Thursday, July 24, 2008

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part 3

அன்று: 1994 - 2000

சிட்டுவேஷன்: பள்ளி ஆண்டு விடுமுறை
நேரம்: அப்பாவும் அம்மாவும் வண்டியில் அலுவலகம் கிளம்பும் நேரம் - நாங்கள் செய்யும் லூட்டியை பொறுத்து, ஒன்பது மணி முதல், ஒன்பதரை மணிக்குள், ஒரு நேரம்.
இடம்: வீடு…

நான், அக்கா: அம்மா!!! டாடா...டாடா…

அம்மா: டாடா...டாடா…

நான், அக்கா: அப்பா! டாடா...டாடா…

அப்பா: ஹ்ம்ம்…ஹ்ம்ம்…இன்னும் சின்ன குழந்தைங்க மாதிரி டாடா சொல்லிகிட்டு…வரோம்…

அப்பா வண்டி பின்னாடி தெருவை தாண்டி போறதுக்குள்ள, நானும்,அக்காவும் தட தடன்னு ஒடி போய், வீட்டிற்க்கு பின்னால், காம்ப்பெளன்டு சுவர் ஓரமா, ஒரு ஸ்டூல் போட்டு ஏறி நின்னுக்கிட்டு, மறுபடியும்…

நான், அக்கா: அம்மா!!! டாடா...டாடா…

அம்மா: டாடா...டாடா…

அப்பா: உங்கம்மா என்ன ஃபாரினுக்கா போறா? போங்க உள்ள!!!

இன்று: 2005 - 2008

சிட்டுவேஷன்: வீட்டில இருந்து கிளம்பி, பெங்களூர் வரும் மற்றும் ஒரு ஞாயிற்றுக் கிழமை...
நேரம்: கண்யாகுமரி எக்ஸ்ப்ரஸ் டிரைவரின் இஷ்டப் படி...கோவை மக்களின் கஷ்டப் படி...இரவு பதிரோரு மணி முதல், அதிகாலை இரண்டு மணிக்குள், ஒரு நேரம்...
இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன்

அப்பா: டாடா...டாடா…

நான்: பை…பை…மனதிற்குள் (ஹீ ஹீ….என்ன கொடுமை ரகுபதி sir இது!!!)

24 comments:

Raghav said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.. உங்க வாழ்க்கையில நடந்த ஆயிரம் ஆயிரம் (So 1000000 மாற்றங்களை பதிவா போடப் போறீகளா ??

கண்ணன் பாடலுக்கு வாழ்த்தியமைக்கு நன்றி. இன்னும் தொடரும். நீங்களும் பங்களிக்கலாம்.

Raghav said...

//அப்பா: உங்கம்மா என்ன ஃபாரினுக்கா போறா? போங்க உள்ள!!!
//

எல்லார் வீட்லயும் இதே கேள்வி தானா?? அது ஏன் யாரும் அப்பாவுக்கு இப்புடி கேக்குறதில்ல..

யாராவது அப்பாக்களுக்கும் "50% பாச ஒதுக்கீடு" கிடைக்க வழி செஞ்சா நல்லா இருக்கும். யாராவது இருக்கீகளா??

ஜி said...

:)))) Maatram mattume maarathathu

Punarvasu said...

unakku mattum epdi ipdi ellam thonudu? :) nice observation though.

Ramya Ramani said...

Jooperuuu...

Tata dhane kekkanalla irukku :))

Divya said...

Krishna cafe part 3 potirupeenganu aasai aa......unga blog etty partha ingey neenga 'ta ta' flash back post potirukireenga:((

Divya said...

\\அப்பா: உங்கம்மா என்ன ஃபாரினுக்கா போறா? போங்க உள்ள!!!\

LOL:))

innum ethanai 'malarum nenaivugal' parts irukku????

itresting aa iruku.....thodarnthu eluthunga,
but...seekiram next part krishna cafe potudunga :)))

Vijay said...

நானும் என் தங்கையும் அம்மாவும் அப்பாவும் இப்படி சேர்ந்து வெளியில் போய் விட்டால் அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரி எங்கம்மா வெளியிலப் போயிட்டான்னு நிஜமாகவே கத்துவோம். ஒரு முறை இப்படித்தான் கதிக்கோன்டிருக்கும் போது அம்மா திடீரென்று entry கொடுக்க, என்னாச்சும்மா என்றதற்கு, வீட்டருகிலிருக்கும் ரயில்வே கேட் போட்டிருக்கான். ரயில் போனப்புறம் போறேன்னு சொன்னாங்க. அம்மா போனப்பறம் மறுபடியும் ஒரே சத்தம் கூசசல். எங்கம்மா நிஜமாவே வெளியிலே போயிட்டா :)

Divyapriya said...

@Raghav
//எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.. உங்க வாழ்க்கையில நடந்த ஆயிரம் ஆயிரம் (So 1000000 மாற்றங்களை பதிவா போடப் போறீகளா ??//

@Divya
//innum ethanai 'malarum nenaivugal' parts irukku????
itresting aa iruku.....thodarnthu eluthunga,//

அதெல்லாம் அப்பப்ப (அப்பாவ பத்தி :-)) தோணும் போது எழுதறது தான்…

Divyapriya said...

@Raghav
//கண்ணன் பாடலுக்கு வாழ்த்தியமைக்கு நன்றி. இன்னும் தொடரும். நீங்களும் பங்களிக்கலாம்.//

Thank you…கண்டிப்பா…இன்னும் சில கண்ணன் பாடல்கள் எழுதனும்...

Divyapriya said...

"@ஜி
//:)))) Maatram mattume maarathathu //"

யாரு ஜி யா?? ஹாஆஆ…தல ஜி யே தானா!!! எனக்கு தல சுத்துது, நம்பவே முடியல :-)

Divyapriya said...

"@Punarvasu
//unakku mattum epdi ipdi ellam thonudu? :) nice observation though. //
"
எல்லாம் எங்கப்பாவோட ஜீன் தான் ஐஷு :-))

@Ramya
//Jooperuuu…
Tata dhane kekkanalla irukku :))//

ஆமா ரம்யா..டாடா சொல்றதே செம ஜாலி தான்…:-)

Divyapriya said...

@விஜய்

ROFTL :-D //அம்மா திடீரென்று entry கொடுக்க// அப்ப உங்க reactiona நினச்சு பாத்தா…:-D

Divyapriya said...

@ஜி
//second standardlaiye neenga calculatorlaam use panna aarambitchiteengala... romba arivaalithaan ;))//

2nd std எல்லாம் இல்லங்க…பல வருஷங்கள் தொடர்ந்த (இன்னும் தொடரும்) கதை இது…இந்த calculator தொலஞ்சது காலேஜ்ல, ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா நடந்த கோர சம்பவம் அது :-((

ஜியா said...

//யாரு ஜி யா?? ஹாஆஆ…தல ஜி யே தானா!!! எனக்கு தல சுத்துது, நம்பவே முடியல :-)//

En intha kolaveri??

Divya said...

hi Divyapriya,

are you safe in Blore??

hope & wish that everything is fine at ur end,

take care!

Anonymous said...

ஆனாலும் அநியாயத்துக்கு அப்பாவ வம்பிழுக்கறீங்க....

இன்னும் எத்தனை மலரும் நினைவுகளோ? தொடருங்க

முகுந்தன் said...

hi divyapriya,

is the situation ok now in Bangalore ? take care of yourself....

முகுந்தன் said...

super.

//எல்லார் வீட்லயும் இதே கேள்வி தானா?? அது ஏன் யாரும் அப்பாவுக்கு இப்புடி கேக்குறதில்ல.. //

Divyapriya said...

@ ஜி
//En intha kolaveri??//

kolaveri illeenga thalaveri :-)

Divyapriya said...

//Divya said...
hi Divyapriya,

are you safe in Blore??

முகுந்தன் said...
hi divyapriya,

is the situation ok now in Bangalore ? //

thank you guys...the situation is very normal in b'lore yest n today but for the traffic...

Divyapriya said...

//மதி said...
ஆனாலும் அநியாயத்துக்கு அப்பாவ வம்பிழுக்கறீங்க....//

:-))

J J Reegan said...

ரொம்ப சின்ன ஊதுபத்தியா இருக்கு...

நானெல்லாம் டாடா காட்டலை ...

பதிலா பள்ளிக்கூடம் போவச்சொல்ராங்கனு அப்பவே க்ரைம் கதைதான் யோசிச்சேன். இப்போவெல்லாம் ஒரே செண்டி...

மணி said...

நிஜமாகவே சிரித்துவிட்டேன்