Tuesday, October 27, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 12

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9, பாகம் 10, பாகம் 11

15th Aug 12:00:35 A.M

நடுங்கும் கரங்களுடன் வேகவேகமாய் எண்களை கதவில் அழுத்திய ரஞ்சித்திற்கு கைகள் வேர்த்தது. கதவில் பச்சை விளக்கு எரிந்து அது திறப்பதற்குள் தீ மேல் நிற்பவனைப் போல் ஒரு நொடி கூட பொறுக்க முடியாதவனாய் நின்று கொண்டிருந்தான் ரஞ்சித். அங்கு என்ன நடந்தது, அந்த பெண் யார், எதற்காக குதித்தாள் இப்படி எதையுமே சிந்திக்கும் மனநிலையில் ரஞ்சித் அப்போது இல்லை. அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தெல்லாம் ஒன்றே ஒன்று தான். அவன் அன்னேரத்தில் அங்கு என்ன செய்து கொண்டிருந்தான் என்று யாருக்கும் தெரியவே கூடாது. அவன் வீட்டை விட்டு நடுராத்திரி வெளியே வந்தது யாருக்கும் தெரிவதற்குள் தான் எப்படியாவது வீடு சென்றுவிட வேண்டும். இந்த ஒரு எண்ணம் மட்டுமே அவனை ஆக்ரமித்திருந்தது.

மூச்சிறைக்க படிகளில் ஓடத் துவங்கியவன், ஐந்தாவது மாடியை அடைந்ததும் தான் சிறிது யோசிக்க ஆரம்பித்தான். அந்த வாட்ச்மேன் எப்படியும் மாடியை நோக்கி ஓடி வந்துகொண்டிருப்பான். தான் எதிரே ஓடினால் வகையாக சென்று அவன் கையிலேயே மாட்டிக் கொள்ள நேரிடுமே. சரியாக ஐந்தாவது மாடிக்கருகே ஓடிவந்தவன், அப்படியே பக்கவாட்டில் சென்று படிகள் இருந்த இடத்திற்கு தூரமாக மறைந்து நின்று கொண்டான். பூட்ஸ் காலில் வாட்ச்மேன் ஓடி வரும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை போலவே ரஞ்சித்தின் இதயமும் டப் டப் என்று வேகமாய் அடித்துக் கொண்டது. அந்த சத்தம் அருகே வர வர, ரஞ்சித் இதயத்துடிப்பு இரண்டு மடங்காய் அதிகரித்தது. வாட்ச்மேன் பூட்ஸ் சத்தம் மெல்ல மெல்ல தேய ஆரம்பிக்கவும், தன் செருப்பை கையில் எடுத்துக் கொண்டு, அசுர வேகத்தில் ஓடி வீட்டை அடைந்தான் ரஞ்சித்.

வீட்டிற்கு சென்று அவனது அறைக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சியாய் முகிலையும் படுக்கையில் காணவில்லை. அவள் எப்போது எழுந்தாள், தான் படுக்கையில் இல்லாததை கண்டுபிடித்திருப்பாளா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவன், உடனே பாத்ரூம் கதவை திறந்து பார்த்தான். அங்கும் அவளை காணவில்லை. பாத்ரூம் கதவை மூடியபடி வெளியே வந்தவன், தள்ளாடியபடி முகில் மீண்டும் அறைக்குள் நுழைவதை பார்த்தான். அவனை பார்த்ததும் திரு திருவென விழித்தவள், “தூங்கலையா? ஏன் எழுந்துட்டீங்க?” என்றாள்.

“ஒன்னுமில்லை…பாத்ரூம் போனேன்…நீ என்ன பண்ற?”

“தண்னி குடிக்க போனேன்…” என்று சொல்லிவிட்டு உடனே படுக்கையில் சரிந்தாள். தான் அத்தனை நேரமாக அருகே இல்லாததை ஒரு வேளை இவள் பார்த்திருப்பாளோ? பார்த்திருந்தால் எதுவுமே கேட்காமல் ஏன் இருக்க வேண்டும் என்று யோசித்தவன், பிறகு அந்த பெண்ணை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். இருட்டில் அவள் யார் என்று கூட தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக அவனுக்கு தெரிந்தது. இன்னும் சிறிது நாட்களுக்கு அவனுடைய தூக்கம் சுத்தமாக தொலைந்தது என்று.

மாடிக்கு சென்ற அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி மாடியில் அவரால் இயன்றவரை அங்கும் இங்கும் தேடிப் பார்த்தார். ஒருவரும் அங்கு இல்லை. அங்கு ஓடி வருவதற்கு பதிலாக கதவை திறக்க முடியாத படி கம்யூட்டரிலேயே லாக் செய்யும் வசதி அந்த கதவுகளுக்கு இருந்தது அவருக்கு தெரியவில்லை பாவம். யாரையும் காணாமல் தேடி சலித்து, உடனே அபார்ட்மெண்ட் செக்கரட்டரி ராமசாமியை தொடர்பு கொண்டார். அவரது கைபேசி சிவிட்சுடு ஆஃப் என்று சொல்லவே, நேரே அவர் வீட்டிற்கே சென்று கதவை தட்டினார். அதற்கும் எந்த பதிலும் இல்லை. ’என்ன இது? எங்கயும் வெளிய போறதா சொல்லவே இல்லையே…இன்னிக்கு ராத்திரி கூட கடையில இருந்து என்னவோ பெரிய பையில வாங்கிட்டு வந்தாரே!’ என்று எண்ணியவாறு வேறு வழியில்லாமல் காவல் துறையை தொடர்பு கொண்டார் அந்த செக்யூரிட்டி.

*****************************************************************************************

“ஆசை முகம் மறந்து போச்சே…”

மீண்டும் மீண்டும் அதே ஹலோ ட்யூன் பாடல் ஒலிக்க கோபத்தில் அழைப்பை துண்டித்தார் பரத்.

ஆவல் ததும்பும் முகத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த முகில், “என்ன சார் ஆச்சு?”

“அந்த பொண்ணு ஃபோன எடுக்க மாட்டேங்குது…சரி, அப்ப நானே நாளைக்கு நேரா அந்த ஆபிஸ் போய் பாத்துட்டு வரேன்…”

“நானும் உங்களோட வரலாமா?” ஆர்வமாய் முகில் கேட்க, பரத், “நீங்க எதுக்கு வீணா அலையனும்?”

“இல்லை…ப்ளீஸ்…நானும் வரேனே…இந்த வாட்டி அவர் எந்த தப்பும் செய்யலைன்னு கோர்ட்ல நிரூபிக்க முடியாட்டி, அப்புறம்…அப்புறம் இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு அவர் வெளியவே வர முடியாது…அதுக்குள்ள எங்க குழந்தை பிறந்திடும்…” அதற்கு மேல் பேச முடியாமல் முகிலுக்கு தொண்டையை அடைத்தது.

பரத், “கவலைப்படாதீங்க…உங்க ஹஸ்பென்டுக்கு இந்த கேஸுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நினைச்சப்போ எவ்ளோ முனைப்பா ஆதாரம் எல்லாம் திரட்டினேனோ, அத விட பல மடங்கு அதிகமா உண்மை என்னன்னு கண்டுபிடிக்க நானும் மூணு மாசமா ஆதாரங்கள திரட்டிட்டு தான் இருக்கேன்… நீங்க வரதுல எனக்கு எதுவும் ஆட்சேபனையும் இல்லை…ஆனா…எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்ன்னு…” பரத் முடிக்கும் முன்பு அவரது கைபேசியில் அழைப்பு வரவே, அழைத்த எண்ணை பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது.கைபேசியை காதில் வைத்து, “பரத் ஹியர்!” என்றார்.

எதிர்முனையில் ஒரு பெண் குரல், “ஹலோ…இந்த நம்பர்ல இருந்து கொஞ்ச நேரம் முன்னாடி கால் வந்துச்சு…மிஸ் பண்ணிட்டேன்…”

“நான் இன்ஸ்பெக்டர் பரத் பேசறேன்…”

திவ்யாவிடம் பேசி முடித்து, அவளிடம் பேசியவற்றை எல்லாம் முகிலுக்கு விளக்கிய பரத், “நாளைக்கு பில்டிங் சொல்யுஷன்ஸ் ஆபிஸ் போனா, டேட்டாவ எடுத்தர்லாம்…அதுக்கப்புறம் எல்லாமே தெளிவாயிடும்…தைரியமா இருங்க…” என்று சொல்லிவிட்டு அவரது வீட்டை நோக்கி புறப்பட்டார்.

-----

மறுநாள் காலையில் எட்டு மணிக்கெல்லாம் பில்டிங் சொல்யூஷன்ஸ் அலுவலகத்தை அடைந்த பரத், அங்கு முன்னதாவே காத்துக் கொண்டிருந்த முகிலை பார்த்து ஆச்சர்யம் அடைந்தவராய், “என்ன இவ்ளோ சீக்கரம் வந்துட்டீங்க?”

முகில் ஒரு சிறு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுக்கவும், “சரி…நான் ஏற்கனவே எம்.டி. கிட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்கிட்டேன்…வாங்க ரிஷப்ஷன்ல கேப்போம்…”

இன்ஸ்பெக்ட்டர் பரத் என்று சொன்னதும், சிறுது நேர காத்திருப்பு கூட இன்றி நேரே எம்.டியின் அறைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப் பட்டனர்.

கணினி திரையில் இருந்ததை உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்த எம்.டி மாணிக்கவாசகம் இவர்களை பார்த்தது எழுந்து பரத்தின் கையை குலுக்கியபடி, “ஹலோ சார்! நைஸ் டூ மீட் யூ..சொல்லுங்க…நான் என்ன செய்யனும்?”

“சார்…ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்ல ஆறு மாசம் முன்னாடி ஒரு பொண்ணு இறந்தது உங்களுக்கு தெரியும்னு நினைக்கறேன்…”

“ஆமா…ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சே…”

“இல்லை சார்…அது கேஸ் நடந்துகிட்டு இருக்கு…இன்னிக்கு கூட ஹியரிங் இருக்கு…அது விஷயமா தான் உங்ககிட்ட சில இன்ஃபர்மேஷன் வேணும்…”

“ஓ…எனக்கு சுத்தமா தெரியாதே? நான் ஆறுமாசமா ஊர்லையே இல்லை…ப்ராஜக்ட் விஷயமா நியூ ஜெர்ஸி போயிருந்தேன்…போன வாரம் தான் வந்தேன்…அப்பா கூட ஏதோ சொல்லிட்டு இருந்தாரு…நான் காதுல வாங்கிக்கல…சொல்லுங்க…நான் என்ன பண்ணனும்?”

“உங்க ஏக்ஸஸ் கண்ட்ரோல் சிஸ்டம் தானே ஷோபா அபார்ட்மென்ட்ஸ் கதவிலெல்லாம் போட்டிருக்கு?”

“ஆமா”

“ஒவ்வொரு கதவில இருக்கற யூனிட் உதவியால, அந்த கதவு எத்தனை மணிக்கு திறக்கப்பட்டிருக்குங்கற இன்ஃபர்மேஷன உங்க சர்வர்ல இருந்து எடுக்க முடியும்னு சொன்னாங்களே…அது சாத்தியம் தானா?”

“அஃகோர்ஸ் சார்…அப்சல்யூட்லி!”

“அந்த மாடி கதவு?”

“கண்டிப்பா எடுக்க முடியும்…ஒவ்வொருத்தரோட வீட்டுக் கதவு கூட எடுக்க முடியும்?”

“ஃபென்டாஸ்டிக்…அப்ப எனக்கு மாடிக் கதவோட டேட்டாவும், டோர் நம்பர் 1A வோட டேட்டாவும் வேணும்…”

“சார்…மாடிக் கதவு ஓகே…ஆனா வீட்டுக் கதவு…அந்த வீட்டுக்காரங்களோட கன்ஸென்ட் இல்லாம எங்களால குடுக்க முடியாது…அக்ரிமென்ட்ல அப்படி தான் எழுதியிருக்கோம்…”

“இவங்க தான் சார் அந்த வீட்டு ஓனர்…” என்று முகிலை பார்த்து பரத் சொல்லவும், அது வரை ஆர்வம் பொங்க அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு அமைதியாயிருந்த முகில். “ஆமா சார்…வீடு என் பேர்ல தான் இருக்கு…எங்களுக்கு கண்டிப்பா அந்த டேட்டா வேணும்…”

“அப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை…எந்த வாரத்தோடது வேணும்? இந்த வாரமா, இல்ல போன வார டேட்டாவா?”

“என்னது வாரமா? எங்களுக்கு ஆறு மாசம் முன்னாடி, ஆகஸ்ட் பதினஞ்சாம் தேதியோட டேட்டா தான் வேணும்…”

“ஹய்யய்யோ சாரி சார்…எங்க பாலிஸி படி, ரெண்டு வாரத்துக்கு மட்டும் தான் பேக்கப் வச்சிருப்போம்…”

உடனே இருவர் முகமும் வாடிப் போனது, “வேற வழியே இல்லையா சார்?” பரத் இப்படி கேட்கவும் மாணிக்க வாசகம், “சாரி சார்…வேற எதுவும் வழியிருக்கற மாதிரி எனக்கு தோல” என்று கையை விரித்தார்.

சோர்வுடன் கதவை நோக்கி நடக்கத் துவங்கினர். நம்பிக்கையின் உச்சத்திற்கே சென்று அங்கிருந்து கீழே விழுந்ததை முகிலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரிப்ஷன் வரை மெதுவாக பரத்தை தொடர்ந்து வந்தவள் அதற்கு மேல் முடியாமல் அங்கேயே ஒரு இருக்கையில் சரிந்தாள்.

அவளை திரும்பிப் பார்த்த பரத், “என்னாச்சுங்க?” என்று பதட்டத்துடன் வினவ, முகில், “ஒன்னுமில்ல….கொஞ்சம் தண்ணி வேணும்…” என்று திக்கித் திணறி சொன்னாள். ஒரு நிமிஷம் என்றபடி அந்த ஓரத்தில் இருந்த அக்வாஃபீனாவில் தண்ணீர் பிடித்துக் கொண்டு அவர் முகிலருகில் வரவும், கதவை திறந்து கொண்டு திவ்யா நுழையவும் சரியாக இருந்தது. பரத்தை பார்த்ததும் அவரை பார்த்து புன்னகைத்தாள், “எம்.டி கிட்ட பேசினீங்களா? என்ன சொன்னாரு? ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்ல எங்க சிஸ்டம் இருக்கறதே எனக்கு நீங்க சொல்லி தான் தெரியும்…இல்லன்னா மது கேஸுக்கு நான் முன்னமே எதாவது உதவி பண்ணியிருப்பேன்…” சொல்லும் போதே திவ்யாவின் முகம் வாடிப் போனது.

“நாங்க பேசினோம்மா…அவரு டேட்டா எல்லாம் ரெண்டு வாரத்தோடது மட்டும் தான் வச்சிருப்போம்…மத்ததெல்லாம் பாலிஸி படி டெலீட் பண்ணிடுவோம், ஒன்னும் பண்ண முடியாதுன்னுட்டாரு…”

“ஓ…” என்று சிந்தனையில் ஆழ்ந்த திவ்யா, “எனக்கென்னவோ அப்படி தோல…இந்த DBM க்ரூப்ல இருக்கற யாரும் ஒழுங்கா வேலை செஞ்சதா சரித்தரமே இல்ல…நீங்க அவங்ககிட்டையே நேரா போய் பேசி பாருங்களேன்…”

“ஓஹ்ஹ்…அவங்க எங்க இருப்பாங்க?”

“வாங்க நான் கூட்டிட்டு போறேன்…” என்று திவ்யா முன்னால் நடக்க, முகிலை பார்த்து பரத், “நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க…நான் போய் பாத்துட்டு…” என்று சொல்லி முடிப்பதற்குள் கஷ்டப்பட்டு உடனே எழுந்து இரண்டு அடிகள் எடுத்து வைத்து விட்டாள் முகில். பரத் புன்னகைத்தவாறு, “சரி..வாங்க…” என்று இரு பெண்களையும் தொடர்ந்தார்.

அந்த சிறிய அறைக்குள் இயந்திரங்கள் ஒலியுடன், விளக்குகள் பளிச்சிட, ஒரு கணினியில் மும்ரமாக மூழ்கியிருந்தவனை, திவ்யா, “ரமேஷ்” என்று அழைக்க, திரும்பியவன் “என்ன திவ்யா?” என்று கேட்டுவிட்டு புதுமனிதர்களை கேள்வியுடன் நோக்கினான்.

“இவங்களுக்கு ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் ஏக்ஸஸ் டேட்டா வேணுமாம்… இவரு இன்ஸ்பெக்ட்டர்…கொஞ்சம் பழைய டேட்டா கேக்குறாரு…ஆறு மாசம் முன்னாடியுள்ளது… நீ தான் என்னிக்குமே ப்ராஸஸ் எல்லாம் ஃபாலோ பண்ணினதில்லையே…அதான் இருந்தாலும் இருக்கும்னு இவங்கள கூட்டிட்டு வந்தேன்…”

“சார்…ஏ.ஸி.யெஸ் அந்த பில்டிங்குல போட்ட நாள்ல இருந்து எல்லா டேட்டாவும் அப்படியே இருக்குது…எதுவும் பண்ணல…இருக்கற வேலையில இத வேற ஞாபகம் வச்சுக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க? ஆனா டேட்டா ரெட்ரீவ் பண்ண ஒரு மணி நேரம் ஆகும்…பரவாயில்லையா?”

“சரி…எனக்கு நீங்க இப்போதைக்கு 1A வீட்டு டேட்டாவும், மாடி காமன் கதவு டேட்டாவும் மட்டும் இந்த லேப்டாப்ல போட்டு குடுங்க போதும்…அப்புறமா மறுபடியும் வரேன்…எதையும் டெலீட் பண்ணிடாதீங்க…” என்றபடி முகிலை பார்த்தார், முகிலும் உடனே அவள் வைத்திருந்த லேப்டாப்பை ரமேஷிடம் கொடுத்தாள்.

----

ஹியரிங் தொடங்கும் நேரம் ஆனபின்பும் பரத் வாரமல் இருக்கவே, லீலாவதி பதட்டத்தின் உச்சகட்டத்தை அடைந்தார். அவரது முகபாவனைக்கு நேர் எதிராக சோமநாதன் நிம்மதியுடன் காணப்பட்டார். அன்று அவரது ஜூனியரை கூட அழைத்து வந்திருக்கவில்லை. இன்றோடு இந்த கேஸ் முடியப்போகிறதென்ற திருப்தி அவர் முகத்திலேயே தெரிந்தது.

பரபரப்புடன் லேப்டாப்போடு உள்ளே நுழைந்த பரத், நேராக லீலாவதி அருகில் வந்து அமர்ந்து அவர் காதில் ஏதோ சொன்னார். உடனே அவர் எடுத்துக் கொண்டிருந்த குறிப்புகளை நிறுத்திவிட்டு ஆர்வத்துடன் பரத் சொல்வதை கேட்கத் துவங்கினார்.

நீதிபதி வந்ததும் தான் சேகரித்த ஆதாரங்களை அவரிடம் சமர்ப்பித்த பரத், “சார்…ரஞ்சித் வீட்டுக் கதவு பத்து மணிக்கு பூட்டப்பட்டிருக்கு…ரஞ்சித் அப்ப வீட்டுக்குள்ள நுழைஞ்சு கதவை பூட்டினத பாத்த சாட்சிகள் எதிர் வீடு, பக்கத்து வீடுன்னு நிறைய பேர் இருக்காங்க….அதுக்கு அப்புறம் மீண்டும் 11.53 க்கு அவர் வீட்டு கதவு திறக்கப்பட்டிருக்கு. ஒருத்தர் எவ்வளவு வேகமா ஏறினாலும் மாடிக்கு போய் சேர குறைஞ்சது மூணு நிமிஷங்களாவது ஆகும். அப்படி பாத்தா அவர் 11.56 ருக்கு முன்னாடி மாடியை அடைஞ்சிருக்க முடியாது. எண்கொண்டு திறந்த உடனே, திறந்து பிடிக்காட்டி பத்து வினாடியில தானே பூட்டிக்கற மாதிரி செஞ்சிருக்காங்க இந்த கதவுகள…மாடிக் கதவ சரியா 11.45 க்கு அபார்ட்மெண்ட்ஸ் உள்ளயிருந்து திறந்திருக்காங்க…மீண்டும் மாடிக் கதவு 11.59 க்கு உள்ளயிருந்து திறந்திருக்கப்பட்டிருக்கு….மறுபடியும் முப்பதே வினாடியில வெளிய இருந்து திறந்திருக்காங்க….”

“இதையெல்லாம் வச்சு பாத்தா, 11.45 க்கு மதுவந்தி தான் மாடிக் கதவை திறந்துட்டு போயிருக்கனும்…ஆனா அந்த சமயத்துல ரஞ்சித் அவர் வீட்ல தான் இருந்திருக்காரு…11.55 க்கு அப்புறம் மாடிக்கு வந்த ரஞ்சித் சரியா பன்னென்டு மணிக்கு முன்னாடி ஏதோ சத்தம் கேட்டு மாடிக் கதவை திறந்து ஓடியிருக்காரு….மதுவந்தி கீழ குதிச்சது சரியா பனிரெண்டு மணி, அதை பாத்த உடனே பயத்துல ரஞ்சித் தலைதெறிக்க ஓடி வந்து மறுபடியும் கதவை திறந்து வெளிய வந்திருக்காரு….அவரு மாடியில இருந்த அந்த முப்பதே வினாடிகள்ள அவருக்கும் மதுவந்திக்கும் எந்த விதமான சச்சரவுகள் நடந்திருக்கறதுக்கோ, அவரு மதுவந்த்தியை கீழ தள்ள முயற்சி செய்யறதுக்கோ சாத்தியமே இல்லை. அது மட்டுமில்லாம அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி ரூம்ல இருக்கற டிஜிட்டல் க்ளாக் இந்த ஏக்ஸஸ் கண்ட்ரோல் சிஸ்டமோட சின்கரனைஸ் பண்ணியிருக்காங்க…அதனால மதுவந்த்தி குதிச்ச நேரத்தை பாத்ததா சொன்ன செக்யூரிட்டி சொல்றதும் இதோட ஒத்துப் போகுது…”

“ஸோ, டிஃபென்ஸ் லாயர் சொல்ற மாதிரி, suspect was at the wrong place at the wrong time” என்று சொல்லி முடித்தார் பரத்.

துறை நிபுணர்கள் கொண்டு உடனே உரிய முறையில் விசாரித்து, அனைத்து ஆவனங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரஞ்சிதிற்கு ஜாமீன் வழங்க கோரி சோமநாதன் சமர்பித்த மனுவை ஏற்றுகொண்டு, ரஞ்சித்தை ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவிலும் கையெழுத்திட்டார்.

“கவலை படாதீங்க…கூடிய சீக்கிரம் கேஸே க்ளியர் ஆயிடும்…” என்று முகத்தில் அரும்பிய புன்னகையுடன் சோமநாதன் சொல்ல, முகில் ரஞ்சித் இருவர் முகமும் பிரகாசமானது.

மகிழ்ச்சியில் ரஞ்சிதின் உள்ளங்கைக்குள் தன் கையை கோர்த்துக் கொண்டு, கண்ணீரும் சிரிப்பும் கலந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த முகிலையும், நடந்தது கனவா இல்லை நிஜம் தானா என்று தெரியாமல் ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போயிருந்த ரஞ்சித்தையும் பார்த்து, பரத்தின் உள்ளமும் நிறைந்தது. அவர்களிருவரின் பிணைப்பை பார்த்ததும், பரத்திற்குள்ளும் அந்த ஆசை துளிர்விட்டது. ’பாவம்…அம்மாவும் ரொம்ப நாளா கேட்டுகிட்டே இருக்காங்க…பொண்ணு பாக்க சொல்லிட வேண்டியது தான்…’ என்று நினைத்துக் கொண்டு அவரும் லேசாக தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டார்.

லீலாவதி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க போகிறது என்று நினைத்தபடி திரும்பிய சோமநாதனின் முகத்தில் இருந்த சிரிப்பெல்லாம் மாயமாய் மறைந்தது. அவர் நினைத்தற்கு எதிர்மறையாக, குதூகலத்துடன் வாயெல்லாம் பல்லாக நின்று கொண்டிருந்தார் லீலாவதி! லீலாவதி முகத்தில் இருந்த சந்தோஷத்தையும், சிரிப்பையும் பார்த்து, ’ஐய்யோ! இந்தம்மா என்ன திட்டம் வச்சிருக்கோ, தெரியலையே!’ என்று குழம்பி நின்றார் சோமநாதன்!

[அடுத்த பாகத்தில் முடியும்]

16 comments:

Raghav said...

வணக்கம் திவ்யா!! கதையைப் படிச்சுட்டு வர்றேன்.

Raghav said...

அருமை அருமை அருமை !!

உங்ககிட்ட நிஜமான வழக்குகளையும் கொடுத்து விசாரிக்கச் சொல்லலாம் போலருக்கே திவ்யா.. பரத்தின் விசாரணைக் கோணங்கள், அதை சொல்ற விதம் கலக்கல்... கதை நல்லா பரபரப்பா போகுது..

gils said...

stl thoadraum!!! avvvvvvvvvv

sri said...

hmm ennum thodarumaa. endha kadhaila vara character pathi....

thodarum

naanum commenta adutha partla poderen :)

Kadhambari Swaminathan said...

seekiram suspensa udainga please..

Prabhu said...

தொடருங்க!

Nimal said...

வழக்கு முடியறதா இல்லை... ஆனாலும் 12 பாகம் முடிந்தும் சஸ்பென்ஸ் குறையாம அருமையாக இருக்கிறது...

G3 said...

aapicer aapicer.. suspense illama oru episodeayum end panna maateengala aapicer :((((

Hmm.. adutha episodekku kaathirukken :))

Karthik said...

//Raghav said...

அருமை அருமை அருமை !!

உங்ககிட்ட நிஜமான வழக்குகளையும் கொடுத்து விசாரிக்கச் சொல்லலாம் போலருக்கே திவ்யா.. பரத்தின் விசாரணைக் கோணங்கள், அதை சொல்ற விதம் கலக்கல்... கதை நல்லா பரபரப்பா போகுது..//

ரிப்பீட்டேய்ய்ய்.. :))

Karthik said...

me the 10 th..:)

pari@parimalapriya said...

Divya super!!! chanceless... neenga lawyer aagi irrukalam!!
gr8 work Divya..

Rajalakshmi Pakkirisamy said...

super madam! Suspense thaangala.. please konjam seekiram adutha part podungalen..

Anonymous said...

really wonderful story.the way u have taken the story so well.

Unknown said...

marubadiyum suspense..eagerly waiting for the final part

Unknown said...

Too good. Next part plzzzzzzz

மதி said...

இறுதிப்பகுதிக்காக வெயிட்டிங்