Friday, June 27, 2008

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…

சீன் 1அன்று (1988-1990)
நான்: அம்மா…கதை சொல்லுமா…

அம்மா: கதையா…ஹூம்….ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்…

நான்: வேணாம்…வேணாம்…புலி கதை சொல்லு…

அம்மா (மனசுக்குள்ள) : ஹய்யோ, இவளுக்கு கதை சொல்லியே ஒரு வழி ஆய்டுவேன் போல இருக்கே…

**************************************

சீன் 2அன்று (1990-1994)
அம்மா: நான் என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் சொல்லு பாப்போம்?

நான்: என்ன???? என்ன??? சொல்லு, சொல்லு…

அம்மா: டொட்டொ டொய்ங்….காமிக்ஸ் புக்கு…

நான்: ஹய்யா!!!!

**************************************

சீன் 1இன்று (2007-2008)
நான்: அம்மா…என் கதைய கேளும்மா…

அம்மா: கதையா…ஹூம்….

நான்: கேக்குறியா? இல்லயா?

அம்மா (மனசுக்குள்ள) : ஹய்யோ, இவகிட்ட கதை கேட்டே ஒரு வழி ஆய்டுவேன் போல இருக்கே…

**************************************

சீன் 2இன்று (2007-2008)
நான்: நான் ட்ரெய்ன்ல என்ன பண்ணிட்டு வந்தேன்னு சொல்லு பாப்போம்?

அம்மா: என்ன பண்ண?

நான்: நான் புதுசா ஒரு கதை எழுதியிருக்கேனே!!! இப்ப சொல்றேன் கேளு…

அம்மா: ஹயய்ய்யோ!!!

**************************************

அம்மாவ பத்தி எழுதிட்டு அப்பாவ விட்டுட்டா எப்டி? இப்போ அப்பா சீன்ஸ்
சீன் 1அன்று (1988-1990)
நான்: அப்பா…கதை சொல்லுங்கப்பா…

அப்பா: கதையா…இன்னைக்கு தான் லைபர்ரில ஒரு சூப்பர் புக் பாத்தேன், நாளைக்கு லஞ்சு டைம்ல படிச்சுட்டு வந்து சொல்றேன்…

நான் (அடுத்த நாள்): அந்த புக்க படிச்சீங்களாப்பா?

அப்பா: இன்னைக்கு பாதி தான் படிச்சேன்…நாளைக்கு முழுசா சொல்றேன்…

இப்டியே எல்லா நாளும் ஒடி போச்சு :-(

**************************************

சீன் 2இன்று (2007-2008)

நான்: அப்பா…நான் எழுதின கதைய படிச்சீங்களா?

அப்பா: எங்க? உங்கம்மா தான் கம்ப்யுட்டர் போடறா…எனக்கு காட்டறதே இல்ல ஒன்னும்…

நான்: அப்டீன்னா, நானே இப்ப சொல்றேன்…கேளுங்க….

அப்பா: ஹ்ம்ம்ம்….நான் அப்டியே ஒரு வாக் போய்ட்டு வந்துடறேனே…

இப்டியே இது வரைக்கும் எஸ்கேப்பு…

21 comments:

Vijay said...

வாழ்க்கையில் மாறாதிருப்பது மாற்றம் மட்டுமே

//நான்: அம்மா…என் கதைய கேளும்மா…
அம்மா: கதையா…ஹூம்….
நான்: கேக்குறியா? இல்லயா?
அம்மா (மனசுக்குள்ள) : ஹய்யோ, இவகிட்ட கதை கேட்டே ஒரு வழி ஆய்டுவேன் போல//
உங்க வீட்டுல நீங்க எழுதற கதைகளைப் படிக்கலைன்னா சில ஸ்வாரஸ்யமான விஷயங்களை மிஸ் பண்ணறாங்க. சீக்கிரம் படிக்கச் சொல்லுங்க :)
அன்புடன்,
விஜய்

Divyapriya said...

அம்மா கேக்கலன்னா விடுவேனா? எல்லா மொக்கையும் முதல்ல அம்மாகிட்ட தான்...

Smriti said...

POTTU THAAKKU !!!
Adippaavi ongappa maanatha ippidi blog la vaangittiye [:D]

Anonymous said...

jus now chked it out... very nice one. but unga appa amma maanatha romba vaangitta.... still it sounds nice :)

Divyapriya said...

engappaa singam, idhukkellaam feel panna maataaru ;-)

Anonymous said...

நல்லாருக்கு மொக்கை...
அப்போ வீட்டுக்கு வீடு வாசப்படி..

Divyapriya said...

//அப்போ வீட்டுக்கு வீடு வாசப்படி..//

அப்போ உங்க வீட்லையும் இதே நிலைமை தானா :-D

Divya said...
This comment has been removed by the author.
Divya said...

சுவாரஸியமா எழுதியிருக்கிறீங்க திவ்யா:))

ஆக மொத்ததுல உங்க கதை படிக்கும் பாக்கியம் எங்களுக்கு மட்டும்தான் போலிருக்கு:))))

Divyapriya said...

திவ்யா...bloga படிக்காதவங்கள சும்மா விட்றது இல்ல, ஃபோன போட்டு (கேக்கறாங்களோ இல்லயோ) நானே சொல்லிட்டு தான் மரு வேலை :))

FunScribbler said...

//திவ்யா...bloga படிக்காதவங்கள சும்மா விட்றது இல்ல, ஃபோன போட்டு (கேக்கறாங்களோ இல்லயோ) நானே சொல்லிட்டு தான் மரு வேலை :))//

ஹாஹா...:))

உங்க கதை படிச்சிட்டு..வாவ்! u r great yea! :)

Divyapriya said...

//உங்க கதை படிச்சிட்டு..வாவ்! u r great yea! :)//

thanks so much... எந்த கதைய படிச்சீங்க?

Shiva.G said...

:) ungappa unna maari illa pola theriyudhu.. romba smartaa thappicharaaru.. 24 varusha experience la nalla train aairukaar;)
..
nice flick ..

Divyapriya said...

illa, engappa enna maadhiriye smart ;-)

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு...:)

தமிழன்-கறுப்பி... said...

@ திவ்யா...

////சுவாரஸியமா எழுதியிருக்கிறீங்க திவ்யா:))

ஆக மொத்ததுல உங்க கதை படிக்கும் பாக்கியம் எங்களுக்கு மட்டும்தான் போலிருக்கு:))))///

ரிப்பீட்டு...

Punarvasu said...

soooper divs :) keep going!!

Ramya Ramani said...

divya unga kadai ellam nallave irukkunga..unga blog nalu peru padikanuma kavalaiye vendam pidinga friendah gtalk la link anupitte irunga...apparam namma blog makkal ellam rooooooooooooooooombbbbbaaaaaa nallavanga eppadi ezhudinalum padichittu nalla irukku,soopernnu solvanga sooo noo worries..naan ellam innum blog ezhudaradha pathe ungalukku purinjirukkum :P

தமிழ் said...

தங்களின்
கனா கண்டேனடி
மற்றும்
மார்கழி திங்கள்
படித்தேன்
வரிகளும்
கருத்தும்
நன்றாக
இருந்தது




/சீன் 1அன்று (1988-1990)
நான்: அப்பா…கதை சொல்லுங்கப்பா…

அப்பா: கதையா…இன்னைக்கு தான் லைபர்ரில ஒரு சூப்பர் புக் பாத்தேன், நாளைக்கு லஞ்சு டைம்ல படிச்சுட்டு வந்து சொல்றேன்…

நான் (அடுத்த நாள்): அந்த புக்க படிச்சீங்களாப்பா?

அப்பா: இன்னைக்கு பாதி தான் படிச்சேன்…நாளைக்கு முழுசா சொல்றேன்…

இப்டியே எல்லா நாளும் ஒடி போச்சு :-(
/
/நான்: அப்பா…நான் எழுதின கதைய படிச்சீங்களா?

அப்பா: எங்க? உங்கம்மா தான் கம்ப்யுட்டர் போடறா…எனக்கு காட்டறதே இல்ல ஒன்னும்…

நான்: அப்டீன்னா, நானே இப்ப சொல்றேன்…கேளுங்க….

அப்பா: ஹ்ம்ம்ம்….நான் அப்டியே ஒரு வாக் போய்ட்டு வந்துடறேனே…

இப்டியே இது வரைக்கும் எஸ்கேப்பு…/

உண்மையில்
மனம் விட்டு
சிரித்தேன்
இதை படிக்கும்பொழது

Divyapriya said...

// தமிழன்... said...

நல்லாருக்கு...:)//

ரொம்ப நன்றி தமிழன், மீண்டும் வாங்க...

//திகழ்மிளிர் said...

தங்களின் கனா கண்டேனடி
மற்றும் மார்கழி திங்கள்
படித்தேன் வரிகளும்
கருத்தும் நன்றாக
இருந்தது..//

உங்க bloga பாத்தேன்...அப்பா...profile லே பயங்கர கலக்கலா இருக்கு...சீக்கரம் படிச்சு முடிக்கறேன் :-))

//Ramya Ramani said...
nga blog nalu peru padikanuma kavalaiye vendam pidinga friendah gtalk la link anupitte irunga.//

ஆமாங்க நானும் ரொம்ப try பண்ணிட்டு தான் இருக்கேன்...orkut la போய் எதாவது பண்ணனும் :-)

J J Reegan said...

// சீன் 2இன்று (2007-2008)நான்: அப்பா…நான் எழுதின கதைய படிச்சீங்களா?அப்பா: எங்க? உங்கம்மா தான் கம்ப்யுட்டர் போடறா…எனக்கு காட்டறதே இல்ல ஒன்னும்…நான்: அப்டீன்னா, நானே இப்ப சொல்றேன்…கேளுங்க….அப்பா: ஹ்ம்ம்ம்….நான் அப்டியே ஒரு வாக் போய்ட்டு வந்துடறேனே…இப்டியே இது வரைக்கும் எஸ்கேப்பு… //

தலைநகரம் வடிவேல் கதையாவுல்ல இருக்கு...