Monday, October 5, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 7

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6

“ஆசை முகம் மறந்து போச்சே…"

பதினந்தாவது முறையாக அதே பாடல் ஒலிக்க, பொறுமையிழந்த திவ்யா மதுவின் லேப்டாப்பை பிடிங்கி அந்த பாடலை நிறுத்தினாள்.

"என்னாச்சு திவ்யா? நல்ல பாட்டு தானே?"

"நல்ல பாட்டு தான்...அதுக்காக? பதினங்சு தடவையா கேப்பாங்க?"

"அதுக்குள்ள பதினஞ்சு தடவை ஓடிடுச்சா?"

"ஹ்க்கூம்...கிழிஞ்சுது...ஆமா...என்ன நீ ஒரு மாதிரியா உக்காந்திருக்க?"

"அது ஒன்னுமில்லை...அப்பா இன்னிக்கு மறுபடியும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சுட்டாங்க..."

"ஹ்ம்ம்...நீ என்ன சொன்ன?"

"நான் என்ன சொல்றது? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிட்டேன்..."

"என்ன மது இது? அம்மா இறந்து ஒரு வருஷத்துக்கு மேலையே ஆகப் போகுது...நமக்கும் இனி இந்த வருஷம் முழுக்க ப்ராஜக்ட் தான்...பேசாம அப்பாகிட்ட சரின்னு சொல்லிட வேண்டியது தான?"

மது ஒன்றும் பேசாமல், தரையை வெறித்து நோக்கத் துவங்கினாள்.
"கல்யாணப் பேச்சுன்னு எடுத்தாலே, எங்கம்மா ஞாபகம் தான் திவ்யா வருது...அன்னிக்கு, அன்னிக்கு...அவ்ளோ அவசர அவசரமா வேலை செய்யாம இருந்திருந்தா அம்மா இன்னும் இருந்துருப்பாங்களோ என்னவோ..."

"விடு மது...இன்னும் எத்தன நாளைக்கு தான் அதையே நினைச்சுட்டு இருப்ப?"

"அப்பா கேட்டாரு...அன்னிக்கு பாக்க வந்தாங்களே...அந்த பையனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலையாம்...அவங்களையே வேணா கேட்டுப் பாப்போமான்னு..."

"அவங்க தான் அதுக்கப்புறம் எதுவுமே பேசலையே...அவங்கள போய் எப்படி?"

"நானும் அதே தான் சொன்னேன்...ஆனா, அப்பாவுக்கு என்னன்னா, அவன் அம்மா செலக்ட் பண்ண பையனாம்...அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க..."

"ஓஓ...அதானா விஷயம்? ஆசை முகம் மறந்து போச்சே பாட்டெல்லாம்?" திவ்யா சிரிக்க, மது, "நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாக்கறேன்...எனக்கு சுத்தமா ஞாபகம் வர மாட்டேங்குது..."****
“அந்த பொண்ணோட அப்பாகிட்ட என்ன சொன்னீங்க?” ரஞ்சித் வெகுவாக பொறுமை இழந்திருந்தது அவன் குரலிலேயே தெரிந்தது.

’அவன்கிட்ட சொல்ல வேண்டாம்னு அப்பயே சொன்னேன்…கேட்டியா?’ என்று பார்வையாலேயே மனைவியை கடிந்து கொண்டார் சுப்ரமணியம்.

ஆனால் தனலட்சுமி, மிக பொறுமையாக “இதப் பாருப்பா ரஞ்சித்து…எங்களுக்கு இருக்கறது நீ ஒரே பையன்…உனக்கு பாத்து பாத்து கல்யாணம் பண்ணனும்னு தான் நாங்க ஆசைபடறோம்…சும்மா, எடுத்தோமா கவுத்தோமான்னு எல்லாம் செய்ய முடியாதுப்பா…அந்த பொண்ண பாக்க போன நேரமே சரியி்ல்லை…ஏதோ நம்ம நல்ல நேரம் நிச்சயம் பண்றதுக்கு முன்னாடியே அது தட்டி போயிருச்சு…”

“என்னம்மா இப்படி பேசுறீங்க? அந்த அம்மா இறந்தது ஒரு விபத்து…”

“அதெல்லாம் எனக்கு தெரியாதுடா…இத பாரு…ஒரு வருஷமா பொண்ணெல்லாம் பாக்க வேணாம்னு சொல்லி நீ வீம்பு பண்ணதுக்கு நான் ஒத்துகிட்டேன்ல? இப்ப நான் சொல்ற பேச்ச, நீ கேளு…இந்த ஃபோட்டவ பாரு….எங்க தூரத்து சொந்தம் தான்…பொண்ணு ரொம்ப அமைதியான பொண்ணாம்…”

“முடியாதும்மா…நீங்க சொல்ற காரணமெல்லாம் ஏத்துக்குற மாதிரி இல்லை…நான் ஏன் அந்த மதுவை கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு ஒரே ஒரு சரியான காரணம் சொல்லுங்க…அப்புறம் நீங்க காட்ற எந்த பொண்ண வேணா பாக்கறேன்…”

அவனுக்கும் ஏதோ நேரம் சரியில்லை என்று ஜோசியர் சொல்லியிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அவன் போக்கிலேயே விட்டிருந்தார் தனலட்சுமி. அதற்கு மேல் அவன் பேச்சை கேட்க அவர் தயாராக இல்லை. ரஞ்சித்தின் பிடிவாதம்மும் அவன் அம்மாவின் முன் ஒரு சில நாட்களிலேயே செல்லாக்காசாகிப் போனது. ஒரு முறை கூட பார்த்திறாத ஒரு பெண்ணிற்காக அம்மாவிடம் கோபித்துக் கொள்ளவும் முடியாமல், அம்மா இஷ்டப்படியே நடக்க சம்மதித்தான் ரஞ்சித்.

ரஞ்சித்திற்கு வேறு இடத்துல் ஏற்கனவே கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதாய் அப்பா சொன்ன செய்தியை கேட்டு சொன்ன செய்தியை கேட்டு சோர்வடைந்தாள் மது. அவள் மனதிற்கு திட்ட வட்டமாகத் தெரிந்திருந்தது, அவள் ராசியற்றவள் என்று கருதியே அவர்கள் அப்படி சொல்லியிருக்கக்கூடும் என்று.

அந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட எட்டு மாதங்கள் கடந்திருந்ததன, அவள் அப்பாவும் முனைப்பாக அவளுக்கு வேறு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தார், அவரது எல்லா முயற்சியும் பயனளிக்காது போகவே, அம்மா இறந்த தினத்தன்று அதை பற்றி மதுவிடம் மிகுந்து கவலையோடு பேசிக்கொண்டிருந்தார் அவர். கடந்து ஒரு வருடமாக, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த மது, இதைப் பற்று அதிகம் சிந்திக்க கூடாது என்று முடிவெடுத்திருந்த போதும், அப்பாவின் குரலில் இருந்த சோகம், அவளை கவலைக்குள்ளாக்கியது. அவள் அம்மா இறந்த தினத்தன்று நிகழ்ந்தவை அனைத்தும் மீண்டும் மீண்டும் அவள் கண் முன் தோன்றி உயிரை வதைத்தது.

“அம்மா! நானே போய் அந்த செயின எடுத்து போட்டுக்கறேம்மா…நீ மாடிக்கு போகாதம்மா என்று தூக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

பொதுவாக ஆழ்ந்து உறங்கும் திவ்யா, அன்று தொடர்ந்து பேச்சொலி கேட்கவே, லேசாக கண்ணைத் திறந்தவள், மது உளறிக் கொண்டிருப்பதை பார்த்து, “மது!” என்று உரக்க அவளை அழைத்துவிட்டு மீண்டும் உறங்கிப் போனாள்.

திடுக்கிட்டு விழித்த மதுவிற்கு ஒரு நொடி எதுவுமே புரியவில்லை, முதலில் திவ்யாவை பார்த்தாள், வழக்கம் போல திவ்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். தன்னை யாரோ அழைத்தது போல் தோன்றியது நிச்சயமாக கனவல்ல என்று உணர்ந்தாள். குழம்பிய குட்டையில் கல்லாய் அவளுக்குள் ஒரெண்ணம் உதித்தது. “இன்று அம்மாவின் இறந்த தினமாயிற்றே? அப்படியென்னாறால் என்னை அழைத்தது அம்மாவாக இருக்குமோ?” இப்படி பலவாறு யோசித்துக் கொண்டு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த மது, திரைசீலை வழியாக எதிர் அறையில் விளக்கு எரிந்து எரிந்து அனைவதை கண்டு வியப்படைந்தாள். அந்த அறையில் வசித்த ரதி, வெகு நாட்களாய் அந்த விடுதியில் வசித்து வந்தாலும், யாருடனும் அதிகம் பேசியதில்லை அல்லது வேறு யாருக்கும் அவளுடன் பேசும்எண்ணம் கூட தோன்றியதில்லை.

அன்று ஏனோ, அவள் அறைக்கு போய் என்ன தான் செய்து கொண்டிருக்கிறாள் பார்ப்போம் என்ற எண்ணம் மதுவிற்கு தோன்றியது. மறு கணமே, சத்தம் எழுப்பாமல் தன் அறையை விட்டு வெளியேறினாள். அப்போது திடீரென்று விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, நிசப்தமாய் போயிருந்த அந்த இருட்டு அறையை நோக்கி நடந்தாள் மது! மது அந்த அறையின் வாயிலில் கால் வைக்கவும், கோரமான ஒரு அழுகை ஒலி, இரவின் நிசப்பத்தை கீறிக் கொண்டு அவளது செவிப்பாறைகளை துழைத்தது. கதவின் கைப்பிடியை மெதுவாய் சத்தம் எழுப்பாமல் திருகியவள், கதவு திறந்ததும் அங்கு கண்ட காட்சியில் பயத்தில் அப்படியே உறைந்து போய் நின்றாள்.

***************************************************************
தன் அப்பா சொன்ன வக்கீலை சென்று பார்ப்பதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள் முகில். ரஞ்சித்தின் அப்பா கோபம் தனிந்து வேறொரு வக்கீலை உடனே ஏற்பாடு செய்வார் என்று தான் அவளும் அவ்வளவு நாட்களாக காத்திருந்தாள். அவர் கோபம் குறையாதது மட்டுமின்றி, முகிலிடமும் அவனை மறந்துவிடும் படி கூறியது அவளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ரஞ்சித் நிச்சயமாக எந்த தப்பும் செய்திருக்க மாட்டான் என்று முகிலுக்கு திட்டவட்டமாக தெரிந்தாலும், தன் மாமனார்அவ்விதம் எண்ணவில்லை என்ற உண்மை அவளை பெரிதாக வேதனை படுத்தியது. இப்படி பலவாறு யோசித்தவாறே, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கொல்லாமல் வெளியே செல்லத் துவங்கிய முகிலை தடுத்து நிறுத்தினார் சுப்பிரமணியம்.

"எங்கம்மா கிளம்பிட்ட?"

"வக்கீலை பாக்கறதுக்கு தான் மாமா...அப்பா எங்கயோ விசாரிச்சு, ஒரு வக்கீலை கண்டுபிடிச்சு சொன்னாரு, அவரை தான் பாக்க போய்ட்டு இருக்கேன்...நீங்களும் வரீங்களா?"

அவர் எதுவுமே பேசாமல் ’போ’ என்று கதவை நோக்கி சைகை செய்தார். அவரது செய்கை, ’எக்கேடோ கெட்டுப் போ’ என்று சொல்லாமல் சொல்லியதை போல் பட்டது முகிலுக்கு. அது நாள் வரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் அந்த கணமே வெடித்துச் சிதற, ஆவேசமாய், "பெத்த பையன் மேலையே சந்தேகப் படறீங்களே மாமா? இதெல்லாம் உங்களுக்கு ஞாயமா இருக்கா?"

ஆனால் அவர் எந்த வித பதட்டமும் படாமல், மனைவியை பார்த்து, "கேக்குறாள்ல? சொல்லு தனம்...ஏன் முழிக்கற?"

"என்ன அத்தை? என்ன இதெல்லாம்? யாரோ தெரியாத ஒரு பொண்ணு செத்ததுக்கு அவர் யதேச்சயா அங்க போனதுக்கும் முடிச்சு போட்டு அநியாயமா அவரை ஜெயில்ல வச்சிருக்காங்க....மாமாவும் அவர் மேல கோவப்பட்டுகிட்டு இருக்காரு..."

தனலட்சுமி எதுவும் பேசாமல் கையை பிசைந்து கொண்டு நிற்க, சுப்பிரமணியம், "யாரோ தெரியாத பொண்ணாம்...எத்தன நாளைக்கு தான் மறைச்சு வைக்க போற? இப்ப நீயே சொல்றியா? இல்லை நான் சொல்லவா?"

தனலட்சுமி, "அது வந்து முகில்...அந்த பொண்ணு யாரோ தெரியாத பொண்ணுன்னு சொல்லிட முடியாது...ஆனா, ரஞ்சித்துக்கும் அந்த பொண்ணுக்கும் பழக்கம் இருக்குன்னு எனக்கு தோணலை..."

"என்ன உனக்கு தோணல? அந்த பொண்ணோட ஒரு வாரம் மட்டும் பேசிட்டு, அதுக்கப்புறம் ஒரு வருஷம் முழுக்க வேற பொண்ணே பாக்க கூடாது, அதே பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு உன் மகன் அடம்புடிச்சான்னு மறந்து போச்சா? இவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லை...ச்சை..."

முகில் திகைத்து நிற்க, தனலட்சுமி ரஞ்சிதிற்கு மதுவை பெண் பார்த்த கதை, அவள் அம்மா இறந்ததும், தனலட்சுமி அந்த கல்யாணப் பேச்சை நிறுத்தியது, ரஞ்சித் ஒரு வருடமாக வேறெந்த பெண்ணையும் பார்க்க விடாமல் அடம் பிடித்தது என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.

அத்தை சொன்னவையெல்லாம் நிதானமாக கேட்டு முடித்த முகில், "அப்ப என்ன மாமா சொல்ல வர்றீங்க? அவருக்கு அந்த பொண்ண தெரிஞ்சிருக்கும்னு சொல்றீங்களா?"

"சொல்ல என்ன இருக்கு? அது தான் உண்மை!"

"இல்லை!!! இதை நான் நம்ப மாட்டேன்...அவருக்கு அந்த பொண்ணு முகம் கூட ஞாபகம் இல்லை...இப்ப கூட அவருக்கு செத்தது அந்த பொண்ணு தான்னு தெரியாது...நீங்க சொன்ன கதையை அவரே எங்கிட்ட சொல்லியிருக்காரு....அவரு ஒரு வருஷம் அடம்பிடிச்சதே, உங்க மூட நம்பிக்கையால ஒரு கல்யாணத்தையே நிறுத்த வேணாமேங்கற எண்ணம் தான்..."

"நீ இந்த மாதிரி இருக்கறதால தான், அவன் உன்னை இத்தன நாளா ஏமாத்திட்டு இருக்கான்...அப்படி பெரிய உத்தமனா இருந்தா, நைட்டு பன்னென்டு மணிக்கு மாடிக்கு எதுக்கு போறான்? அதுக்கு மொதல்ல பதில் சொல்லச் சொல்லு அவன..."

"அவரு எதுக்கு போனாருன்னு எனக்கு தெரியாது...ஆனா அவர் எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டாரு...அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்...வக்கீலை பாக்க நேரமாச்சு! நான் வரேன்..." அவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் விடு விடுவென வீட்டை விட்டு வெளியேறினாள் முகில்.

வெளியே அடித்துக் கொண்டிருந்த வெயிலை போலவே, அவள் மனதும் தகித்து கொண்டிருந்தது. எப்பேர்பட்ட தன் கணவனை சர்வசாதரணமாக குறை கூறி விட்டாரே, அதுவும் பெற்ற தந்தையே! ’சரி! ஆனாது ஆகட்டும், ரஞ்சித்தை பற்றி அவள் அறிந்த அளவிற்கு வேறு யாரும் அறிந்திருக்க ஞாயமில்லை தான். இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம்’ என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

வக்கீல் சோமநாதனின் அறையில் காத்திருந்தவளுக்கு, அந்த அறையின் செழிப்பு சற்றே நிம்மதியை தர நிம்மதி பெருமூச்சு விட்டாள். பழைய வக்கீலும் விலகிக் கொள்ள, மாமனாரும் கை கழுவிவிட, யாரிடம் போவது, எந்த வக்கீலை தேடுவது என்று மலைத்துப் போயிருந்த நிலையில்,அவளது அப்பா சோமநாதனின் விவரங்களைப் பற்றி சொன்ன போது கூட, பிறந்த கிராமத்தை தவிர வேறு ஊரையே பார்த்திராத தன் அப்பாவிற்கு இதிலெல்லாம் விவரம் போதாது, எப்படிப் பட்ட வக்கீலோ என்று மனச்சோர்வடைந்திருந்தாள். இன்று இந்த வக்கீலின் அலுவலகத்தில், நிறைய இளம் வக்கீல்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்ததையும், அவளுக்கு முன்னரே ஒரு சிலர், வக்கீலை பார்க்க காத்திருந்ததையும் பார்த்து முகில் மனதில் பெரிதாக நம்பிக்கை மலர்ந்தது.
மனிதனுக்கு கஷ்டம் என்று வரும் போது, பணத்தையும், அறிவையும் விட நம்பிக்கையும், சக மனிதர்களின் ஆதரவும் தான் மிக மிக முக்கியம் என்று அப்போது தெளிவாக அவளுக்கு புரிந்தது. இவ்வாரு ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கும் போது, சோமநாதனை அவள் சந்திக்கும் முறையும் வந்தது.
சுமனிடமிருந்து ஏற்கனவே கேஸ் பற்றின விவரங்களை திரட்டி வைத்திருந்த சோமநாதன், முகிலுக்கு மிகுந்த நம்பிக்கையூட்டும் விதமாக பேசிக் கொண்டிருந்தார். கடைசியில், ’ஆனா...ஒரே ஒரு விஷயம்..."

"சொல்லுங்க சார்..."

"உங்க ஹஸ்பென்ட் நடு ராத்திரி எதுக்கு மாடிக்கு போனாருன்னு சொல்ற காரணத்த கண்டிப்பா கோர்ட் நம்பாதும்மா...ஏன் நீங்களே அதை நம்பறீங்களா சொல்லுங்க?"

"அது வந்து..."

"சும்மா சொல்லுங்க...எங்கிட்ட தான சொல்றீங்க?"

"என்னாலையும் நம்ப முடியல சார்....ஆனா....கண்டிப்பா அவரு எந்த தப்பான காரியத்துக்காகவும் போயிருக்க மாட்டாருன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும்..."
"அதெல்லாம் சரிம்மா...அப்படி நம்பறதால தான் நானே இந்த கேஸ் எடுக்க ஒத்துகிட்டேன்...ஆனா, இந்த விஷயத்த மட்டும் எப்படியாவது அவர்கிட்ட கேட்டு சொன்னீங்கன்னா, அப்புறம் தீர்ப்பு நமக்கு சாதகமா தான் வரும்னு நான் அடிச்சு சொல்லுவேன்! பப்ளிக் ப்ராசிக்யூட்டர் லீலாவதின்னு கேள்விப் பட்டேன்…அந்தம்மா தோண்டி துருவி கொடைஞ்செடுத்துடும்! அதுக்கு முன்னாடி சரியான காரணம் மட்டும் ரஞ்சித் சொல்லலை, அப்புறம் ரொம்ப கஷ்டம் தான்…"

தன்னால் இயன்ற வரை முயற்சிப்பதாக சொல்லிவிட்டு நேரே வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள். ரஞ்சித் காரணமின்றி பிடிவாதம் பிடிக்கும் குணமல்ல. அப்படி இருக்கும் போது, அவன் ஒரு விஷயத்தை மறைக்கிறான் எனும் போது, அவனை நம்பாமல் அவனை மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்க முகிலுக்கு மனமில்லை. ’எல்லோரையும் போல் நானும் அவரை நச்சரித்தால், மற்றவர்களைப் போல் நானும் அவரை நம்பவில்லை என்றாகிவிடுமே! அவராக சொல்கிற வரை அவரிடம் எதுவும் கேட்கக்கூடாது’ என்று திட்டவட்டமாக முடிவெடுத்தாள்.

அவளே, அவனிடம் அந்த காரணத்தை சொல்லச் சொல்லி மன்றாடும் நாள் கூடிய சீக்கிரமே வரப்போவதை அறியாமல்.

[தொடரும்]

18 comments:

Raghav said...

மீ த ஃபர்ஸ்ட்டேய்ய்ய்ய்

Raghav said...

அப்பாடி, ரொம்ப நாளைக்கப்புறம்.. இப்போ பதிவப் படிச்சுட்டு கமெண்டுறேன் :)

Raghav said...

ரொம்பப் பெரிய பகுதியாயிருச்சு.. காட்சிகள் மாறி மாரி பயணித்தாலும்.. கதையில் தொய்வில்லாமல், குழப்பமில்லாமல் இருக்குதுங்க..

Raghav said...

//கதவின் கைப்பிடியை மெதுவாய் சத்தம் எழுப்பாமல் திருகியவள், கதவு திறந்ததும் அங்கு கண்ட காட்சியில் பயத்தில் அப்படியே உறைந்து போய் நின்றாள்.//

அடுத்த ட்விஸ்ட்டா ? பாப்போம்.. ரஞ்சித் குற்றவாளி கிடையாதுன்னு மட்டும் என் மனசு சொல்லுது,.. பாக்கலாம்.

சங்கர் said...

Superb narration, semma flow.. dhool kelappureenga..

gils said...

////கதவின் கைப்பிடியை மெதுவாய் சத்தம் எழுப்பாமல் திருகியவள், கதவு திறந்ததும் அங்கு கண்ட காட்சியில் பயத்தில் அப்படியே உறைந்து போய் நின்றாள்.////

avvvvvvvvvv.....epdinga...ipdi..en en en?

anbudan vaalu said...

a new twist???
good...but,finish the story fast na.....

G3 said...

Avvvvvvv.. Ovvoru muraiyum padikka varrappo pona vaati vecha suspensea clear pannuveengannu paatha puthusa puthusa twistu veichittirukkeenga.. Innum ethana partunga baaki?? Seekiram podunga :))))

FunScribbler said...

suspense element is gg great!!:)gd work.

ரவி said...

ஹலோ, இங்க ஒரு நாவல் உருவாகுது எல்லாரும் ஓடியாங்க...

கலக்கல் !!! எல்லா பாகத்தையும் படிக்கப்போறேன்... *மாலைமதியில் வரும்முன்..

Prabhu said...

பேசாம வார இத்ழுக்கு வித்துருங்க! 24 எபிசோட் எழுதுவீங்க போல.

Nimal said...

சூப்பர்... அப்பிடியே சீக்கிரமா முடிச்சிருங்க... :)

நேசமித்ரன் said...

தெள்ளிய நடை, திகட்டாத சொல்லும் முறை .தடையற்ற சொல் ஓட்டம்
கடைசி வரைக்கும் அவிழாத கண்ணி

வாழ்த்துக்கள்

Faiza said...

Y.O.U A.R.E A.M.A.Z.I.N.G!!

sri said...

innum oru twist vandiruchey :)
super aduthu enna aga pogudho!

Karthik said...

எல்லோர் கமெண்ட்டுக்கும் ஒரு பெரிய ரிப்பீட்டேய்ய்...

இந்த மாதிரி போற புக்ஸ்ல எல்லாம் நான் கடைசி பக்கத்த படிச்சிருவேன்.. :P

Rajalakshmi Pakkirisamy said...

seekiram seekiram.. adutha pathivu...

Unknown said...

un kathaya naanum padichuten :) really good flow and interesting