Friday, October 16, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 10

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9

15th Aug 12:00 A.M

“டங்…டங்…டங்…”
ஓஜா பலகையில் தீவிரமாக கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த மது, திடீரென்று சத்தமாய் கடிகாரச் சத்தம் கேட்டு பயந்து போய், “அம்மாஆஅ” என்று அலறினாள். கடிகாரத்தை திரும்பி பார்த்தவள் மணி பனிரெண்டு என்று அது காட்டிக் கொண்டிருக்க, ’உஸ்’ என்ற நிம்மது பெருமூச்சு விட்டாள். கடிகாரத்தின் அருகே இருந்த காலண்டரில் இருந்த ஆகஸ்ட் பதினான்காம் தேதி தாள், விடிந்ததுமே கிழிபடப் போகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் குதூகலமாய் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

பலமுறை ரதி செய்தது போலவே அவளும் அன்று வேலையை துவங்கினாள். அன்று அவளது முயற்சிக்கு சிறு பலனாய், “யாராவது இருக்கீங்களா? அம்மா…அம்மா” என்ற அவள் கேள்விக்கு ப்ளாசட் பலமாய் பலகை மேல் அங்கும் இங்கும் நகரத் துவங்கியது. கடைசியாக அவளது கைகள் தானாக “YES” என்ற எழுத்துக்கு தானாக சென்றது. உடனே வெற்றிக் களிப்பில் கூச்சலிட்டாள் மது, “அம்மா! வந்துட்டியா? அம்மா….அம்மா…” என்று அவள் உணர்ச்சிவசப் பட்டு கத்தவும், மீண்டும் பலகையில் அங்குமிங்கும் வேகவேகமாய் நகரத் துவங்கியது அவளது கைகள். அதன் பின் ஒரிடத்தில் நின்ற ப்ளேசட் சலனமே இல்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. மீண்டும் மதுவின் முகத்தில் ஏமாற்றத்தின் குறிகள். ’என்ன இது’ என்று அவள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே, “என்ன மது பண்ணிட்டு இருக்க?” என்ற அவளது சித்தியின் குரல் கதவுக்கருகில் சத்தமாக ஒலிக்க, அவசர அவசரமாக ஓஜா பலகையை மூடினாள்.

உக்கார்ந்த வண்ணமே திரும்பி, “ஹ்ம்ம்…ஒன்னுமில்ல…ஒன்னுமில்ல சித்தி…” என்றாள். தன் உடலால் ஓஜா பலகையை முழுவதுமாக மறைத்திருந்தாள்.
“என்ன மது இது மெழுகுவர்த்தி எல்லாம்? லைட் போட்டுக்க வேண்டியது தான?”

“அதுவா…சும்மா ஒரு…எக்ஸ்பிரிமெண்ட் பண்ணிட்டு இருந்தேன்…”

“சரி சரி…நேரம் ஆகுது…தூங்கு!” சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். மது தனக்குத் தானே சலித்துக் கொண்டாள். மீண்டும் அவள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. தான் அழைத்ததும், அம்மா அந்த இடத்துக்கு வந்து, வேறு மனிதர் சத்தம் கேட்டதுமே சென்று விட்டார் என்று தான் அவள் முழுமையாக நம்பினாள். மீண்டும் மறுநாள் யாருமில்லாத சமயம் பார்த்து முயற்சிக்கலாம் என்று யோசித்தபடி உறங்கச் சென்றாள்.

---
“வாங்க மதுக்கா…மொட்டை மாடியில தான ஃபங்ஷன் நடக்குது…அதுக்கு போய் எனக்கு உடம்பு சரியில்லை அது இதுன்னு ரொம்ப தான் பிகு பண்ணிக்கறீங்க…”
அன்று மதியத்திலிருந்தே மதுவின் சித்தி மகன், அவளை அன்று மாலை நடக்கவிருந்த சுகந்திர தின விழாவிற்கு வரச் சொல்லி விடாமல் நச்சரித்துக் கொண்டிருந்தான். மது நாசூக்காக தனக்கு உடம்பு சரியில்லை என்று ஏதேதோ காரணங்களை சொல்லி வந்தாள். சித்தியும் மகனும் அந்த விழாவிற்கு சென்ற பின்னர், வீட்டில் நிம்மதியாக மீண்டுமொரு முறை தன் வேலையை தொடரலாம் என்ற எண்ணம் அவளுக்கு. ஆனால் அவன் புரிந்து கொள்ளாமல் மதுவை தொந்தரவு செய்ததுமில்லாமல், பிகு செய்கிறாள் என்று சொன்னதும் அவளுக்கு சிறுது கோபம் வந்தது.

“என்ன பிரபு நீ? ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்க மாட்ட? என்னால வர முடியாதுன்னு சொல்றேன்ல? போய் உன் வேலையை பாரு…இனிமே என்னை தொந்தரவு பண்ணாத…ச்சே…நிம்மதியே இல்லை” என்று கோபமான குரலில் அவள் திட்டவும், அந்த சிறுவனுடைய முகம் வாடிப் போனது.

அதுவரை சமையலறையிலிருந்த காமாட்சி அங்கு விரைந்து வந்தார். வந்தவர் மகனை முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்து, “ஏன்டா? உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லை? அக்கா தான் வரலைன்னு சொல்றாங்களே…அப்புறம் எதுக்கு அவங்கள தொந்தரவு பண்ணிட்டு இருக்க? அவங்கெல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததே பெரிய விஷயம்…அத தெரிஞ்சுக்கோ…”

சித்தி குரலில் இருந்த வித்யாசம் மதுவிற்கு உரைக்க, அவள், “என்ன சித்தி சொல்றீங்க? இப்ப எதுக்காக அவனை தேவையில்லாம அடிச்சீங்க?”

“நான் என்னடீம்மா சொல்றது? எங்கக்கா இருந்த வரைக்கும் எங்கள கண்ணுல வச்சு தாங்கினாங்க…ஆனா உனக்கோ உங்கப்பாவுக்கோ நான் ஒருத்தி இருக்கறதே தெரியாதே….அம்மா இறந்தப்புறம் ஒரே ஒரு தடவை உங்கப்பாவோட வந்த….அதுக்கு அப்புறம் எத்தனை தடவை கூப்பிட்டிருக்கேன்? ஒரு தடவையாவது வந்திருக்கியா?”

“அதில்லை சித்தி…எனக்கு காலேஜ்ல…” என்று எதோ சமாதானம் செய்ய முற்பட்டவளை இடைமறித்த காமாட்சி, “நீ ஒன்னும் சொல்ல வேணாம்மா…என்ன தான் சித்தி, சித்தப்பாவா இருந்தாலும், நாங்க உங்ககிட்ட வேலை செய்யறவங்க…என் வீட்டுக்காரர் உங்கப்பா கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கறவரு தான? நீயெல்லாம் எங்க வீட்டுக்கும், இந்த மாதிரி சாதாரண ஃபங்ஷனுக்கும் வருவியா?”

மதுவின் கண்கள் தனாக கலங்கின, “என்ன சித்தி இப்படியெல்லாம் பேசறீங்க? நாங்க போய் அப்படியெல்லாம் நினைப்போமா? எங்கம்மாவும் இப்ப இல்ல…எங்கம்மாவுக்கு அடுத்து நீங்க தான எனக்கு எல்லாம்? அம்மாவ பாக்கனும் போல இருக்குன்னு தான நான் இங்க வந்தேன்…”

உடனே காமாட்சி அவளை ஓடி வந்து கட்டிக் கொண்டார், “மண்ணிச்சிடுடா கண்ணு….நான் ஏதோ பேசிட்டேன்…சரி…அழாத மா….அம்மா நம்மளோடையே தான் இருக்காங்க….நீ அந்த ஃபங்ஷனுக்கெல்லாம் ஒன்னும் வர வேண்டாம்…எல்லாரும் வீட்லையே இருப்போம்…”

கண்களை துடைத்துக் கொண்டவள், “இல்ல…இல்ல…நானும் வரேன்…” என்று சிரித்தபடி பதிலளித்தாள். அதன் பிறகு, தம்பி பிரபு வேறு, “சாரி கா…சாரி கா” என்று அவள் காலையே சுத்தி வந்தது அவள் மனதை சங்கடப்படுத்தியது. இவ்வளவு நாட்களாக தான் சித்தியை காரணமில்லாமல் தவறாக நினைத்துவிட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்தினாள்.

மாலை ஆறு மணியானதும், அந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக மூவரும் மொட்டை மாடிக்கு கிளம்பினர். மதுவும் ஓரளவு உற்சாகத்துடன் தான் கிளம்பினாள், அங்கு தான் பார்க்கப் போகும் காட்சி தான் தன் வாழ்வையே மாற்றி அமைக்கப் போகிறது என்பதை அறியாமல்.

*********************************************************************************************

பரத் அழைத்ததும், அங்கு நிற்கவே பிடிக்காதவர்கள் போல் நின்று என்னவென்று கேட்டனர் முகிலும் தனலட்சுமியும்.

பரத் தனலட்சுமியை பார்த்து, “நீங்க ரஞ்சித்தோட அம்மா தானே?”

“ஆமா…”

“உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கனும்ம்மா…”

முகத்தில் கேள்விக்குறியோடு தனலட்சுமியும், “சொல்லுங்க…”

“அந்த தரகர் அன்னிக்கு கோர்ட்ல சொன்னாரே…அதையெல்லாம் இவங்க உங்ககிட்ட சொன்னாங்களா?”

“ஆமா…அதுக்கென்ன?”

“இல்லை…அதெல்லாம் உண்மையான்னு கேக்கலாம்னு தான் உங்கள கூப்பிடடேன்…”
இதற்கு என்ன விடை சொல்வது என்று தெரியாமல் தனலட்சுமி குழம்பி தவிக்க, முகில், “இதெல்லாம் எதுக்கு சார் நீங்க தெரிஞ்சிக்கனும்?” என்று வேகமாய் கேட்டாள். இவனிடம் ஏதாவது சொல்லி ரஞ்சிதிற்கு பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

“இத பாருங்கம்மா…என்னோட வேலை குற்றவாளியை கண்டுபிடிக்கறது…உங்க ஹஸ்பென்ட் எந்த தப்பும் செய்யலைன்னு நீங்க நினைச்சா, எந்த உண்மையையும் மறைக்காம சொல்லுங்க…அது உங்க ஹஸ்பெண்டுக்கே கூட உதவியா இருக்கலாமில்லையா?”

பரத் இப்படி கேட்கவும், முகில் தனலட்சுமியை பார்த்தார், “ஆமா சார்…அந்த தரகர் சொன்னது உண்மை தான்…ஆனா, என் மகனுக்கு இந்த ஜாதகம், ராசி இது மேல எல்லாம் ஒரு வெறுப்பு…எப்பயுமே எங்ககிட்ட அதெல்லாம் பாக்காதீங்கன்னு சண்டை பிடிப்பான்…அந்த பொண்ணு ராசி சரியில்லைன்னு நான் தான் கல்யாணம் வேணாம்னு சொன்னேன்…அதனால தான் அவன் என்கிட்ட கோவிச்சுகிட்டு அப்படி சொன்னான்…அவன் சொன்னதால மட்டும் இல்லை, சாதாரணகாவே அவனுக்கு நேரம் சரியில்லைன்னு தான் நானும் ஒரு வருஷம் அவனுக்கு பெரிசா பொண்ணு எதுவும் பாக்கல…ஆனா அந்த தரகர் ரெண்டு, மூணு தடவை வீட்டுக்கு வந்திருக்காரு…ஒரு தடவை, அவர் இருக்கும் போதே, இவன் அதே பொண்ண பாருங்கன்னு என்கிட்ட சண்டை பிடிச்சான்…அத தான் அவரு அன்னிக்கு சொல்லியிருக்காரு…”

“ஓ ஹோ….ஆமா அந்த தரகர உங்களுக்கு நல்லா பழக்கமா?”

“அவரை எங்களுக்கு தெரியாது…மதுவந்த்தி ஜாகத்த அவரு தான் கொண்டு வந்து குடுத்தாரு…அப்ப புடிச்சு தான் எங்களுக்கு அவரை தெரியும்…”

“ஓ…சரிம்மா…இத தான் கேக்கனும் நினைச்சேன்…நன்றி” பேசாமல் அமைதியாய் நின்றிருந்த முகிலை பார்த்து நட்போடு சிரித்து விட்டு அங்கிருந்து அகன்றார் பரத்.

எதற்காக இதெல்லாம் கேட்கிறார் என்று எதுவுமே புரியாமல் குழப்பத்துடன் வீட்டிற்கு கிளம்பினர் தனலட்சுமியும் முகிலும்.

காவல்நிலையத்தை அடைந்த பரத், முருகேசனை அழைத்து ரஞ்சித் வழக்கின் சாட்சி விவரங்கள் அடங்கிய போப்பை எடுத்து வர சொன்னார். அதில் தீவிரமாக ஆழ்ந்தவர், முருகேசனை அழைத்து,

“இந்த ராமன் ங்கறது தான் அந்த தரகரா?”

“இந்தாள யாரு விசாரிச்சா?”

“நம்ம யெஸ்.ஐ தான் சார்…” யெஸ்.ஐ என்று காதில் விழுந்ததுமே, காது குடைந்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, “என்ன சார்?” என்று பரத்தை பார்த்து கேட்டார் அந்த யெஸ்.ஐ.

“இந்த ராமன் பத்தின தகவலை எப்படி புடிச்சீங்க? நீங்க தான் அவனை விசாரிச்சதா?”
“ஆமா சார்….ஒரு வாரத்துக்கு முன்னாடி நீங்க ஸ்டேஷனல இல்லாத நேரம் ஒருத்தன் வந்தான், இந்த கேஸ பத்தி என்கிட்ட தகவல் இருக்கு…நான் தான் ரஞ்சித்துக்கும் அந்த மதுவந்த்தி பொண்ணுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணே்ன்னான்…சரின்னு நான் தான் அவனை வக்கீல் மேடத்துகிட்ட அனுப்பி வச்சேன்…”

“அவனை அப்படியே விட்டுடீங்களா? அவனை என்ன ஏதுன்னு விசாரிக்கலை?”

“அவனே தான் அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லிட்டானே…அதுக்கு மேல அவனை விசாரிக்க என்ன கிடக்கு?”

பரத் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, “சார்! கொஞ்சமாவது யோசிச்சிருந்தீங்கன்னா, அவனை விட்டிருக்க மாட்டீங்க! எவனாவது தானா முன்வந்து சாட்சி சொல்ல வருவானா? போலீஸ் விசாரிக்கரேன்னு போனாலே, அலறியடிச்சிட்டு ஓடுவாங்க…அவனா பேப்பர்ல பாத்துட்டு வந்து துப்பு குடுக்கறான்னா….அத அவனா பண்ணானா, இல்ல வேற யாரும் அவங்க மாட்டாம, ரஞ்சித் மாட்டினா நல்லதுன்னு அவனை அனுப்சாங்களான்னு எப்படி தெரியும்?”

“அவன் என்னத்த அப்படி பெரிய தகவல் குடுத்துட்டான்னு அவனை ஏன் விட்டேன்னு கேக்கறீங்க? ஏதோ அவங்க ரெண்டு பேரையும் தெரியும்ன்னா…அதுக்கு போய்…”

“இல்லை சார்…இதுல என்னவோ திட்டம் இருக்கு…அந்த தரகர் ராமன் அவனா முன்வந்து சாட்சி சொல்லியிருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை…வேற யாரோ தான் அவனை அனுப்சிருக்கனும்…அந்தாளுக்கு வேற யார் கூட எல்லாம் பழக்கம் இருக்க முடியும்? ஹ்ம்ம்…” முகவாயை நீவியபடி யோசித்தவர், “மது அம்மா இப்ப இல்லை…அவங்க அப்பாவுக்கு தெரிஞ்ச ஆளா இருக்கலாம்…ஆனா அவரையும் இப்ப கேக்க முடியாது, அந்தாளு ஆஸ்பத்திரியில ஸ்ட்ரோக் வந்து படுத்து கிடக்கறாரு…ஹ்ம்ம்ம்…அந்த பொண்ணோட சித்தி, அது பேரென்ன?”

“காமாட்சி சார்…”

“ஹான்…காமாட்சி…அந்தம்மா கிட்ட தான் கேக்கனும்…சரி…நான் இப்பயே கிளம்பறேன்…” பரத் சென்றதும் யெஸ்.ஐ மீண்டும், “நான் சொன்னேன்ல? இந்தாளுக்கு பைத்தியம் தான்யா புடிச்சிருக்கு…என்னவோ அந்த ரஞ்சித் பயலை வகையா மாட்டி விட்டுட்டான்…புத்திசாலி தான்னு நினைச்சா, இப்ப மறுபடியும் முறுங்கமரம் ஏறிட்டான்?” சத்தமாக சலித்துக் கொண்டார் அந்த வயதான யெஸ்.ஐ. முதலில் மதுவந்த்தி தற்கொலை தான் செய்து கொண்டாள் என்று யோசித்தவர், இப்போது ரஞ்சித் பிடிபடவும், அவன் தான் அந்த கொலையை செய்திருப்பான் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். ஆனால் பரத் விடாமல் வேறு ஏதோதே கோணங்களில் விசாரணையை தொடர்ந்தது அவருக்கு அவசியமில்லாத ஒன்றாகவே பட்டது.

காமாட்சியிடமும் ராமனிடமும் விசாரித்த பரத்திற்கு ஒரே பதில் தான் கிடைத்தது. ராமனுக்கும் ஒரு வருடம் முன்னதாகவே இறந்து போன மதுவந்த்தியின் அம்மாவுக்கும் தான் முன்னமே பழக்கம் என்று. இதற்கு மேல் என்ன செய்யலாம் என்று யோசித்த பரத் நேரே மது தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். மதுவின் அறையை பகிர்ந்தவர் யார் என்று விசாரித்தவருக்கு அங்கும் ஏமாற்றமே கிடைத்தது. அந்த பெண் வேறு ஒரு ஹாஸ்டலுக்கு சென்று விட்டதாகவும் அவர்களிடம் அவளது புதிய முகவரி இல்லை எனவும் பதிலளித்தனர். அந்த பெண்ணின் பெயர் திவ்யா என்றும், அவள் கல்லூரி முடித்து மதுரையில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து விட்டாள் என்பதையும் தவிர வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சென்ற இடங்களில் எல்லாம் ஏதோ முட்டுக் கட்டை வருவதாகவே தோண்றியது அவருக்கு. எப்படியும் அடுத்த ஹியரிங்கிற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கவே, இப்போது விட்டு, சிறுது நாள் கழித்து மீண்டும் பிடிப்போம் என்று முடிவெடுத்தபடி அங்கிருந்து சென்றார்.

அசுர வேகத்தில் மூன்று மாத காலமும் நகர்ந்தது. ரஞ்சித்தின் அடுத்த ஹியரிங்கிற்கு இன்னும் ஓரிரவே எஞ்சியிருந்த நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார் பரத். முந்தயை விசாரணைகளின் போதும், நீதிமன்றத்திலும் ரஞ்சித்தின் முகத்தில் சிறுதளவு கூட குற்ற உணர்ச்சி இருக்கவில்லை, மாறாக அவன் முகத்தில் ஒரு பரிதவிப்பும், பரிதாபமும் மட்டுமே நிறம்பியிருந்தது. யார் கேட்டாலும், எதற்காக அவன் மாடிக்கு போனான் என்று அவன் சொல்லாவிட்டாலும், அதை சொல்லாமல் மறைப்பதில் அவன் முகத்தில் ஒரு வித திருப்தி இருந்தது.

முகிலின் அழுது சிவந்த முகமும் அவர் மணக்கண் முன் தோண்றியது. பார்த்தால் புத்திசாலியாக தெரிகிற இந்த பெண், கண்மூடித்தனமாக கணவனை நம்புபவளாக தோண்றவில்லை. அவர்களுக்குள் வேறு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும், அது இந்த கேஸிற்கு சம்பந்தமில்லாமல் கூட இருக்கலாம். ’ஒரு வேளை அவன் எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டானோ?’ என்ற எண்ணம் அவரை சஞ்சலப் படுத்தியது. இவ்வாறு பல கோணங்களில் யோசித்து அவருக்கு தலை வலிக்க தொடங்கவே, நேராக வீட்டிற்கு புறப்பட்டார். வீட்டுக்கு செல்லும் வழியில் அண்ணா நகரில் கஃபே காஃபி டேயை பார்த்தவர், அங்கேயே வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு கடைக்குள் நுழைந்தார்.

“இப்ப நீங்க கேட்டுக் கொண்டே இருப்பது சூர்யன் FM… 93.5… ஊர் சுற்றலாம் வாங்க! நான் உங்க கோமதி! இப்ப நாம அண்ணாநகர்ல இருக்கற கஃபே காஃபி டேயில இருக்கற நேயர்களை சந்திப்போமா?”

’என்னடா இது தலைவலின்னு வந்தா இப்படி உயிர வாங்கூறாங்க’ என்று சலித்துக் கொண்ட பரத் தன் காஃபியுடன் ஓரமாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார்.

“உங்க பேரு…”
“மஞ்சு!”
“உங்க பேரு…”
“அகி்லா…”
“நீங்க…”
“ஸ்மிரிதி….”
“ஸ்மிரிதி? நைஸ் நேம்….”
அந்த பெண்கள் கும்பலை கேள்வி கேட்டுக் கொண்டிருந்த ஆர்.ஜே கோமதி, அவர்களுக்கு நடுவே அமைதியாக அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் , “ஆமா…நீங்க மட்டும் என்ன அமைதியா இருக்கீங்க? உங்க பேர் சொல்லுங்க…”
“ஹ்ம்ம்…திவ்யா!”
“திவ்யா….உங்களுக்கு பிடிச்ச பாடல உங்களுக்கு பிடிச்ச நபருக்கு நீங்க டெடிகேட் பண்ணலாம்…சொல்லுங்க…என்ன பாட்டு, யாருக்கு?”
சிறிது நேரம் யோசித்த திவ்யா, “தேவதை வம்சம் நீயோ பாட்டு…”
“சூப்பர் சாங்…யாருக்கு டெடிகேட் பண்றீங்க?”
“என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு மதுவுக்கு…”
“உங்க தேவதை மது எங்க? இங்கில்லையா?” சிரித்துக் கொண்டே கோமதி கேட்க,
தட்டுதடுமாறிய படி திவ்யா, “ஷீ இஸ்…ஷீ இஸ்…நோ மோர்…” என்றாள்.

[தொடரும்]

15 comments:

சங்கர் said...

விறுவிறுப்பான கதையோட்டம் கதையோட நம்மளையும் இழுத்துட்டு போகுது..
அடுத்த பாகத்த சீக்கிரம் போடுங்க!!

Prabhu said...

அப்புறம்? :)

Raghav said...

Read half story in mobile using gprs. Good screen play in the story. Increase the pace. Last two posts are little slow pa.

sri said...

pona pagudhila pona sudu endha pagutheela vandhiruchu, super back on track! waiting for next on :)

Happy Diwali Divya

gils said...

divs...en ipdi paduthareenga...vara varam oru postulaam katupadi aagathu..seekrama postunga

*இயற்கை ராஜி* said...

seekiram next part pls... suspense la vidureengalee..

kathai as usual.. athavathu super nnu solla vanthen..:-))

Raghav said...

Whav Divya.. remaining post ippa than padichchen.. Good pace in the story.. Oru storyla iththana mudichchugala.. chancey illa.. Imaginey pannatha tharagar paththi yosikka vachathu kalakkal.

Eppudi intha madhiri kadhai pidikkireengalo.. Hats off..

anbudan vaalu said...

intresting part.....

Nimal said...

சூப்பரா போகுது... சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்க...

தீபாவளி வாழ்த்துகள்...!!!

Karthik said...

me the 10th! (EKS ithu?)

ha, the story has begun its rush towards the climax.. the last line made me almost jump outta my chair.. wth has happened? post next part soon plzzz...

btw, happy diwali! :)

Unknown said...

Very gripping!!!Cant wait for the next episode. Try writing the next parts twice a week :)

Nithya said...

just now read 10th part..quickly post all the remaining posts :)

Rajalakshmi Pakkirisamy said...

seekiram adutha part please

pari@parimalapriya said...

Happy Diwali Divya..
story has regained its pace..gr8! seekiram next part post pannunga!!!

நாஸியா said...

அடுத்த பாகத்த சீக்கிரம் போடுங்கப்பா!

I feel really very nostalgic after reading your blogs!

“தேவதை வம்சம் நீயோ பாட்டு…” மறக்க முடியாத பாட்டு!