Thursday, September 10, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 3

பாகம் 1 , பாகம் 2

விளம்பர பலகைகளால் ஏற்படும் ஆபத்துகள் – ஒரு அலசல்
மதுரை மூன்றுமகடியை சேர்ந்த மகேஷ் (25) என்ற வாலிபர், இரவு ஷிஃட் முடிந்து தனது டி.வி.எஸ் 50யில் வீட்டிற்க்கு திரும்பிக் கொண்டிருந்தார். அதிகாலை சுமார் ஒரு மணியளவில், திருநகர் சாலையில் கேட்பாறற்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த ஒரு பெரிய விளம்பர பலகையில் மோதி, பெரும் விபத்துக்கு உள்ளானார். அரசு பொது மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ள, மகேஷின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதாக…

“டேய்!!!”

“என்னமா?”

“காலங்காத்தால இந்த ஆக்ஸிடன்ட் நியூஸ் எல்லாம் தேவையா? அத சத்தமா வேற படிச்சிகிட்டு இருக்கான்! இந்தா புடி காபியை”

“ஏன்மா? முகில் எங்க?”

“ஏன்ப்பா? நான் குடுத்தா வாங்கிக் குடிக்கமாட்டியோ?”

“ம்மா! ஏம்மா? சும்மா கேட்டேன்…குடுங்க…” ரஞ்சித் காபியை வாங்கவும், அப்போது தான் அவன் கையை கவனித்த தனலட்சுமி, “ப்ரேஸ்லட் எங்கடா?”

அப்போது தான் கையை பார்த்தவன், “பெட்ல தான் கிடக்கும்…அது அப்படி தான்…அப்பப்ப கலண்டுக்கும்…”

“எவ்ளோ அசால்ட்டா சொல்றான் பாரு? கொஞ்சமாவது பொறுப்பிருக்கா ஒன்னா…என்னடா இது கைல, தீக்காயம் மாதிரி…என்ன பண்ண?”

“தெரிலமா…எதோ பட்டிருக்கும்…”

“சமயக்கட்டு பக்கமும் வரதில்லை….ஏன்டா? சிகரெட், கிகரெட் எதாவது…”

“ஐயோ!! குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ணாதீங்க…முகில் இன்னேரத்துல சமையல்ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்கா? முதல்ல நீங்க போய் பாருங்க…”“ஹ்ம்ம்…என்னவோ!” முனுமுனுத்தபடியே தனலட்சுமி சமையலறையை நோக்கி செல்லவும், வாசல் அழைப்பு மணியின் சத்தம் ஒலித்தது.

“அம்மா! யாருன்னு பாருங்க…இன்னேரத்துல யாரு? பாலும் வந்தாச்சு…பேப்பரும் வந்தாச்சு” என்றவாறு காபியை குடுக்க போனவன், வாசலில் நின்றிருந்தவர்களைப் பார்த்ததும், மீண்டும் அதை மேஜை மீதே வைத்தான்.

“யார் வேணும்?” பதட்டமான குரலில் தனலட்சுமி வினவ, ரஞ்சித் எழுந்து நின்று, “யார் வேணும் சார்?”

“இங்க முகில்ங்கறது?”

“என் வைஃப் தான்…சொல்லுங்க…என்ன விஷயம்?”

ரஞ்சித் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்டர் பரத். அவர் பின்னோடு, இரண்டு கான்ஸ்டபிள்களும். அதற்கு மேல் வேறு வழியில்லாமல் ரஞ்சித்தும் நாற்காலிகளை காட்டி, “உக்காருங்க சார்…” என்று உபசரித்தான்.

அதற்குள் சமையலறையிலிருந்து வெளிவந்த முகில், “என்னது?” என்பதை போல் ரஞ்சிதிற்கு சைகை செய்ய, அவனும் தெரியாது என்பதை போல் பதில் சைகை செய்தான்.

“உக்காரதுக்கெல்லாம் நேரம் இல்லை மிஸ்டர்….”

“ரஞ்சித்…”

“ரஞ்சித்…காலையில இருந்து நீங்க யாரும் வெளிய போலையா என்ன?”

“ஏன் சார்? ஏன் கேக்கறீங்க?”

“இந்த அபார்ட்மெண்ட்ல ஒரு பொண்ணு, தற்கொலை பண்ணியிருக்கு….அந்த விஷயமா தான்…”

“என்னது?” அதிர்ச்சியில் ஒரே சேர ஒலித்தது தனலட்சுமியின் குரலும், முகிலின் குரலும்.

“யார் சார்?”

“மதுன்னு ஒரு பொண்ணு…அது விஷயமா தான் உங்ககிட்ட விசாரிக்கலாம்னு”

“சொல்லுங்க சார்…எங்களுக்கு தெரிஞ்ச இன்ஃபர்மேஷன நாங்க சொல்றோம்…”

“முருகேசன், அதை எடுங்க…”
“இந்த ப்ரேஸ்லட்….”

ரஞ்சித், “என்னது தான் சார்…இது எப்படி…? உங்ககிட்ட…?”
“இப்ப தான் காணமேன்னு சொல்லிட்டு இருந்தோம்…” இது தனலட்சுமி.

“மேல மாடியில கிடந்தது”

“என்ன மாடியிலையா? ஒரு வேளை நேத்து பார்ட்டியில கலண்டு விழுந்திருக்குமோ? கொஞ்சம் லூசாயிடுச்சு, அடிக்கடி இப்படி தான் கலண்டுடும்…எப்படியோ, ரொம்ப தாங்க்ஸ் சார்…” என்றபடி அதை வாங்குவதற்காக ரஞ்சித் கையை நீட்ட,
“சாரி ரஞ்சித்…இதை இப்ப குடுக்க முடியாது…அந்த பொண்ணு மாடியில இருந்து விழுந்து தான் தற்கொலை பண்ணியிருக்காங்க…இது போக மாடியில கிடச்ச சில பொருள்களும் எங்க விசாரணைக்கு தேவைப் படுது…”

இன்ஸ்பெக்டர் இப்படி சொல்லவும், மூவர் முகத்திலும் ஈயாடவில்லை, ஆனால் ரஞ்சித் முதலில் சமாளித்துக் கொண்டு, “அதனால என்ன சார்…பரவாயில்லை…நீங்க விசாரணை முடிஞ்சே குடுங்க…ஆனா கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க…என் மாமனார் கல்யாணத்துல போட்டது…” என்ற நகைத்தபடி பதிலளித்தான்.

பரத்தும் சிரித்தவாறே, “அப்படீன்னா இத கீழ போட்டதுக்கே உங்களுக்கு காத்துட்டு இருக்குன்னு நினைக்கறேன்…கவலைபடாதீங்க…எவ்ளோ சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம் குடுத்தர்றோம்…வேற எதாவது விசாரணைன்னா, உங்கள கூப்பிட வேண்டி வரும்…கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க…”

“ஷ்யூர் சார்…கண்டிப்பா…”

அவன் கையை பிடித்து குலுக்கியபடி இன்ஸ்பெக்டர் பரத், “ஓகே மிஸ்டர் ரஞ்சித்….பாப்போம்” என்றபடி கதவை நோக்கி நகரவும், அந்த இரு கான்ஸ்டபிள்களும், அங்கு நடப்பதை நம்பமுடியாதது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, அவர் பின்னோடு சென்றனர்.

“என்ன சார்? ஒன்னுமே சொல்லாம வந்துட்டீங்க?” முருகேசம் வினவவும்

“வேற என்ன பண்றது முருகேசன்? இந்த ப்ரேஸ்லட்ட மட்டும் வச்சுட்டு என்னத்த பண்ண சொல்றீங்க? பாப்போம்…வேற எதாவது கிடைக்குதான்னு…ஆமா, வேற எதாவது இருந்துச்சா அங்க பக்கத்துல?”

“ஆமா சார்…ஒரு மெழுகுவர்த்தி மாடி திண்டுக்கு பக்கத்துலையே கிடந்தது…”

“சரி…லேபுக்கு அனுப்சிடுங்க…அந்த செக்யூரிட்டி எங்க?”

“இங்க தான் சார்…ஆபிஸ் ரூம்ல உக்கார வச்சிருக்கேன்…”
அதற்குள் மூவரும் கீழ்தளத்தில் அமைந்திருந்த அலுவலக அறையை அடைந்தனர். அங்கு பாதி தூக்கத்தில் அமர்ந்திருந்த அந்த செக்யூரிட்டி, அவர்களை பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார்.

அங்கிருந்த மேஜை மீது அமர்ந்தவாறே, “உக்காருங்க…உக்காருங்க…ஆமா, இந்த அப்பார்ட்மென்ட்டுக்கு செக்ரட்ரின்னெல்லாம் யாரும் இல்லையா?”

“இருக்காங்க சார்…இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாரு…ராமசாமின்னு பேரு…இப்ப தான் காபி குடிச்சிட்டு வரேன்னு வீட்டுக்கு போயிருக்காரு…”

“ஹ்ம்ம்…மறுபடியும் ஒரு தடவை நல்லா ஞாபகப்படுத்தி சொல்லுங்க…என்ன பாத்தீங்க…”

“ஞாபகப்படுத்திக்கவே வேண்டாம் சார்…இன்னும் அப்படியே கண்ணு முன்னாடி இருக்கு…நான் நல்லா அசந்து தூங்கிட்டு இருந்தேன்…திடீர்ன்னு அம்மாஆஆ ன்னு ஒரு அலறல் சத்தம் கேட்டுச்சு…திடுக்குன்னு முழிச்சு எந்திருச்சு, அந்த கன்னாடி கூண்டு வழியா பாத்தா, ஒரு பொண்ணு சரியா நாலாவது மாடி பக்கத்துல கீழ விழுந்துகிட்டே இருக்கா…நீளமா விரிச்சு விட்ட முடியெல்லாம் காத்துல அப்படி பறக்குது…என்னடான்னு மேல பாத்தா…அங்க ஒரு ஆளு, கீழ பாத்துகிட்டே நின்னுட்டு இருக்கான்…மாடி பக்கம் ஓடி போறதுக்குள்ள, அந்த ஆள் எப்படியோ கீழ இறங்கிட்டான்…”

“மேல நிக்கறவங்கவள இங்கிருந்து பாத்தா தெரியுமா என்ன?”

“யாருன்னெல்லாம் தெரியாது சார்…ஆம்பளையா பொம்ளையான்னு முடி, ட்ரெஸ் வச்சி சொல்லலாம்…அதுவே உத்து பாத்தா தான் தெரியும்…”

“ஹ்ம்ம்…அப்ப சுமார் எத்தனை மணியிருக்குனு ஞாபகம் இருக்கா?”

“நான் மணியெல்லாம் பாக்கலை சார்…”

காண்ஸ்டபிள் உடனே, “நமக்கு தகவல் கிடைச்சப்போ, பன்னென்டரை சார்…”

உடனே அந்த செக்யூரிட்டி, “சார்!!! இப்ப தான் ஞாபகம் வருது…அந்த பொண்ணு விழுகறத நான் எழுந்து பாத்த போது, டங் டங்ன்னு மணியடிச்சுது…சரியா பன்னென்டு மணி…ஆமா…பன்னெண்டு தான்…உறுதியா சொல்லுவேன்…”

“ஹ்ம்ம்…சரி, நீங்க போலாம்…போய் உங்க அப்பார்ட்மெண்ட் செரட்ரிய பாக்கனும்னு சொன்னேன்னு சொல்லுங்க…”

“வணக்கம்! நான் தான் அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரி…ராமசாமி!” கைகளை கூப்பியபடி, போலி புன்னகையுடன் அந்த அறைக்குள் நுழைந்தார் ராமசாமி.

“சொல்லுங்க…உங்களுக்கு நான் என்ன பண்ணனும்?” அதே சிரிப்போடு ராமசாமி இப்படி கேட்கவும், பரத், “ஒன்னும் இல்லை…உங்களுக்கு தெரிஞ்ச தகவல் மட்டும் சொன்னா போதும்…அந்த பொண்ணோட சித்தி எத்தன வருஷமா இங்க இருக்காங்க? சொந்த வீடு தானா? இல்லை வாடைக்கு இருக்காங்களா? பொதுவா அவங்க எப்படி? அவங்கனால பிரச்சனை எதாவது…?”

“அப்படியெல்லாம் இல்லை சார்…அவங்க புருஷன் ரொம்ப வருஷமா குவைத்துல இருக்காரு…இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் ஆச்சு…ஒரே ஒரு தடவை தான் அந்தம்மா வீட்டுக்காரர் இங்க வந்திருக்காரு…அப்பவே இந்த பொண்ணும் வந்திருந்துச்சு…மத்தபடி சொல்றதுக்கு ஒன்னும் பெருசா இல்லை….ஆனா…”

“என்ன ஆனா? சொல்லுங்க…”

“அந்தம்மா கொஞ்சம் ஒரு மாதிரி…புருஷன் வேற இங்கில்லையா? கொஞ்சம் அப்படி இப்படின்னு இங்க ஒரு பேச்சு…அவ்ளோ தான்…”

“அந்த பொண்ணு? அத பத்தி எதாவது தெரியுமா?”

“இதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு மூணு தடவை வந்திருக்கு…ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் வந்திருந்தது…எப்பவும் ஒரு மாதிரி மயக்கமா இருக்கற மாதிரி தான் பாக்கும்…எனக்கென்னவோ ட்ரக் அடிக்டுன்னு தோணுது…”

ஒரு ஆயாச பார்வையை உதிர்த்தபடி, “சரி ராமசாமி சார்! நீங்க இப்ப கிளம்பலாம்…நான் வேற எதாவது வேணும்ன்னா சொல்லி அனுப்பறேன்…”

“இல்லை சார்…நான் வேணா இங்கயே இருக்கேன்…ஒன்னும் பிரச்சனை இல்லை…”

“இல்லை சார்…நாங்க இன்னும் சில பேத்த விசாரிக்க வேண்டியது இருக்கு…அதனால…நீங்க…ப்ளீஸ்…”

“அப்ப உங்க இஷ்டம்…” கையை கூப்பி ஒரு வணக்கத்தை போட்டபடி அங்கிருந்தி சென்றார் ராமசாமி.

ராமசாமி சென்றவுடன், கதவருகே காத்து நின்று கொண்டிருந்த ராணி ஏதோ முனுமுனுத்தபடி உள்ளே நுழைந்தாள்.

“நீ தான் ராணியாம்மா?”
“ஆமா சார்…”
“இங்க தான் தங்கியிருக்கியா?”
“இல்லை சார்…நான் பக்கத்து ஏரியா…இங்க ஐஞ்சாறு வீட்ல வேலை செய்யறேன்….அதனால நாள் பூரா இங்கிட்டு தான் இருப்பேன்…”

“ஹ்ம்ம்…அந்த செக்ரட்டரி சொன்னதெல்லாம் கேட்டியா?” நகைத்தபடி பரத் கேட்ட விதமே, ராமசாமி பேசியதை கேட்டு வெளியே நின்று கொண்டிருந்த ராணி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடுத்ததை அவர் பார்த்துவிட்டார் என்று சொல்லாமல் சொல்லியது.

“கடங்காரன்…அயோக்கியபய…பொம்பளைன்னாலே அத்தனை இளப்பம் அவனுக்கு…”

“ஏம்மா? இப்படி ஒரு கோவம்?”

“பின்ன என்ன சார்? இந்தாளு கல்லுக்கு சீலை கட்டி வச்சிருந்தா கூட போய் மோப்பம் பிடிப்பான்…அப்படி ஒரு வெட்கங்கட்டவன்…அந்தம்மா ஏதோ புருஷம் கூட இல்லாம ஒத்த பொம்பளையா இருக்க போக, இந்த மாதிரி ஆளுககிட்டெல்லா விலகியே தான் இருப்பாங்க…அதனால, சும்மா இவனே இப்படி ஒரு பொய்யை சொல்லிட்டு திரியறான்….அந்தம்மா கேட்டா எத்தன மனசு சங்கடப்படும்?” ராணி உண்மையாகவே வருத்தப்பட, பரத், “சரி…அந்த பொண்ண பத்தி ஏதோ சொன்னாரே?”

“நான் அந்த பொண்ண இதுக்கு முன்னாடி பாத்ததில்லை சார்…நான் வேலைக்கு சேந்தே ஆறு மாசம் தான் ஆகுது…ரொம்ப நாள் கழிச்சு அக்கா பொண்ணு வீட்டுக்கு வரான்னு சொன்னாங்க…அந்த பொண்ணு வந்ததுல இருந்தே சரியாவே பேசலை…உம்முன்னு தான் இருந்துச்சு…வந்து ரெண்டே நாள் தான்…அதுக்குள்ள இப்படி பண்ணிகிடுச்சு…”

“ஓஹோ…வேற எதாவது, அந்த பொண்ணுக்கும் அவங்க சித்தி, இல்லை வேற யாருக்கும் சண்டை, சச்சரவு எதாவது?”

“அப்படி எல்லாம் இல்லை சார்…ஹாங்…இப்ப தான் ஞாபகம் வருது…அந்த வீட்டம்மா ரொம்ப நாள் முன்னாடி சொன்னது…இந்த பில்டிங்குல வேலைக்கு சேந்த புதுசுல, செக்ரட்டரி கடங்காரன் சும்மா சும்மா என்னை ஒரச்சிட்டு திரியறான்னு அந்தம்மா கிட்ட ஒரு நாள் பொலம்பிட்டு இருந்தேன்…அப்ப சொன்னாங்க…எங்க அக்கா பொண்ணு போன தடவை வந்தப்போ இப்படி தான் அவகிட்ட வாலாட்டினான்….ஒரே அறை, அவன பளார்ன்னு அறைஞ்சிட்டான்னு சொன்னாங்க….”

“ஓஹ்….போன தடவைன்னா ஒரு வருஷத்துக்கு முன்னாடி கடைசியா வந்தப்பவா?”

“அதெல்லாம் தெரியாது சார்…பொதுவா போன தடவைன்னு தான் சொன்னாங்கன்னு…”

“ஹ்ம்ம்…அப்ப சந்தேக லிஸ்ட்ல ரெண்டாவது பேர் ராமசாமி…”

“ரெண்டாவது பேரா? அப்ப முதல் பேர் யாரு சார்? தற்கொலைன்னு இல்ல பேசிக்கறாங்க?” ஆர்வத்துடன் ராணி கேட்கவும், “நீ இப்ப போலாம்” என்றபடி வாசலை நோக்கி கையை காண்பித்தார் பரத்.

ராணி அங்கிருந்து அகன்றதும், முருகேசன், “அப்ப இன்னும் அந்த ப்ரேஸ்லட் ஆள விடலையா சார்?”

“எப்படி விட முடியும்? அவன் மேல தான் எனக்கு ஜாஸ்தி சந்தேகமா இருக்கு!”

[தொடரும்]

19 comments:

23-C said...

me the first!..katha jet vegathula poguthu...sooper!

சங்கர் said...

Kathai semma interestingaa pogudhu.. pinreenga ponga.. seekkiram next parta podunga madam...

சங்கர் said...

narrations laam chancae illa.. super..

SaRa said...

Hey,the narration is tooo good. Next part soon, too, please....

Badri said...

excellent story telling...thrilling a poitruku..waiting for next post :-)

Raghav said...

வாவ் செம திரில்லர் திவ்யா... தமிழ்ல திகில் படம் தான் எடுக்குறாங்க அவ்வளவா திரில்லர் வர்றதே இல்லன்னு நினைப்பேன்.. இவ்வளவு அட்டகாசமா கதை சொல்றீங்க.. சூப்பர்.. ஒரு குறுஞ்சினிமா முயற்சி பண்ணலாமே.. :)

Anonymous said...

நல்லா இருக்குங்க :-)

getmeatvnr said...

Nice Thriller, Expecting Next Post !

sri said...

Wow, attagasama erukku, engalukkum avan mela dhaan sandhegam ana paarunga apdi vachikitta kandiappa avana erukka maatan hehe :P
Mugil kuda edhukku karanama erukkalamey hehe :) Romba interestinga a pogudhu adhutha part eppa poduveengannu yosikaren :)

Sema narration, onney onnu first paragraphla bracketla (25) nnu age varudhu , andha kathi padikkum podhu, bracket kudava padikaraan ?

anbudan vaalu said...

very intresting...waiting for the next part...

Vijay said...

காதல் கதைகள் எழுதிட்டிருந்த திவ்யா இப்போ கிரைம் நாவல் எழுதற அளவுக்கு உயர்ந்தாச்சா? அசத்தல் :-)

கொசுறு கேள்வி: மதுரைல ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் இருக்கு???

Karthik said...

கலக்கல். செம சஸ்பென்ஸா போறதே?! :)

டயலாக்ஸ்லாம் ரொம்ப நல்லாருக்கு. கேரக்டருக்கு ஏத்த மாதிரி எழுதிருக்கீங்க.

Nimal said...

கலக்கலா போகுது....

gils said...

sonapolavay murder mystery poatu kalkiteenga :D chaanceleenga...u shd definitely try vikatan

மதி said...

மூன்று பாகமும் அதே விறுவிறுப்புடன்... அசத்தலாய். வாழ்த்துகள். இதே கதையோட்டத்துடன் அடுத்த பாகங்களை எதிர்நோக்குகிறோம்.

Prabhu said...

செமயா எழுதிருக்கீங்க! இப்படி inquistive கதை படிச்சு ரொம்ப நாள் ஆகுது! அப்புறம் முதல் வரில இருக்குற ஏரியா மூன்று மாவடி இல்ல?

நீங்கள் இன்னும் இந்த கதையை மதுரையின் பிண்னனி வைத்த காரணம் சொல்லவே இல்லை!

G3 said...

Pinnni pedal edukkareenga ponga :)))) Next part plz :)))

மே. இசக்கிமுத்து said...

நல்ல கதையோட்டம்!!

ஜியா said...

Ennatha solla? engeyo poitteenga... :))