Wednesday, September 23, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 5

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4

“என்ன மது குழப்பம்?”
திவ்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அதி தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் மது.
“ஹலோ மேடம்!!!”
“சொல்றேன்…சொல்றேன்…அதுக்கு தான உன்னை வர சொல்லியிருக்கேன்…அந்த ரஞ்சித்தோட பேசினேன்…”
“ஹ்ம்ம்…”
“நல்லா தான் பேசினான்…”
“அப்புறம் என்ன?”
“ஆக்ட்சுவலா ரொம்ப நல்லா பேசினான்…ஒரு மணி நேரம் போனதே தெரியல…அவன் எல்லா விஷயத்திலையும் ரொம்ப தெளிவா, கான்ஃபிடென்ட்டா இருக்கற மாதிரி தெரிஞ்சுது…ஆனா…எனக்கு தான் ஒரு சந்தேகம்…”

“என்ன சந்தேகமோ, அதை அவன்கிட்டையே கேட்டிருக்க வேண்டியது தான?”
“அதில்லை திவ்ஸ்…முதல் தடவையா அவனோட பேசினேன்…இதுக்கு முன்னாடி அவன் யாருன்னு கூட தெரியாது, அவன நேர்லையும் பாத்ததில்லை…அப்படி இருக்கும் போது, எனக்கு ஏன் அவனை அவ்ளோ பிடிச்சிருக்கு? அவன் ஃபோன வைக்கவான்னு சொல்லும் போது எனக்கு மனசே இல்லை….”

“அடக் கஷ்டமே!!!” திவ்யா நக்கலாக சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“என்ன திவ்யா சிரிக்கற? எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல…எங்க அம்மாகிட்ட பிடிச்சிருக்குன்னு சொல்லலாம் தான்…ஆனா….ஒரு வேளை இதெல்லாம் முதல் முறையா நடக்கறதால, நான் எக்ஸைட் ஆகி இப்படி முடிவு பண்றேனோன்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு…இது சரியா, இல்லையான்னு யோசிக்கவே முடியல…”

“இவ்ளோ தானா உன் சந்தேகம்? இது வரைக்கும் நீ எத்தனையோ பேர பாத்திருக்க, பேசியிருக்க.,..ஆனா, கல்யாணத்துக்காகன்னு பேசினது இது தான் முதல்முறைங்கறதால நீ எக்ஸைட் ஆகியிருக்கலாம்…அது இல்லைன்னு சொல்ல முடியாது…ஆனா, ஒருத்தங்களோட நமக்கு அலைவரிசை ஒத்து போச்சுன்னா தான், பேச்சே சுவாரசியமா இருக்கும், நமக்கும் அவங்கள பிடிக்கும்…எனக்கென்னவோ நீ இன்னொரு தடவை, கொஞ்ச நாள் கழிச்சு பாத்து பேசிட்டு முடிவு பண்ணலாம்னு தோணுது…”

“ஹ்ம்ம்…எப்படியும் அது நடக்கத் தான் போகுது…அவங்க இப்ப தான் ஃபோன் பண்ணி, பையனுக்கு பிடிச்சிருக்கு…ஒரு நல்ல நாளா பாத்து நாங்க உங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க….அம்மா தான், என்கிட்டையும் அப்பா கிட்டையும் பேசிட்டு சொல்றேன்னு ஃபோன வச்சுட்டாங்க…”

“அப்புறம் என்ன? சீக்கரமே டும் டும் டும் தான்…சரி…நாம போய் பால் பாயாசத்த ஒரு பிடி பிடிக்கலாம்…வா…” மதுவின் கையை பற்றி இழுத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் திவ்யா. அங்கு ஊரையே தூக்கும் அளவிற்கு, பால் பாயாசத்தின் மணம் வீசிக் கொண்டிருந்தது.

“என்ன ஆண்ட்டி? மது என்ன சொல்லப் போறான்னே தெரியாம, அதுக்குள்ள பால் பாயாசம் செஞ்சு முடிச்சிட்டீங்க?”

“ஏன்? என் பொண்ணப் பத்தி எனக்கு தெரியாதா? என்ன மது?”

“அம்மான்னா அம்மா தான்…” என்றபடி தன் அம்மாவை கட்டிக் கொண்டாள் மது. இதை பார்த்த திவ்யா, “அடப்பாவிகளா…அப்புறம் என்னை எதுக்கு நடுவுல வரச் சொன்னீங்க? ஏதோ பெரிசா நம்ம உதவி கேக்கறாங்களேன்னு நினைச்சு வந்தா, இங்க எல்லாமே சப்புன்னு முடிஞ்சிருச்சு!”

“ஹா ஹா…அப்படியில்லம்மா…கல்யாணம் முடிவாகப் போகுது…அதான் உடனே உன்னையும் வரச் சொன்னேன்…மது! இப்ப தான் அப்பா பேசினாரு…இந்த வார வெள்ளிக் கிழமையே பொண்ணு பாக்கறத வச்சுக்க சொன்னாரு…”

“ஏன்? அவரு வரமாட்டாராமா?”

“இப்பயே எப்படிமா வர முடியும்? கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் இருக்கும் போது தான் வருவாரு…அதான், உனக்கு நான் இருக்கேன்ல? அப்புறம் என்ன?”

’வெள்ளிக் கிழமைக்கு இன்னும் ஐஞ்சு நாள் தான் இருக்கு…’ என்ற நினைப்பே, அவளை என்னவோ செய்தது. ஒரே நொடியில், ஒரு வித பரபரப்பும், சந்தோஷமும், அச்சமும் ஒரு சேர மதுவை ஆக்ரமித்துக் கொள்ள, மாலை ரஞ்சித்தின் அழைப்புக்காக காத்திருக்கத் துவங்கினாள்.

******************************************************************
கண்ணீர் விட்டு அழுவதற்கு கூட தோன்றாமல் திக்பிரம்மை பிடித்ததை போல் நின்று கொண்டிருந்தாள் முகில். ’ஹய்யோ, பகவானே!!! இது என்ன சோதனை’ என்று சத்தம் போட்டு அரற்றிக் கொண்டிருந்தார் தனலட்சுமி.

“சார்…நான் உண்மையை சொல்லிடறேன்…அந்த பொண்ணு கீழ குதுக்கும் போது, நான் அங்க இருந்தது உண்மை…நான்…நான்…அவள காப்பாத்த முயற்சி பண்ணேன்…ஆனா..அவ…அவ…கீழ குதிச்சிட்டா…அவளை யாருன்னு கூட எனக்கு தெரியாது சார்…எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…”

“எது சொல்றதா இருந்தாலும் ஷ்டேஷன்ல வந்து சொல்லுங்க சார்…உங்கள ஷ்டேஷன்ல வச்சு விசாரிக்க ஆர்டர் இருக்கு…நீங்க சொல்ற மாதிரி யோக்கியமானவரா இருந்தா, இப்ப சொல்றத முன்னாடியே சொல்லியிருக்கனும்…அப்ப நல்லா கதை விட்டுட்டு, இப்ப வந்து சொன்னா என்ன அர்த்தம்? ஏதோ படிச்சவரா இருக்கீங்க, புரிஞ்சு உடனே வருவீங்கன்னு நானும் டீஸன்ட்டா பேசிட்டு இருக்கேன்…இல்லன்னா நடக்கறதே வேற…”

“முகில்…” அதற்கு மேல் எதுவும் பேச அவனுக்கு நா எழவில்லை. அவன் அப்பாவை நிமிர்ந்து பார்க்கும் சக்தியற்று, தலைகவிழ்ந்தவாறே, “அப்பா! ஏன்ப்பா எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க? நான் எந்த தப்பும் பண்ணலைப்பா…”

“அப்புறம் எதுக்குடா பொய் சொன்ன?” நெருப்பு துகள்களாய் வந்து விழுந்தது அவரது வார்த்தைகள்.

“அப்பா…வந்து…”

“உங்க பிரச்சனையெல்லாம் அப்புறமா வச்சுக்கோங்க…முதல்ல கிளம்புங்க…நீங்களா வந்தா நல்லாயிருக்கும்…”

ரஞ்சித் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாய் கதவை நோக்கி நகரவும், அதுவரை அமைதியாய் சிலைபோல் நின்றிருந்த முகில், திடீரென்று உயிர்ப்படைந்தைப் போல், “ஹய்யோ…ரஞ்சி…” என்று கதறிக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள்!

****
காவல் நிலையத்திற்கு ரஞ்சித் சென்ற ஒரு மணி நேரத்திலேயே, ஒரு வக்கீலுடன் காவல் நிலையத்தை வந்தடைந்தனர் ரஞ்சித்தின் அப்பாவும் முகிலும். அவர்களை பார்த்ததும், ஏற்கனவே எரிச்சலுற்றிருந்த பரத் மேலும் கொதிப்படைந்தார்.

“என்ன சார்? என்ன பிரச்சனை இப்போ? சந்தேகம் இருக்கு அவர் மேல…விசாரணை இன்னும் முடியல…அதுக்குள்ள வக்கீலோட வந்து நிக்கறீங்க? எப்படியும் ரெண்டு நாள் மேஜிஸ்ட்ரேட் கிட்ட ரிமாண்ட்ல வச்சு விசாரிக்க பெர்மிஷனுக்கு கோர்ட்டுக்கு தான போக போறோம்? அங்க வந்து காட்டுங்க…உங்க பவரையெல்லாம்…”

“என்ன சார் பேசறீங்க? சம்மந்தமே இல்லாத ஒரு ஆள பிடிச்சுட்டு வந்து விசாரிப்பீங்க…”

அதற்கு மேல் வக்கீலை பேச விடாமல் இடைமறித்தார் பரத், “சம்மந்தம் இருக்கா இல்லையான்னு நீங்க சொல்ல வேண்டாம்…எல்லாம் சம்மந்தம் இருக்கறதால தான் கொண்டு வந்து விசாரிச்சுகிட்டு இருக்கோம்!” என்று குரலை உயர்த்தி கத்தினார்.

“சார்…அவரு சொஸைட்டியில ஒரு நல்ல…”

“நிறுத்துங்க சார்…ச்சும்மா…மனுசன வேலை செய்ய விடாம…நானே ஒரு மணி நேரத்துல அனுப்பி வைக்கறேன்…நாளைக்கு ரிமாண்ட் கேட்டு கோர்ட்டுக்கு போகும் போது, பேசிக்கோங்க…உங்க சொஸைட்டி, அந்தஸ்த்து இதெல்லாம்…நடுராத்தியில ஒன்பது மாடி ஏறி மொட்டைமாடிக்கு போயிருக்கான்…பிரஸ்லட்ட அப்ப விட்டுட்டு, முன்னாடியே தொலைஞ்சிடுச்சுன்னு புழுகியிருக்கான்…அந்த பொண்ண இவன் தான் தள்ளிவிட்டான்ங்கறத கண்ணால பாத்த சாட்சி இருக்கு…இதுக்கு மேல என்ன சார் வேணும்?”

உறைந்து போய் நின்றிந்த ரஞ்சித் அப்பாவிடம், பரத், “சார்…எதுக்காக உங்க அருமை புள்ளை ராத்திரி பனிரெண்டு மணிக்கு மொட்டை மாடிக்கு போனாருன்னு நீங்களே வேணா கேட்டுப் பாருங்க...இன்னைக்கு ஒரு நாள் போகட்டும்…ஆர்டர் மட்டும் வரட்டும், அப்புறம் விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, உண்மை தானா வரும்…”

“முருகேசன்! அந்தாளோட கைரேகைய எடுத்துட்டு இவங்களோட அனுப்பி விடுங்க…”

சிறிது நேரத்திலேயே அவர்கள் நால்வரும், காவல் நிலையத்திலிருந்து காரில் மீண்டும் வீட்டிற்கு பயணப்பட்டனர்.

“ஹலோ ரஞ்சித்…நான் சுமன்...” வக்கீல் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டார். ரஞ்சித் பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல், ஒரு தயக்கப் புன்னகையை மட்டும் புரியவும், முகில், “என்ன ரஞ்சி இதெல்லாம்? என்ன தான் ஆச்சுன்னு சொல்லுங்களேன்…நிஜமாவே நீங்க முந்தாநேத்து ராத்திரி மாடிக்கு போனீங்களா?”

“ஹ்ம்ம்…ஆமா…”

“எதுக்கு???”

“ரஞ்சித்! ஒரு விஷயமும் மறக்காம, மறைக்காம தெளிவா சொல்லுங்க…” சுமன் இப்படி கேட்கவும், ரஞ்சித் அன்று நடந்த சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தான்.

“அன்னிக்கு நான் ஒரு பன்னெண்டு மணிக்கு மாடியில அந்த ரூம்ல நின்னுகிட்டு இருந்தேன்…”

முகில், “அதான் எதுக்குன்னு….” உடனே அவரை இடைமறித்த சுமன், “விடுங்க மேடம்…அவரு முழுசா சொல்லட்டும்…”

“அப்ப யாரோ அழுகற மாதிரி சத்தம் கேட்டுச்சு…ஏதோ உருள்ற மாதிரியும் சத்தம் கேட்டுச்சு…இன்னேரத்துல யாருன்னு, நானும் கதவை திறந்துட்டு மாடிக்கு போனேன்…அப்ப….அந்த பொண்ணு மாடி திண்டு மேல ஏறி நின்னுகிட்டு, ஏதோ புரியாத மாதிரி என்னவோ பேசிகிட்டு அழுதுட்டே இருந்தா…நானும் உடனே அவ நின்னுட்டு இருந்த இடத்துக்கு ஓட ஆரம்பிச்சேன்…அவ கையில ஒரு மெழுகுவர்த்தி வச்சிருந்தா…நான் போய், அவள இறங்கு இறங்குன்னு சொல்லி, அவ கையை பிடிச்சு கீழ இறக்கப் பாத்தேன்…அப்ப அவ கை தவறி அந்த மெழுவர்த்தி தீ என்னை சுட்டுடுச்சு…நான் அசந்த அந்த ஒரு நொடியில என் பிடியிலிருந்து திமிறி, ’அம்மா நான் வந்துட்டேன்ம்மா…’ ன்னு கத்திகிட்டே, அவ கீழ குதிச்சிட்டா…இவ்ளோ தான் நடந்துச்சு…எனக்கு ரொம்ப படபடப்பா ஆயிட்டதால, நான் இதை யார்கிட்டையும் சொல்லலை… மறுபடியும் வீட்டுக்கு வந்து பேசாம படுத்துட்டேன்…”

“எல்லாம் சரிதான்டா…ஆனா, முதல்ல அந்த நேரத்துல எதுக்காக நீ அங்க போன?”

“அப்பா…அது…சும்மா தான்ப்பா…காத்து வாங்கலாமேன்னு…” ரஞ்சித் தடுமாறிய விதத்திலேயே மிக நன்றாக தெரிந்தது அவனுக்கு பொய் சொல்ல வராதென்று.

“ரஞ்சித்! நீங்க எதுக்கு போனீங்கன்னு சொன்னா தான் இந்த கேஸுக்கு உதவியா இருக்கும்…”

“அதான் சொன்னேனே சார்…காத்து வாங்க தான்…”

ரஞ்சித் அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, “பாருடா…இந்த பொண்ணு மூஞ்சிய பாரு…எவ்ளோ பெரிய ஆபத்துல மாட்டியிருக்கேன்னு தெரியுமா? காத்து வாங்க ஒன்பது மாடி ஏறிப் போனேன்னு சொன்னா போலீஸ்காரன் நம்புவானாடா? அவங்கள விடு, நானே முதல்ல நம்ப மாட்டேன்…ஒரு மாடி ஏர்றதுக்கு கூட லிஃட்ல போறவன்…நைட்டு லிஃப்ட்டும் ஆஃப் பண்ணி வச்சிருக்கறப்போ, ஒன்பது மாடி ஏறிப் போனியா?”

ரஞ்சித் பதில் சொல்லாமல் இருக்கவும், கெஞ்சும் பாவனையில் முகில் அவனை பார்த்தாள்.

சுப்பிரமணியம் பொறுமையிழந்தவராய், “இப்ப சொல்ல போறியா இல்லையாடா? அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?”

“அப்பா!!! அவ யாருன்னே எனக்கு தெரியாதுப்பா…”

“அப்ப சொல்லுடா!!! நடுராத்திரியில உனக்கு டெரெஸ்ல என்ன வேலை?”

“ப்ளீஸ்ப்பா…அத மட்டும் என்கிட்ட கேக்காதீங்க…என்னால…என்னால…சொல்லமுடியாது…”


[தொடரும்]

23 comments:

gils said...

match fixing panna vadai enakay :D

gils said...

//அடப்பாவிகளா…அப்புறம் என்னை எதுக்கு நடுவுல வரச் சொன்னீங்க? ஏதோ பெரிசா நம்ம உதவி கேக்கறாங்களேன்னு நினைச்சு வந்தா, இங்க எல்லாமே சப்புன்னு முடிஞ்சிருச்சு//

hahahah...ithu bulbu :D i too neriaa vangiruken similar balbs

gils said...

/ப்ளீஸ்ப்பா…அத மட்டும் என்கிட்ட கேக்காதீங்க…என்னால…என்னால…சொல்லமுடியாது…”//

avvvvvvvvvvvvvvvvvv....enga en en en...y this murder veri..adutha partuku inum one weeka..vikatanla thodar kathai padikara mathiri iruku!! wonderful flow..apdiye scene by scene kan munala oduthu :) chancela dp...kalkareenga

சங்கர் said...

Romba azhagaa narrate panni irukkeenga..
semma flow la poitu irukku.. adutha parta seekkirama podunga..

Faiza said...

You are amazing, girl!!! this story is really superb, looking forward for more from you!

G3 said...

avvvvvvvv... Aniyaayathu fasta kondu poreenga narrationa.. aana adutha adutha parta mattum latea podareengalae :(((((

Prabhu said...

அந்த பய லூசா? ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறான்?

திவ்யா கேரக்டர் கதையிலயும் காமெடி பீஸா? :)

Karthik said...

இந்தக் கதைய முடிக்காம கன்னித்தீவு மாதிரி அப்படியே கண்டினியு பண்ண முடியாதா? எல்லா பார்ட்டும் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கே! :))

anbudan vaalu said...

very good flow...please post the next part soon....

Raghav said...

நல்லா விறுவிறுப்பா போகுது திவ்யா.. எதிர்பார்ப்புகளும் தான்.. ரஞ்சித் குற்றவாளியா இருக்க மாட்டார்னு தோணுது.. பாப்போம்.

Mohan R said...

9 maadi.... night 12 mani.... meluguvarthi.... tholanchu pona bracelt.... appuram... appuram.... SIkiram adutha part podunga

Nimal said...

சூப்பரா இருக்கு...
சஸ்பென்ஸ கூட்டீட்டே போறீங்க...

Waiting for the next part....!

நட்புடன் ஜமால் said...

2,3,4 இன்னும் படிக்கலை

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப லேட்

மொத்தமா படிச்சிட்டு வாறேன்.

Anonymous said...

//G3 said...
avvvvvvvv... Aniyaayathu fasta kondu poreenga narrationa.. aana adutha adutha parta mattum latea podareengalae :(((((//

repeattu :-(((

Badri said...

pinra po :-)

kettavan said...

வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அருமை.
இதுவரை நான் படித்தது விரல் விட்டு என்ன கூடிய அளவுதான், உங்க ப்லாக் நால அதிகம் படிக்கிறேன்.
நன்றி என்னை படிக்க தூண்டிய உங்கள் எழுத்துக்களுக்கு.

mvalarpirai said...

As usual :) pakka

MSK / Saravana said...

என்ன இது.. செம ஃப்ளோல ஒரு திகில் கதை..!!!
கதை நல்லா இருக்குங்க.. கலக்கல்..

MSK / Saravana said...

அடுத்த பார்ட் எப்போ போடுவீங்க??

மதி said...

கடைசீல என்னால சொல்ல முடியாதுன்னு மொக்கையா முடிச்சா இருக்கு சேதி..

இதுவரை நல்லா தான் போய்ட்டு இருக்கு...!

மேவி... said...

nalla irukku ......


next part eppooo

*இயற்கை ராஜி* said...

ம்ம்..விறு..விறு..சுறு..சுறு

sri said...

super a erukku miss pannitomonnu odi vandhu padichuttu erukken :)