவரோடகொசுவர்த்தி பதிவுகள்.

சரி, cool னா அது ப்ளாக் மட்டும் தானா? நம்ம நண்பர் ஒருத்தர் ஆரம்பிச்சிருக்கற ஒரு ஃபோரம் –
டோட்டல் டைம்பாஸ் – (கலக்குற மச்சி). அது கூட ரொம்ப கூலான வலைத்தளம் தான். “மொக்கை, மொக்கை, மொக்கையத் தவிர வேற எதுவும் இல்லை யுவர் ஆனர்!” ன்னு சொன்னாங்களேன்னு அந்த பக்கம் எட்டி பாத்தா, அட! உருப்படியான நிறைய விஷயம் கூட இருக்கு. டைம் இருக்கறவங்க கண்டிப்பா போய் எட்டிப் பாருங்க.

விஜய், ஸ்ரீமதி ரெண்டு பேரும் கவனமா கேட்டுக்கோங்க…
1. இந்த பட்டாம்பூச்சி படத்த உங்க ப்ளாக்ல மறக்காம போடுங்க.
2. உங்களுக்கு இந்த பட்டத்த குடுதவங்கள மறந்துடாதீங்க ;)
3. நீங்களும் இந்த பட்டத்த யாருக்காவது (அவங்க லிங்கோட) குடுத்து ஜமாயிங்க.

Saturday, December 13, 2008

உனக்கும் எனக்கும் இடையே ஒரு பூலோகம்!

தேசங்கள் கடந்து வாழும் நேசமிகு உறவுகளுக்காக…

ஷ்ஷ்ஷ்…இது துயில் கொள்ளும் நேரம்…

நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?

நீ துயில்கையில், உன்னோடு பேச முடியாமல்
சூரியனை சபித்தபடி பொழுதை கழிக்கிறேன்…


இங்கே மணி நான்கு!

பேருந்துப் படிக்கட்டுப் பயணம்,
நாசி துளைக்கும் சிற்றுண்டி மனம்,
அம்மாவின் சிரித்த முகம்,
சோம்பல் ததும்பும் விடுமுறை நாட்கள்,
ஞாயிறு தூர்தர்ஷன் தமிழ் படம்,
இப்படி எத்தனையோ நினைவுகள் பதிந்த
மாலை நான்கு மணி…

இன்று கேப்பச்சீனோ கோப்பையுடன் தனிமையில் கழிகிறது,
அங்கே இப்பொழுது நடுநிசி என்ற நினைப்போடு…

Saturday, December 6, 2008

Slip of fingers!

ஆங்கிலத்தில், “Slip of tongue” என்று ஒரு பதம் உண்டு, அதே போல், “Slip of fingers” (technically, spelling mistake :-) ) என்று ஒன்று இருந்தால், அது கீழே உள்ளவற்றுக்கெல்லாம் நன்றாக பொருந்தும்.

“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டம்…” என்று ஆரம்பித்து, 18 முறை தெளிவாக, ’வேண்டம்’ ’வேண்டம்’ என்று வெற்றி கரமாக மூன்றாம் வகுப்பில் எழுதியதில் தொடங்கி, சமீபத்தில், “பிரிவின் வழியை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்” என்று பின்னூட்டம் போட்டது முதல், என் ’slip of flngers’ பட்டியல் ஏராளம்.

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் இடை பட்ட காலத்தில் நடந்த, இப்போது நினைத்தாலும், கிச்சு கிச்சு மூட்டக் கூடிய, சில ’slip of fingers’ இங்கே…

“மதிப்பிற்குறிய ஐயா!
என் மதிவண்டியை காணவில்லை…”
என்று காம்போஷிஷன் புத்தகத்தில், எழுதிய கடிதம் முழுக்க மிதிவண்டிக்கு பதில் மதிவண்டியை தேடியது…

“சங்க காலத்தில், மன்னர்கள், புலவர்களை வெகுவாக மிதித்தனர்…” என்று எழுதி சங்க காலத்துப் புலவர்களை டேமேஜ் செய்தது…

“சிவபெறுமான்”, “சிவபெறுமான்” என்று பரிட்சை பேப்பரில், கட்டுரை முழுக்க எழுதி, பின் தமிழ் மிஸ்ஸிடம் அசிங்கப்பட்டு, “சிவபெருமான்” என்று இருபது முறை imposition எழுதி புண்ணியம் தேடிக் கொண்டது…

இதெல்லாம் கூட பரவாயில்லை, என் தோழி ஒருத்தி பரிட்சை பேப்பரில், “நளன் சோலைக்குள் புகுந்தான்” என்பதற்கு பதில், “நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்…:-D

சரி, “Slip of fingers” பத்தி சொல்லிட்டு, ’Slip of tongue’ பத்தி சொல்லாட்டா எப்படி?

ஒரு நாள்…இங்கிலிஷ் க்ளாஸ்ல, அடியேன் தான் டிக்டேட்டர் (நான் தான் நோட்ஸ் டிக்டேட் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்ல வந்தேன் ;-) )

அப்ப Japanese என்று ஒரு வார்த்தை வந்தது, அப்போ இங்கிலிஷ் மிஸ், “Divya! Better spell Japanese once” அப்படீன்னாங்க.

சரின்னு நானும் உடனே ரொம்ப ஸ்டைலா சொன்னேன், “Japanese…ஜே…ஏ…பே…ஏ”

“பி. ஏ” ங்கறது என் வாயில எப்படி “பே. ஏ’ ன்னு வந்துச்சுன்னு எனக்கு இன்னும் விளங்கல…அதுக்கப்புறம், க்ளாஸே ஒரு பத்து நிமிஷம் ஓயாம சிரிச்சதையும், குறைஞ்சது ஒரு வருஷமாவது அத சொல்லி, சொல்லியே என்னை எல்லாரும் ஓட்டி எடுத்தையும், நான் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்குறேன் :-)

Wednesday, November 12, 2008

அன்புள்ள பாலு…

ஒரே பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சாச்சுபையன், அவனும் நல்ல வேலைல கை நிறையா சம்பாதிக்கிறான்பல வருஷமா கஷ்டப்பட்டு தேடி, ஒரு நல்ல வரனா பாத்து, கல்யாணமும் பண்ணியாச்சுஅது ஆச்சு ஆறு மாசம்

 

ஒரு கட்டத்துக்கு மேல, நாம வாழ்றதே குழந்தைங்களுக்காகதாங்கற மாதிரி தோணுதில்ல? பையனும் வெளியூர்ல இருக்கான், பொண்ண கட்டி குடுத்தாச்சுரொம்ப வெறுமையா இருக்கு...யோசிச்சு பாத்தா, இவங்கெல்லாம் வாழ்கைல பாதிக்கு மேல வந்தவங்க தான? அதுக்கு முன்னாடி இருந்த என்னோட வாழ்கை, என்னோட வட்டம், என்னோட நண்பர்கள், என்னோட சந்தோஷம் இதெல்லாம் எங்க? இப்ப அதெல்லாம் இல்லைன்னு சொல்லமுடியாது, அதுக்காக முழுமையா இருக்குன்னும் சொல்லிற முடியாதே!!!

 

இதோஇன்னும் ஒரு வருஷத்துல பணி நிரந்தர ஓய்வும் வந்துடும்அதுக்கப்புறம் என்ன? அக்கடான்னு நியூஸ் பேப்பர் உண்டு, புத்தகங்கள் உண்டுன்னு உக்காற வேண்டியது தான்

 

புத்தகம்ன்னு சொன்ன உடனே ஞாபகம் வருதுஎன் நண்பன் பாலு, எப்பயும் எதாவது புத்தகத்த படிச்சிட்டு வந்து அதை பத்தி மணிக்கனக்கா பேசுவான்அதெல்லாம் அப்பங்கஅது ஒரு காலம், வேற ஊர்ல வேலை கிடச்சு, ன்னா தங்கி, சமைச்சு சாப்பிட்டு, ராத்திரி மொட்டை மாடில கதை பேசிகிட்டு...முப்பது வருஷம் இருக்குமா? ஆமா இருக்கும்...அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பாதைல...ஆனா, பாலு மட்டும் அப்டியே மாறாம தான் இருந்தான்.

 

பாலுவ பத்தி சொல்லனும்னா எத்தனையோ இருக்கு...

 

இந்தியன் வங்கில மேலாளரா இருந்தாலும், வங்கி ப்யூனுக்கு இருக்குற ஆடம்பரம் கூட இல்லாத அவன் எளிமையை சொல்றதா? இல்ல,

 

கடைல இருந்து பொட்டலம் மடிச்சு வர நூல கூட சேத்து கட்டி வச்சு, பெரிய நூல்கண்டு செஞ்சு வச்ச அவன் சிக்கனத்தை சொல்றதா? இல்ல,

 

அந்த நூல்கண்ட மறுபடியும் அந்த கடைக்காரருக்கே கொடுத்த அவன் தாராள மனச சொல்றதா? இல்ல,

 

மூணு வருத்துக்கு ஒரு தடவ, அவனே பணி இடமாற்றம் கேட்டு, ஊர் ஊரா போய், எல்லா ஊரையும், எல்லா மனிதர்களையும், தன் சொந்தமா நேசிச்ச  குணத்த சொல்றதா? இல்ல,

 

முப்பது வருஷமா, வருஷம் தவறாம, ஒவ்வொரு பொங்கலுக்கும், புது வருஷத்துக்கும், அவன் எண்ணத்திலும், வண்ணத்திலும் உருவாக்கி,  அன்பும், தனித்துவமும் நிரம்பி வழியும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவானே, அத பத்தி சொல்றதா?

 

பாலு எனக்கு எழுதின கடிதங்களயே ஒரு புஸ்தகமா போடலாம்அப்டி ஒரு ரசிகன்...அவன், பார்த்த, ரசிச்ச, அனுபவிச்ச ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்னு விடாம எழுதி அனுப்புவான்

அந்தந்த ஊர் காரங்க கூட, அவ்ளோ அழகா அந்த ஊற பத்தி வர்ணிப்பாங்கன்னு சொல்ல முடியாது...அவன எனக்கு வால்பாறை பாலுவா தெரியும்,  தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும், ஏன்? டெல்லி பாலுவா கூட தெரியும்...இப்ப கொஞ்ச நாளா அவன் மதுரை பாலு...வயசு ஆயிடுச்சு, பொண்ணுங்க படிப்பு வேற, ஸ்கூல் மாதிரி காலேஜ் எல்லாம் மாத்த முடியாது...அதான், போதும்டா ஊர் சுத்தினதுன்னு மதுரைலையே இருந்துட்டான்.

 

'அன்புள்ள ரகு' ன்னு ஆரம்பிச்சு இந்த முப்பது வருஷமா அவன் எனக்கு எழுதின கடிதங்கள், அனுப்பின வாழ்த்து அட்டைகள் ஏராளம்...இன்னும் எல்லாமே பத்திரமா வச்சிருக்கேன்...

இந்த அவசர உலகத்துல யாரு கடுதாசி எல்லாம் போடுறா? நான், அவன் அனுப்பின பாதி லெட்டருக்கு தான் பதில் எழுதுவேன். மத்தபடி எப்பயாச்சும், ஃபோன்ல நலம் விசாரிக்கதோட சரி.

 

இப்படி பல வருஷமா விடாம தொடர்ந்த எங்க நட்பு மேல கொஞ்சம் பெருமை தாங்க எனக்குஅந்த ஒரே ஒரு சம்பவத்த தவிரஅதை நினச்சா எனக்கே என் மேல கோவம் கோவமா தான் வருதுசரி, நானும் மனுஷன் தானே?

அப்டி என்ன தான் நடந்துச்சுன்னு பாக்றீங்களா? இதோ…

 

"பாலு! எப்படி இருக்க?"

 

"சொல்லு ரகு...நான் நல்லா இருக்கேன்...வீட்ல எல்லாரும் சௌக்கியமா?

என்ன திடீர்ன்னு ஃபோன்?"

 

"என் பொண்ணு கல்யாணம் முடிவு ஆய்டுச்சு...மாப்ளை யு.எஸ். ல வேலையா இருக்கார்...இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்"

 

"ரொம்ப சந்தோஷம் பா, நீயும் ரொம்ப நாளா தேடினதுக்கு, இப்ப நல்ல வரனா அமைஞ்சிருக்கு...சந்தோஷம்"

 

"நான் அடுத்த மாசம் மதுரை பக்கம் வருவேன்...அப்ப நேர்ல வந்து பத்திரிக்கை வெக்கறேன்"

 

"ஹ்ம்ம்...கண்டிப்பா"

 

கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிச்சு கொஞ்ச நாளைக்குள்ள, பேரிடியா வந்துச்சு, திடீர்ன்னு சம்பந்திக்கு உடல்நிலை மோசமான செய்தி. ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு, கல்யாண வேலைய ஆரம்பிச்சேன். இருந்தாலும் கடைசி நேரத்து பரபரப்பு, பதட்டம் இப்படி பல காரணங்களால என்னால மதுரைக்கு போக முடியல...பாலுவுக்கு ஃபோன் பண்ணி நிலைமைய சொல்லவும், பாலுவே, 'என்ன ரகு, இதுக்கெல்லாம் கவலை பட்டுகிட்டு, நீ பத்திரிக்கைய தபால்ல அனுப்பி விடு...அது போதும். ன்னு சொல்லவும், சரி தான்னு தபால்லையே பத்திரிக்கைய அனுப்பி வச்சேன்...

 

நல்லா சிறப்பா கல்யாணமும் முடிஞ்சுது. ஒரு சில பேர் தவிர கல்யணத்துக்கு அழைப்பு குடுத்த அத்தன பேரும் வந்து கலந்துகிட்டு, வாழ்த்திட்டு போனாங்க.

ஆயிரம் பேத்துக்கு மேல கல்யாணதுக்கு வந்திருந்தாங்க. ஆனா பாலு மட்டும் வரவே இல்ல…அத பத்தி, எனக்கு கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஆதங்கம் தாங்க. வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வரல! ஆயிரம் வேலை இருக்கட்டுமே, கல்யாணம் முடிஞ்சப்புறம் ஒரு ஃபோன் பண்ணி பேசக் கூடாது? இந்த ஒரு வருத்தம் தான் எனக்கு.

 

என் மனைவி என்னடான்னா, “நீங்க நேர்ல போய் கூப்பிடலைன்னு கோபம், அதான் அவர் வரலை” ங்கறா.

 

ச்சே, ச்சே…பாலு அப்படி பட்டவன் இல்ல. ஏதோ முக்கியமான வேலை இருந்திருக்கும்…இல்லன்னா வராமா இருந்திருக்க மாட்டான்…அட, என்ன தான் வேலை இருக்கட்டுமே, ஒரு ஃபோன் பண்ணி பேசி இருக்கலாமே…சரி, அவனா ஃபோன் பண்ணி பேசுற வரைக்கும்,  நானா அவனுக்கு பேசப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு பின்னாடி தான் புரிஞ்சுது.

 

கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் பாலுகிட்ட  இருந்து ஒரு கடிதம்.

 

அன்புள்ள ரகு,

நலம், நலமறிய அவா. மகள் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெண்ணிற்க்கும், மாப்பிளைக்கும் என் வாழ்த்துக்களை சொல்லி விடு. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, என்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை. சரியாக, கல்யாணச் சமயத்தில், அம்மா தவறி விட்டார்கள். இவ்வளவு தாமதமாக சொல்வதற்க்கு மன்னிக்கவும். உடனே உன்னிடம் சொல்லி, உன் சந்தோஷத்தை குறைக்க விரும்பவில்லை. அதற்க்காகத் தான் இந்த இரண்டு மாத இடைவேளை. அம்மாவின் கடைசி நாட்களை பற்றி

 

 அதுக்கு மேல என்னால படிக்க முடியலைங்க.

 

ச்சே, பெரிய தப்பு பண்ணிட்டனே…பாலுவ பத்தி தெரிஞ்சிருந்தும் கூட இப்படி நினைச்சுட்டேனே…நானாவது ஒரு ஃபோன் பண்ணி இருக்க கூடாது? மனைவி எதோ சொன்னா, அத அப்படியே கேட்கனுமா? எனக்கு எங்க போச்சு புத்தி…இல்ல, மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெளரவம் தான், நான் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்… சரி, ஆனது ஆய்டுச்சு, இப்ப புலம்பி என்ன பண்றது? வயசானா புத்தி மழுங்கிடும்ன்னு சொல்லுவாங்களே, அப்படி ஆய்டுச்சோ?

 

சரிங்க, பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல, நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துருச்சு. நான் எங்க போய்ட்டு இருக்கேன்னா கேக்குறீங்க? பாலு பொண்ணு கல்யாணத்துக்கு தான்…பொண்ணு கல்யாணம் அவசரமா முடிவாயிடுச்சுன்னு சொல்லி, ரெண்டு வாரத்துகு முன்னாடி தான் பத்திரிக்கை அனுப்பினான்.  நிறைய முஹூர்த்தம் இருக்கறதால நேரடி ரயில்ல சீட்டு கிடைக்கல…அதான், காலைல நேரமே கிளம்பி, ரயில் பஸ்ஸுன்னு மாறி, மாறி, சுத்தியடுச்சுட்டு போய்ட்டு இருக்கேன். ’இந்த வயசான காலத்துல, எதுக்கு இப்படி கஷ்டப்படறீங்க?’ ன்னு என் மனைவி கூட கேட்டாங்க… பாலுவுக்காக இத கூட செய்ய மாட்டேனா என்ன? என்ன நான் சொல்றது? கரெக்ட்டு தான? சரி, அப்ப பாப்போமா?

 

P.S: எப்பவும் தொடர் கதையே எழுதிட்டு இருந்த நான், ஒரு கதை போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதை இது. கதை கரு கிடைக்காததால், என் அப்பாவின் கதையையே சுட்டு விட்டேன். என் அன்பு அப்பாவும், அவர் நண்பர் பாலு மாமாவும் தான் இந்த கதையில் வரும் அன்பர்கள்.

Saturday, November 1, 2008

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவோம்ல!

என்னைய மாட்டி விட்டது யாரு?              சரவண குமார்

என்னவாம்?                                           சினிமா கேள்விகளுக்கு பதில்  போடனுமாம்...

ஓஹ் போட்டாச்சா?                                மேல, இல்ல இல்ல, கீழ படிங்க

சரி, நான் யார மாட்டி விடப் போறேன்?    அது அப்பால…


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

அதெல்லாம் நியாபகம் இல்ல...ஒன்னு மட்டும் எங்க அம்மா  இன்னும் சொல்லி சிரிப்பாங்க...முதல் முறையா தியேட்டர் போனப்பவே, அங்கிருந்த அத்தன பேரையும்  என்னை திரும்பி பாக்க வச்சுட்டோம்ல? “ஹய்யோ!!! இவ்ளோஓஓஓ பெரிய்ய்ய வீடா? இது யாரு வீடும்மா?” ன்னு சத்தமா கேட்டா எல்லாரும் பாக்க மாட்டாங்களா என்ன?

 

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"பொய் சொல்ல போறோம்." அந்த படத்த பாக்க போறதுக்கு நான் சொன்ன பொய் எனக்கு தான் தெரியும் ;) ஐ செக்கப்புன்னு பொய் சொல்லிட்டு (ஐ, பொய்…ஹை ரைமிங்கு ;) ), ஆபிஸ்ல இருந்து அப்ஸ்காண்ட் ஆனோம்.

 

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தீபாவளி அன்னிக்கு சன் டீ.வில சந்தரமுகி…தலைவர் படத்த, எத்தன முறை, எந்த விதமான ஊடகத்துல பாத்தாலும், தலைவர் படம், தலைவர் படம் தான்னு உணர்ந்தேன்…

அதுக்காக பாபா படத்த எத்தன தடவ பாத்தேன்னு எல்லாம் கேக்க கூடாது, ஆமா!

 

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தாக்கிய படம்ன்னா, வாழ்க்கைல இது வரைக்கும் ஒன்னே ஒன்னு தான்…”வீரம் விளைஞ்ச மண்ணு!” கூட்டமா குடும்பத்தோட குதூகலமா போறமேன்னு, அவசரத்துல என்ன படம்ன்னு பாக்காம ஒரு பத்துப்  பன்னென்டு பேரு கும்பலா தியேட்டர் உள்ள ஓடிட்டோம்.அப்புறம், அத்தன பேரும் குத்துயிரும்  குழையுயிருமா தான் வெளிய வந்தோம்.

 

நல்ல விதமா தாக்கிய படங்களோட பட்டியல் நீளம்…ஆனா ரொம்ப பாதிச்ச படம், “லஜ்ஜா”. மனிஷா கொய்ராலா சந்திக்கற பல பெண்கள் வாழ்க்கைல நடக்குற கொடுமைகளை பத்தி பேசுற படம். அதுல மாதுரி கூட இருப்பாங்க…அந்த படம் பாத்து, ஒரு நாள் முழுக்க கோவமா, சோகமா இருந்துச்சு. சாரி லஜ்ஜா, ஹிந்தி சினிமா, தமிழ் சினிமான்னு இருக்குது கேள்வி! (கேள்விய சரியா படிக்காம, அவசர அவசரமா தெரிஞ்சதை எல்லாம் எழுதற பழக்கம் இன்னும் போகல) இப்ப தான் பாத்தேன்…தமிழ்ல glycerin substitute படம்ன்னா அது அஞ்சலி…

 

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல, தலைவர் ஒரு அரசியல் கட்சிக்கு சார்பா அறிக்கை விட்டு, அப்புறம் அவங்க தோத்ததும், எல்லோரும் தலைவர கிண்டல் பண்ணப்ப தான் கொஞ்சூண்டு வருத்தமா இருந்துச்சு…எப்படியோ, “காய்க்கற மரத்துக்கு தானே கல்லடி படும்?” ;)  அதனால மனச தேத்திகிட்டேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

 

தசாவதாரம்...தொழில் நுட்பம் பல இருந்தாலும், அந்த கதையோட ப்ளாட்ட தான்  பாத்து தான் பிரமிச்சேன்.

 

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்பவாச்சும், 
வாரமலர் நடுப்பகுதி, அப்புறம் லைட்ஸ் ஆன், இத தவிர வேற எதுவும் வாசிக்கறது கிடையாது.

 

7.தமிழ்ச்சினிமா இசை?

A.R.ரஹ்மான் பாடல்கள்ல வரும் குழலோசை ரொம்ப பிடிக்கும்…

ஹாரிஸ் பாடல்கள்ல வரும் கிட்டார் ரொம்ப பிடிக்கும்…

முழுக்க முழுக்க தமிழ்ல இருக்க பாடல் வரிகள் பிடிக்கும்…

ஐஸ்கீரிம் போல் உருகும், சோனு நிகம், ஸ்ரீநிவாஸ் பிடிக்கும்… 

ஆனா பிடிச்ச விஷயங்கள யாராவது கொலை செய்வாங்களா? எனக்கு அதுவும் பிடிக்கும்…

நாள் முழுக்க ஏதோ ஒரு பாட்ட பாடி/முனு முனுத்து அத கொல்லவும் பிடிக்கும் ;)

 

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் தவிர னா, பெரும்பாலும் ஹிந்தி, அப்புறம் சில தெலுகு, மலையாளம், கன்னடம், இந்த படங்கள் எல்லாம் பாத்திருக்கேன்.

 

ஸ்கூல் படிக்கும் போது,ஞாயிரு மதியம் தூர்தர்ஷன்ல alphabetical order ல போடும் ரீஜனல் நேஷனல் அவார்ட் படங்கள அப்படி ஒரு ஆர்வத்தோட பாத்துருக்கேன்…காலண்டர்ல, தமிழ், கன்னட படங்கள் எப்போ வருதுன்னு குறிச்சு வச்சுகிட்டு, மறக்காம பாத்துடுவோம். அப்படி பேர் தெரியாம பாத்த நல்ல நல்ல கன்னட படங்கள் எத்தனையோ! காலேஜ் படிக்கும் போது, தமிழ் சேனல்கள் போர் அடிச்சால் உதயா டீ.வி கூட பாத்திருக்கேன்…ஆனா, இங்க வந்து இத்தன வருஷத்துல ஒரே ஒரு கன்னடப் படம் கூட பாத்ததில்லை. ஒரு வேளை, உள்ளூர் மக்களே அத அதிகம் விரும்பாதது ஒரு காரணமா, இல்ல, போஸ்ட்டர்கள பாத்ததால வந்த பயமா, தெரியல :)

 

அப்படி அதிகம் தாக்கின சில கன்னட படங்கள் இருக்கு…ஆனா பேரு தான் தெரியல.

இங்கிலீஷ் படமெல்லாம் நாம அவ்வளவா பாக்கறது இல்ல…சில பல நண்டு - சிண்டு, அப்புறம் ஜாக்கி சான் படங்கள தவிர…ஆனா, ஹாரி பாட்டர் படமெல்லாம் மனப்பாடம் தான் ;)

 

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எங்க பாட்டியோட, ஒன்னு விட்ட தம்பியோட, சித்தப்பாவோட, ஒன்னு விட்ட மாமாவோட  பேரனுக்கு கூட, சினிமா உலகுடன் நேரடி என்ன, மறைமுக தொடர்பு கூட கிடையாது. எனக்கும் சினிமா உலகுக்கும் அவ்ளோ தூரம் தான்.

 

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

படத்த அவங்களே டி.வீ.டி ல ரிலீஸ் பண்ணா பிழைச்சுக்குவாங்க :)


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு பெரிய கஷ்ட்டமெல்லாம் இல்ல…ஒரு வருஷத்துக்கு இரண்டு, இல்ல மூணு தடவை தான் தியேட்டருக்கே போவேன்…மத்தபடி, உலக தொலைகாட்சிகளில் முதன் முறையா பாக்குறது தான்…அப்படி பாத்தே காலத்த ஓட்டலாம்…அப்புறம் அபிக்கு போட்டியா, இன்னும் சில பேரு சீரியலுக்கு வந்துடுவாங்க…அவங்களோட சேந்து அழ வேண்டியது தான்.

 

தமிழர்களுக்கு என்ன ஆகும்? படம் பாக்குற டைம்ல நம்ம ப்ளாகயெல்லாம் படிப்பாங்க ;) அப்புறம் இன்ன்ம் நிறைய ப்ளாகர்ஸ் வருவாங்க…

 

ஹப்பா, ஒரு வழியா டெஸ்டு முடிஞ்சிருச்சு…

 

சரி, நான் யார மாட்டி விடப் போறேன்?                ஹ்ம்ம், யாரு? யாரு? யாரும் இல்ல…

ஏன்,ஏன், ஏன்?                                                  ஏன்னா…நான்  ரொம்ப நல்லவ ;

Sunday, October 26, 2008

3rd year - 7 [Last part]

பகுதி 7

அது வரை அனு அந்த டைரியை பார்த்ததே இல்லை. அப்பா செல்லும் முன், வீட்டில் பல பொருட்களை இடம் மாற்றியது ஞாபகம் வந்தது. பாட்டியின் குண்டு குண்டு கையெழுத்தை பார்த்ததுமே கண்டி பிடித்து விட்டாள் அனு. பாட்டியோட டைரியா என்ற ஆவல் தலை தூக்க, கையில் எடுத்த கத்தியை டேபிள் மீது வைத்தாள்.

மிக சில பக்கங்களில் மட்டும் ஏதோ எழுதி இருந்தது. அப்படியே அதை புரட்டிப் பார்க்கும் போது, அனு குட்டி என்று ஏதோ ஒரு வரி கண்ணில் பட, முதல் வரியில் இருந்து படிக்க ஆரம்பித்தாள்.

“இவங்க தான்…என் அன்பு மனைவி…என் ஆருயிர் தோழி…” யாரா இருந்தாலும், அவங்ககிட்ட என்னை இப்படி அறிமுகப் படுத்தும் போது அவர் கண்கள்ள தெரிஞ்ச சிரிப்பும், உண்மையும், இன்னும் என் கண்ல அப்படியே நிக்குது.

“வீட்டுக்காரர் இறந்து இருபது நாள் தான் ஆச்சு,அதுக்குள்ள இந்தம்மா கிளப்பிடுச்சு பாரு…எல்லாம் முன்னாடியே ரெடி பண்ணியே வச்சுருக்கும் போல…” இளக்காரமாய் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னது கூட சிரிப்பு வரலை எனக்கு, “அம்மா…நிஜமா நீங்க என்னோடவே வந்தர்றீங்களா? Thanks மா…நான் கூட நீங்க எங்க அப்பா இருந்த வீட்ல தான் நானும் இருப்பேன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்” ன்னு என் மகனே சொன்னத நினச்சா தான் சிரிப்பு வருது.

அவர் போய்டாரு…முப்பத்திரெண்டு வருஷம் அழகா வாழ்ந்தோம். அதுக்காக? அந்த வீட்ல தான் அந்த நினைவுகள் எல்லாம் இருக்குன்னு அர்த்தமா? என் மனசுல எல்லாமே பத்திரமா இருக்கும், எந்த ஊர் போனாலும்…போனவங்கள நினச்சு உருகி, இருக்கறவங்கள கஷ்டப் படுத்தறது தான் இந்த ஊர்ல பாசமா?

அவர் இருந்த வரைக்கும் தான், ’நான் வீட்டை விட்டுட்டு வர மாட்டேன்…எங்க பரம்பரை வீட்ல தான் என் உயிர் போகும்’ ன்னு பிடிச்ச பிடிவாதாத்தால, மகன், மருமக, பேத்தி இவங்களை எல்லாம் விட்டுட்டு இருந்துடேன். இனி என்ன? எனக்காக இருக்கறவங்களுக்காக, ஏன் எனக்காகவும் கூட சந்தோஷமா வாழ்வேன்.

அவர மாதிரி பரம்பரை வீட்ல பக்கத்துல யாருமே இல்லாம சாகறத விட, ஏதோ ஒரு ஊர்ல, ஏதோ ஒரு வீட்ல, என் அனு குட்டி மடில சந்தோஷமா சாவேன். "

டைரியின் மேல் ஒரு துளி கண்ணீர் சொட்டியது. அதற்கு மேல் படிக்க முடியாமல் டைரியை மூடி வைத்து விட்டு, அப்படியே தரையில் அமர்ந்து சுவர் மேல் சாய்ந்தாள்.

கேவலம் நாலு மாசப் பழக்கம், அந்த பாலா…அவன் ஏதோ சொன்னான்னு சுக்கு நூறாய் உடைந்து போனோமே…பாட்டி எப்படி முப்பது வருஷம் பழகிய தாத்தாவை விட்டு இவ்வளவு சந்தோஷமா, அதுக்கப்புறம் இருபது வருஷம் வாழ்ந்துருக்காங்க? ’போனவங்கள நினச்சு உருகி, இருக்கறவங்கள கஷ்டப் படுத்தறது’ இத தான, நானும் இப்ப பண்ண இருந்தேன்…எனக்கே, எனக்காக இருக்குற அம்மா, அப்பாவ, கோவப் பட்டு கத்தி, குத்தி கிழுச்சு, இப்ப அவங்கள ஒரே அடியா விட்டுட்டு போற அளவுக்கு துணிஞ்சிட்டனே…
தன் கண்களை பார்த்த வண்ணம், தன் மடியிலேயே உயிரை விட்ட பாட்டியின் கண்கள் ஒரு கனம் அவள் மனக்கண் முன் தோன்றியது.
---
மறுநாள் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி தொடங்க இருந்ததால், அன்று மாலையே அடுத்த நாளுக்கு வேண்டியதை தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் இளமதி. கவிதாவோ, ஊரில் இருந்து கொண்டு வந்த பையை கூட பிரிக்காமல், ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகளின் ஊடே, மேற்கே விரிந்து கிடந்த செவ்வானப் படலம், அவள் கண்களிளும் பிரதிபளித்துக் கொண்டிருந்தது.

“கவி!” என்ற இளமதியின் அழைப்பு, கவிதாவின் விழி நீரை தாங்கி நிற்கும் அணை போல், கண்ணீரை அவள் கண்களுக்குள்ளேயே தடுத்து நிறுத்தியது.

தோழியின் கண்ணீர் திரையிட்ட கண்களை பார்த்ததும், மெல்ல அவளருகே சென்ற இளமதி, “என்ன ஆச்சு கவி?” என்றவாறே ஆதரவாய் அவள் கரம் பற்றிக் கொண்டாள்.

“போன வருஷம் முதல் நாள், நானும் அனுவும், கையை கோத்துகிட்டு, எப்படி சிரிச்சுகிட்டு க்ளாஸுக்கு ஓடி வந்தோம் தெரியுமா? நாளைக்கு…ஃபைனல் இயர் முதல் நாள்…” அதற்கு மேல் பேச முடியாமல் திணறிய கவிதாவையும், இவள் அழுதால் எப்படி தேற்றுவது, என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் தவித்த இளமதியையும், மீட்பதற்காகவே ஒலித்தது போல் இருந்தது, அவர்களுது விடுதி தோழி ஒருத்தியின் குரல்.

“இளமதி!! இளமதி! உன்ன HOD கூப்டறார். கீழ ஆஃபிஸ் ல வெய்ட் பண்ணிட்டு இருக்காரு”
திடீரென்று HOD அழைக்கவும், என்னவோ ஏதோ என்று கவிதாவுகம், இளமதியும் கீழே வேக வேகமாக இறங்கி சென்றனர்.

அவர்களை பார்த்ததும் ஆச்சர்யமும், கோபமும் ஒரு சேர ஆக்கரமித்தது அவர் முகத்தை, “என்னம்மா? ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா? அனு உங்கள யாராச்சும் கூட்டிட்டி போறேன்னு இல்ல சொன்னா? அவள எங்கன்னே தெரியலையேம்மா…”

இளமதி, “ஸார் …நாங்களும் அவள தேடினோம், அனு உங்களோட இருக்கான்னு நினச்சிகிட்டோம் …”

“என்ன இந்த பொண்ணு இப்படி பன்றா? ஏம்மா? நீங்க எதுவும் சொல்றதில்லையா? எனக்கும் என்ன நடக்குதுன்னே புரியல…அவ அப்பன் என்னடான்னா, டீ.ஸி யை வாங்கி பொண்ண அனுப்பி வைங்கறான்…”

அதுவரை அமைதியாக இருந்த கவிதா, “என்னது டீ.ஸி யா? என்ன ஸார் சொல்றீங்க?” கேட்கும் போதே அவள் குரல் உடைந்து, வார்த்தைகள் அழுகைக்குள் சிக்கிச் சிதறிப் போய் வெளிப்பட்டன.

“என்ன? உங்களுக்கு தெரியாதா? சரி, ஆனது ஆகட்டும், மொதல்ல அவ எங்கன்னு கண்டுபிடிக்கனும், நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க, அவ வந்தான்னா, உடனே எனக்கு ஃபோன் பண்ணுங்க…நான் அவங்க ப்ளாட்டுக்கு போய் பாக்குறேன்…ஃபோன் நம்பர் நோட் பண்ணிக்கோங்க…”

அவர் அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு திரும்பி சிறுது தூரம் தான் சென்றிருப்பார். அதற்குள் அனுவே அவர் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

“அனு!!! எங்க போய்ட்ட? ஃபோன ஏன் எடுக்கல?” மிரட்டும் தொனியில் சண்முகம் வினவ, அனு, “சாரி அங்கிள்…சைலன்ட்ல போட்டுடேன்…பாக்க மறந்துட்டேன்…”

“நல்ல பொண்ணு மா…இவங்க ரெண்டு பேரையும் வேற இங்க பாக்கவும், ஒரு நிமிஷம் அப்படியே பதறி போய்ட்டேன்…சரி, வா…கிளம்பு, ஆன்ட்டி காத்துக்கிட்டு இருப்பாங்க…”

“இல்ல அங்கிள், நான் வீகெண்ட் வரேனே…இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்ன்னு தோனுது…”

“சரி ஓகே…அப்ப நீ ரெஸ்ட் எடு…நாளைக்கு காலைல எந்திருச்சு தெளிவா யோசிக்கலாம்…I advise you not to take any major decision today”

“இல்ல அங்கிள்…நான் டிசைட் பண்ணிட்டேன்…படிச்சு முடுச்சிட்டு தான் இங்கிருந்து கிளம்ப போறேன்…”

ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் மலர்ந்தது அவர் முகம், “அனு!! நிஜமாவா? இப்ப தான் ரகு பொண்ணு மாதிரி பேசுற…I am so proud of you…so proud…சரி, சரி, நேரம் ஆச்சு, நீ போய் ரெஸ்ட் எடு…meet you fresh in a fresh year tomorrow”

HOD யுடன் பேசிக் கொண்டிருந்த அனுவுக்காக காத்து நின்று கொண்டிருந்த கவிதாவையும், இளமதியையும் திரும்பிப் கூட பார்க்காமல், விடு விடுவென நடந்து அவர்கள் மூவரும் தங்கி இருந்த அறை எண் 113 க்குள் நுழைந்தாள். அவளுக்குள் எத்தனையோ எண்ணங்கள் அலைமோதியது. கடைசியாக நடந்த சண்டை…கவிதாவை பார்த்து அவள் உமிழ்ந்த நெருப்பு வார்த்தைகள்…அவள் அந்த அறையை விட்டு கிளம்பிய போது, கவிதாவின் அழுது சிவந்திருந்த முகம்…அதன் பிறகு பேச முயற்சித்த இளமதியை, தான் நிராகரித்தது…இப்படி எல்லாமே, ஒரு நொடியில் அவள் கண் முன்னால் விரிந்தது. அவர்களிவர் முகத்தில் விழிப்பதற்கு பதில், அந்த பூமி பிளந்து தன்னை விழுங்கிக் கொண்டால் தேவலை என்றிருந்தது.

“அனு…” வெகு நாட்களுக்கு பிறகு கவிதாவின் அந்த அழைப்பு! ஆனால் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் உற்சாகம் இல்லாமல்…துக்கம், சந்தோஷம், நிம்மதி, ஏக்கம், ஒரு வித தவிப்பு…இப்படி பல வித உணர்வுகள் தோய்ந்திருந்தது.

“கவி!!!” என்று கதறியவாரே ஓடிப் போய் அவளை இறுக கட்டிக் கொண்டாள் அனு. என்றும் போல் அன்றும் அமைதியாய், கண்கள் பனிக்க, தன் தோழிகள் இருவரையும் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இளமதி.
கண்களில் நீர் பெருக்கெடுக்க அனு, “சாரி கவி…என்ன மன்னிச்சுடு…ப்ளீஸ்”

கவிதா, “எதுக்கு அனு சாரி எல்லாம்? அழாத அனு….ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு அவளும் அழ ஆரம்பித்தாள்.
இளமதி, “ஹய்யோ…ரெண்டு பேரும் மொதல்ல அழுகறத நிறுத்தறீங்களா? ஹேய் லூசு கவி! நீயும் அவளோட சேந்து அழுதுகிட்டு இருக்கியா?”
அனு, “இளம்ஸ்…நான் பண்ணது தப்புன்னு புரிஞ்சிகிட்டேன்…மறுபடியும் என்னை உங்களோட சேத்துக்கோங்கன்னு சொல்றதுக்கு கூட…”
இளமதி, “நாங்க எப்ப அனு உன்ன பிரிச்சு வச்சோம்? இப்ப சேத்துகறதுக்கு? ஹே அழுமூஞ்சி கவி…சொல்லேன்…”
கவிதா, “ஆமா அனு! We are there! We are there for you always…”
அனு, “இல்ல…நான் உங்க ரெண்டு பேத்தயும் எவ்ளோ ஹர்ட் பண்ணிட்டேன்…உங்கள மொத்தமா அவாய்ட் பண்ணி, ச்சே…நினச்சாலே, எனக்கே…”
இளமதி அனுவின் தோள்களை வளைத்துக் கொண்டு, “அனு! காம் டெளன்…இத பாரு…நீ எங்கள எதுவும் பண்ணல…சந்தோஷம்ன்னா சேந்து சிரிக்கறதுக்கு மட்டும் ஃபரெண்ட்ஸ் இல்ல…சோகம்ன்னா சாய்ஞ்சு அழுகறதுக்கும், தோல்வின்னா தட்டி குடுக்கறதுக்கும், கோவம்ன்னா திட்டி தீக்கறதுக்கும் தான் ஃபரெண்ட்ஸ் நாங்க இருக்கோம்…”

கண்ணீரை துடைத்துக் கொண்ட அனு, “ஆமா…அதே மாதிரி, தப்பு செஞ்சா தட்டி கேக்கறதுக்கும் தான் ஃபரெண்ட்ஸ்…அத நான் புரிஞ்சுக்கல…”

கவி மேலும் மேலும் தொடர்ந்து அழுதுட்டே இருக்கவும், இளமதி, “கவி! இப்ப அழுகறத நிறுத்தப் போறியா இல்லையா? அனுவ பாரு…அவளே சமாதானம் ஆய்ட்டா…”

கவிதா, “இதுக்கெல்ல்லாம் காரணம் அந்த பாலா தான்…அவன கொல்லனும் போல ஆத்திரம் வருது எனக்கு…”

அனு விரக்தியாக சிரித்துக் கொண்டே, “தப்பு அவன் மேல மட்டும் இல்ல கவி! என் மேலையும் தான்…”
கவிதா, “நீ என்ன அனு தப்பு பண்ண? ஒருத்தன உண்மையா லவ் பண்ணது தப்பா?”

அனு, “இல்ல கவி! நான் லவ் பண்ணது தப்பில்லை…அவன் சும்மா டைம் பாஸ்க்காக தான் லவ் பண்ணேன்னு சொன்னானதுனால அவன் மேல கோவப் பட்டேன்…யோசிச்சு பாத்தா நான் மட்டும் ஏன் லவ் பண்ணேன்? எங்க பாட்டி இருந்தப்போ, உங்களோட காலேஜ்ல சந்தோஷமா இருந்தப்போ, அப்பெல்லாம் நான் அவன திரும்பி கூட பாத்தேனா? இல்லயே…பாட்டி போய்டாங்க, யாரும் இல்ல, லோன்லி ஆய்ட்டேன்…டிப்ரெஸ்டா இருந்தேன், இப்படி பல காரணங்கள்னால அவனோட பழக ஆரம்பிச்சேன்…அதுக்கு அப்புறம் அந்த உறவை நான் எவ்ளோ தான் உண்மையா நேசிச்சாலும், ஆரம்பிச்ச காரணம்? அது தப்பு தான? இப்படி ரெண்டு பேரோட தப்புகளோட ஆரம்பிச்ச என்னோட காதல்ங்கற குழந்தை எப்படி கவி நல்ல படியா பிறக்க முடியும்? அதான், கருவிலேயே அழிஞ்சு போச்சு…”

அழாமல் தெளிவாக பேசிய அனுவை, கவிதாவும், இளமதி மிகவும் ஆச்சர்யத்துடனும், சோகத்துடனும் வெறித்தார்கள். சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சி வசப்படும் அனு, இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று அவர்கள் இருவரும் மிக பயந்துதான் போயிருந்தார்கள்.

அனு, “என்ன கேர்ள்ஸ்? எதுவுமே பேச மாட்டேங்கறீங்க? நம்ம ரீ ஜாயினிங்க்கு நாளைக்கு கான்டீன்ல ட்ரீட்?”

இளமதி அப்படியே அனு, கவிதா இருவரையும் அனைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் கழித்து, அனு அவள் அப்பாவை தொலை பேசியில் தொடர்பு கொண்டாள்.

“அப்பா!”
“அனும்மா…என்னடா?”
“அப்பா…வந்து…நான்…இங்கயே இருக்கேன்…ஃபைனல் இயர் முடிச்சுட்டே வரேன்…”
“என்ன? நிஜமாவா சொல்ற? அனு! ரொம்ப சந்தோஷம் …எதுக்கும் நான் இப்ப உடனே அங்க கிளம்பு வரேன்…”
“வேண்டாம்ப்பா…I’ll take care…நான் ஒழுங்கா படிச்சு, அரியர்ஸ் க்ளியர் பண்ணிட்டு, அப்புறம் வேக்கேஷன்ல அங்க வரேன்…”
“அனு! I am proud of you…I know…I know, you’ll be back to normalcy very soon…”
“ஹ்ம்ம்…தாங்ஸ் பா…அப்புறம்…வந்து…” என்று அனு இழுக்கவும்,
“என்னடா சொல்லு…”
“அந்த…ஃப்ளாட்ட…வேணும்ன்னா, ஹ்ம்ம்ம்…வித்துடுங்கப்பா…”
“என்ன??? ச்சே…ச்சே…அது இருக்கட்டும் அனு …நீ தான் அன்னிக்கு சொன்னியே, அந்த வீடு உனக்கு எவ்ளோ க்ளோஸ்ன்னு…”
“இல்லப்பா, அந்த வீட்ட விட பாட்டி தான் எனக்கு க்ளோஸ்…பாட்டியே போனப்புறம், நீங்களும், அம்மாவும் தான்…வீடெல்லாம் எனக்கு முக்கியம் இல்ல…சாரி ப்பா…”
“அனும்மா…என்னடா? என்னவோ மாதிரி பேசற?”
“இல்லப்பா…I am alright…எனக்கு தூக்கம் வருது…ஃபோன வச்சர்ட்டுமா?”
“இரு, இரு…உங்கம்மா பக்கத்துல நின்னுட்டு ஃபோன பிடிங்கிட்டு இருக்காங்கா…ஒரு நிமிஷம் அவங்களோட பேசிடு…”
“அனும்மா…” என்று அம்மாவின் குரல் கேட்கவும், "மம்மீ!!” என்று குரலில், கஷ்டப்பட்டு ஒட்ட வைத்த உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள் அனு. அந்த உற்சாகம், நிஜமாகவே அவளுள் இருந்து ஊற்றெடுத்து, பொங்கி பெருகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நீண்ட நாட்களுக்கு பின், அன்று, நிம்மதியாக உறங்கினாள் அனு.
அப்போது அவள் பாட்டி மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அனு எப்போது விழிப்பாள், என்று அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவளுடைய பாட்டி. சட்டென்று முழித்துப் பார்த்த போது தான், அது வெறும் கனவென்று உணர்ந்தாள். மீண்டும் அந்த கனவுக்குள்ளே போக மாட்டோமா என்ற ஏக்கத்தோடு தூங்கிப் போனாள் அனு.

“இருளின் கருமையையும் மீறிக் கொண்டு…
வெள்ளிக்கீற்றாய் தெரிந்த,
உன் இரு கண்கள் உணர்த்தியது…
அன்றும், இன்றும், என்றென்றும்,
நீ என்னுடன் இருக்கிறாய் என்று”


முற்றும்