Showing posts with label மொக்கை :-D. Show all posts
Showing posts with label மொக்கை :-D. Show all posts

Tuesday, January 20, 2009

சும்மா கொஞ்சம் மொக்கை

அதோ அந்த ஏணி மீது ஏற வேண்டும்…!!!

ஒரு நாள் நான் கோவையில இருந்து பெங்களூர் வரதுக்காக, ரயில்ல ஏறினேன். வழக்கம் போல அன்னிக்கும் அப்பர் பர்த் தான். நிறைய மக்கள் இங்கிட்டும், அங்கிட்டும் அலஞ்சிகிட்டு இருந்ததால, சரி, எல்லாரும் அவங்க அவங்க இடத்துல போய் உக்காரட்டும், அப்புறமா நம்ம மேல ஏறிக்கலாம்னு நானும் நின்னுட்டு இருந்தேன்.

அப்ப தான் அதே பர்த்துல உக்காந்திருந்த நம்ம தலைவரு என்கிட்ட, “எச்சூஸ்மீ…” ன்னாரு.

நான் ’என்ன?’ ங்கற மாதிரி ஒரு லுக் மட்டும்…

எதோ திருவிழாவுல காணாம போன குழந்தை கணக்கா என்னை பாத்துட்டு “you know tamil?” ன்னாரு.

நான்,”ஹ்ம்ம்…Yeah…” (மனசுக்குள்ள: கோயம்பத்தூர்ல வந்து என்ன கேள்வி இது!!! why this peter?)

உடனே முகத்துல பல்பு எறிய, நம்ம தலைவரு, “அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”

அதிர்ச்சி, சிரிப்பு, நக்கல் விக்கல் எல்லாம் என்னை ஒரே நேரத்துல தாக்க, “yeah…” ன்னு மட்டும் சொல்லிட்டு அமைதியாட்டேன் :( (ஆனா மனசுக்குள்ள: அவனா நீ? எத்தன வருஷமா ட்ரெயின்ல வந்து போய்ட்டு இருக்கோம்? என்னை பாத்தா எப்படி தெரியுது? இவ்ளோ நேரமா உன் தலை மேல கால் வைச்சு ஏறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னா நினச்ச? :-D)

******
ஆர்யபட்டா!!!

வழக்கம் போல தூங்கி வழிந்து கொண்டிருந்த மற்றுமொரு மதிய வேளையில், என்னோட டீம்மேட் என்கிட்ட, “திவ்யா! இந்த ஆர்யபட்டா எங்க இருக்கு?” ன்னு கேட்டா.

நானும் ஒரு நிமிஷம், இவ எதுக்கு திடீர்ன்னு இப்படி ஒரு கேள்விய கேக்குறான்னு யோசிச்சாலும், நம்ம அறிவுக்கு வந்த சவால சந்திச்சே தீருவோம்ன்னு ஒரு சபதத்தோட, “ஆர்யபட்டா ஒரு ஸாட்டிலைட், அதனால அது எங்க இருக்கும்? ஸ்பேஸ்ல தான் இருக்கும்!!!” ன்னு அந்த தூக்கத்திலையும் தெளிவா சொன்னேன்.

உடனே என் டீம்மேட், “திவ்யாஆஆஅ!!!! நான் conference room ஆர்யபட்டாவ கேட்டேன்.”

நான், "அவ்வ்வ்வ்வ்" :((

Saturday, December 6, 2008

Slip of fingers!

ஆங்கிலத்தில், “Slip of tongue” என்று ஒரு பதம் உண்டு, அதே போல், “Slip of fingers” (technically, spelling mistake :-) ) என்று ஒன்று இருந்தால், அது கீழே உள்ளவற்றுக்கெல்லாம் நன்றாக பொருந்தும்.

“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டம்…” என்று ஆரம்பித்து, 18 முறை தெளிவாக, ’வேண்டம்’ ’வேண்டம்’ என்று வெற்றி கரமாக மூன்றாம் வகுப்பில் எழுதியதில் தொடங்கி, சமீபத்தில், “பிரிவின் வழியை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்” என்று பின்னூட்டம் போட்டது முதல், என் ’slip of flngers’ பட்டியல் ஏராளம்.

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் இடை பட்ட காலத்தில் நடந்த, இப்போது நினைத்தாலும், கிச்சு கிச்சு மூட்டக் கூடிய, சில ’slip of fingers’ இங்கே…

“மதிப்பிற்குறிய ஐயா!
என் மதிவண்டியை காணவில்லை…”
என்று காம்போஷிஷன் புத்தகத்தில், எழுதிய கடிதம் முழுக்க மிதிவண்டிக்கு பதில் மதிவண்டியை தேடியது…

“சங்க காலத்தில், மன்னர்கள், புலவர்களை வெகுவாக மிதித்தனர்…” என்று எழுதி சங்க காலத்துப் புலவர்களை டேமேஜ் செய்தது…

“சிவபெறுமான்”, “சிவபெறுமான்” என்று பரிட்சை பேப்பரில், கட்டுரை முழுக்க எழுதி, பின் தமிழ் மிஸ்ஸிடம் அசிங்கப்பட்டு, “சிவபெருமான்” என்று இருபது முறை imposition எழுதி புண்ணியம் தேடிக் கொண்டது…

இதெல்லாம் கூட பரவாயில்லை, என் தோழி ஒருத்தி பரிட்சை பேப்பரில், “நளன் சோலைக்குள் புகுந்தான்” என்பதற்கு பதில், “நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்…:-D

சரி, “Slip of fingers” பத்தி சொல்லிட்டு, ’Slip of tongue’ பத்தி சொல்லாட்டா எப்படி?

ஒரு நாள்…இங்கிலிஷ் க்ளாஸ்ல, அடியேன் தான் டிக்டேட்டர் (நான் தான் நோட்ஸ் டிக்டேட் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்ல வந்தேன் ;-) )

அப்ப Japanese என்று ஒரு வார்த்தை வந்தது, அப்போ இங்கிலிஷ் மிஸ், “Divya! Better spell Japanese once” அப்படீன்னாங்க.

சரின்னு நானும் உடனே ரொம்ப ஸ்டைலா சொன்னேன், “Japanese…ஜே…ஏ…பே…ஏ”

“பி. ஏ” ங்கறது என் வாயில எப்படி “பே. ஏ’ ன்னு வந்துச்சுன்னு எனக்கு இன்னும் விளங்கல…அதுக்கப்புறம், க்ளாஸே ஒரு பத்து நிமிஷம் ஓயாம சிரிச்சதையும், குறைஞ்சது ஒரு வருஷமாவது அத சொல்லி, சொல்லியே என்னை எல்லாரும் ஓட்டி எடுத்தையும், நான் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்குறேன் :-)

Thursday, July 24, 2008

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part 3

அன்று: 1994 - 2000

சிட்டுவேஷன்: பள்ளி ஆண்டு விடுமுறை
நேரம்: அப்பாவும் அம்மாவும் வண்டியில் அலுவலகம் கிளம்பும் நேரம் - நாங்கள் செய்யும் லூட்டியை பொறுத்து, ஒன்பது மணி முதல், ஒன்பதரை மணிக்குள், ஒரு நேரம்.
இடம்: வீடு…

நான், அக்கா: அம்மா!!! டாடா...டாடா…

அம்மா: டாடா...டாடா…

நான், அக்கா: அப்பா! டாடா...டாடா…

அப்பா: ஹ்ம்ம்…ஹ்ம்ம்…இன்னும் சின்ன குழந்தைங்க மாதிரி டாடா சொல்லிகிட்டு…வரோம்…

அப்பா வண்டி பின்னாடி தெருவை தாண்டி போறதுக்குள்ள, நானும்,அக்காவும் தட தடன்னு ஒடி போய், வீட்டிற்க்கு பின்னால், காம்ப்பெளன்டு சுவர் ஓரமா, ஒரு ஸ்டூல் போட்டு ஏறி நின்னுக்கிட்டு, மறுபடியும்…

நான், அக்கா: அம்மா!!! டாடா...டாடா…

அம்மா: டாடா...டாடா…

அப்பா: உங்கம்மா என்ன ஃபாரினுக்கா போறா? போங்க உள்ள!!!

இன்று: 2005 - 2008

சிட்டுவேஷன்: வீட்டில இருந்து கிளம்பி, பெங்களூர் வரும் மற்றும் ஒரு ஞாயிற்றுக் கிழமை...
நேரம்: கண்யாகுமரி எக்ஸ்ப்ரஸ் டிரைவரின் இஷ்டப் படி...கோவை மக்களின் கஷ்டப் படி...இரவு பதிரோரு மணி முதல், அதிகாலை இரண்டு மணிக்குள், ஒரு நேரம்...
இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன்

அப்பா: டாடா...டாடா…

நான்: பை…பை…மனதிற்குள் (ஹீ ஹீ….என்ன கொடுமை ரகுபதி sir இது!!!)

Tuesday, July 8, 2008

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part 2

சீன் 1: அன்று - 1990
அப்பா: சொல்லு,பென்சில வச்சு எழுதிட்டு இருந்த...அப்புறம் பாக்ஸ்ல போட்ட...நடுல எப்டி கானம போச்சு?

நான்: ?!?!? (ஜோதிகா பாக்கற மாதிரி ஒரு கீழ இருந்து ஒரு பார்வை பாத்துட்டு, திறு திறு ன்னு முழிச்சிட்டு நிக்கறத தவிர வேற ஒன்னும் பண்ணல)

அப்பா: 2nd ஸ்டேண்டர்ட் வந்துட்ட, இன்னும் L.K.G கொழந்த மாதிரி பென்சில தொலச்சிட்டு இருக்க…

நான்: ?!?!?! (அதே திறு திறு தான்)

அப்பா: இது தான் கடசி தடவை, இனிமே பென்சில தொலைச்ச….பென்சில ஒரு நூல்ல கட்டி, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்…ஆமா!!!

சீன் 2: அன்று
அப்பா: Lunch bag எங்க?????
நான்: ?!?!?!

சீன் 3: அன்று
அப்பா: geometry box எங்க?????
நான்: ?!?!?!

சீன் infinity: அன்று
அப்பா: Calculator எங்க?????
நான்: ?!?!?!

****************************************************

சீன் 1: இன்று
நான்: தம்பி ஏன் தாத்தா ஒரு மாதிரியா இருக்கான்?

தாத்தா: பாக்ஸ தொலச்சிட்டு, உங்க சித்தப்பா கிட்ட திட்டு வாங்கிட்டு உக்காந்திருக்கான்...

நான்: எங்கப்பா கூட இப்டி தான் தாத்தா, சின்ன வயசுல நான் பென்சில தொலச்சா, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்னு பயமுருத்துவாரு…

தாத்தா: ஹா ஹா ஹா ஹா ஹா….(தாத்தா பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு)

நான்: என்ன தாத்தா ஆச்சு?

தாத்தா: நான் அதயே தான் உங்கப்பாவுக்கு செஞ்சேன்…9th ஸ்டேண்டர்ட் படிக்கும் போது, pen அ நூல்ல கட்டி, shirt button ல தொங்கவிட்டும் கூட அந்த pen அ தொலச்சுட்டு வந்துட்டாரு உங்க அப்பா…

நான்: ?!?!? [அடச்சே…இது இவ்ளோ லேட்டா தெரிய வருதே :-( ]

Tuesday, July 1, 2008

'ட்டு' கட்டி ஒரு கதை...

நட்டு சிட்டு இவங்க ரெண்டு பெரும் ஒரே செட்டு. சேட்டு கடைல வேல பாத்துட்டு இருந்தான் நட்டு, எட்டு ஊரையும் வெட்டியா சுத்தி வந்துட்டு இருந்தான் சிட்டு. ஒருநாள் இவங்க ரெண்டு பெரும் வெளையாடிட்டு இருந்தாங்க கிரிக்கட்டு. அப்பன்னு பாத்து அவங்க பால் ஓடிடுச்சு அவங்கள விட்டு. ஆனாலும் ரெண்டு பேரும் ஓடி ஓடி ரன் எடுத்துட்டு இருந்தாங்க பால விட்டு. அப்ப அந்த வழியா போன பொண்ணு பொட்டு பாத்தா அந்த பால தொட்டு. பொட்ட பாத்தவுடனே,ரெண்டு பேருமே அவள அடிச்சாங்க சைட்டு. அதனால நம்ம நட்டு, சிட்டு செட்டுக்கு வந்தது வேட்டு. வெட்டு, குத்து நடக்காத குறை தான்...ஆனா பொட்டுக்கு புடிச்சது என்னமோ நட்ட தான். அதனால நட்டும் சிட்டும் பிரிஞ்சு, நட்டும் பொட்டும் சேந்துட்டாங்க. "நட்டு! சட்டு புட்டுன்னு பொட்டு கழுத்துல தாலிய கட்டு...இல்லன்னா தட்டுவேன் தட்டு" ன்னு நட்டோட அப்பா கிட்டு சொன்னதால அவங்க கல்யாணம் ஆச்சு. இதனால மனசு கெட்டு போன சிட்டு, தற்கொல பண்ணிக்க போனான் பயத்த விட்டு. அப்ப அந்த வழியா போன சாமியார் பட்டு, "ஏன்டா சாகுற?" ன்னு சிட்டு தலைல லொட்டுன்னு வச்சாரு ஒரு கொட்டு. சிட்டு அவன் கதைய சொல்லவும், "ஏன்டா? அந்த நட்டுக்கு ஒரு பொட்டு கிடச்சா, உனக்கு ஒரு மொட்டு கிடக்காதாடா?" ன்னு சொன்னாரு. சாமியார் பட்டு சொன்னத கேட்டு, சிட்டு மனசுல ஒரு சொட்டு நம்பிக்க வந்துச்சு. சாமியார் பட்டு சொன்ன மாதிரியே ஒரு மொட்ட பாத்தான் சிட்டு, உடனே சிட்டும் மொட்டும் போனாங்க ஒரு டேட்டு. அப்பறம் சிட்டும் மொட்டும் கல்யாணம் கட்டி சந்தோஷமா வாழ்ந்தாங்க. சிட்டுக்கும் மொட்டுக்கும் பொறந்த கொழந்த பேரு லட்டு. அதே மாதிரி, நட்டுக்கும் பொட்டுக்கும் பொறந்த கொழந்த புட்டு. கடசில சிட்டு, மொட்டு, லட்டு...அப்பறம் நட்டு, பொட்டு, புட்டு எல்லாரும் சந்தோஷமா வாழ்தாங்க.

அப்புறம் கடசியா ஒன்னு. ..

இத படிச்சவங்க ஒரு மட்டு....இப்ப ஒடஞ்சுதா உங்க குட்டு? ஹய்யோ, என்ன வெட்டீராதீங்க வெட்டு...இது சும்மா ஒரு விட்டு...இதுக்கு நீங்க எல்லாரும் போடணும் ஒட்டு/கமெண்டு...

Friday, June 27, 2008

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…

சீன் 1அன்று (1988-1990)
நான்: அம்மா…கதை சொல்லுமா…

அம்மா: கதையா…ஹூம்….ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்…

நான்: வேணாம்…வேணாம்…புலி கதை சொல்லு…

அம்மா (மனசுக்குள்ள) : ஹய்யோ, இவளுக்கு கதை சொல்லியே ஒரு வழி ஆய்டுவேன் போல இருக்கே…

**************************************

சீன் 2அன்று (1990-1994)
அம்மா: நான் என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் சொல்லு பாப்போம்?

நான்: என்ன???? என்ன??? சொல்லு, சொல்லு…

அம்மா: டொட்டொ டொய்ங்….காமிக்ஸ் புக்கு…

நான்: ஹய்யா!!!!

**************************************

சீன் 1இன்று (2007-2008)
நான்: அம்மா…என் கதைய கேளும்மா…

அம்மா: கதையா…ஹூம்….

நான்: கேக்குறியா? இல்லயா?

அம்மா (மனசுக்குள்ள) : ஹய்யோ, இவகிட்ட கதை கேட்டே ஒரு வழி ஆய்டுவேன் போல இருக்கே…

**************************************

சீன் 2இன்று (2007-2008)
நான்: நான் ட்ரெய்ன்ல என்ன பண்ணிட்டு வந்தேன்னு சொல்லு பாப்போம்?

அம்மா: என்ன பண்ண?

நான்: நான் புதுசா ஒரு கதை எழுதியிருக்கேனே!!! இப்ப சொல்றேன் கேளு…

அம்மா: ஹயய்ய்யோ!!!

**************************************

அம்மாவ பத்தி எழுதிட்டு அப்பாவ விட்டுட்டா எப்டி? இப்போ அப்பா சீன்ஸ்
சீன் 1அன்று (1988-1990)
நான்: அப்பா…கதை சொல்லுங்கப்பா…

அப்பா: கதையா…இன்னைக்கு தான் லைபர்ரில ஒரு சூப்பர் புக் பாத்தேன், நாளைக்கு லஞ்சு டைம்ல படிச்சுட்டு வந்து சொல்றேன்…

நான் (அடுத்த நாள்): அந்த புக்க படிச்சீங்களாப்பா?

அப்பா: இன்னைக்கு பாதி தான் படிச்சேன்…நாளைக்கு முழுசா சொல்றேன்…

இப்டியே எல்லா நாளும் ஒடி போச்சு :-(

**************************************

சீன் 2இன்று (2007-2008)

நான்: அப்பா…நான் எழுதின கதைய படிச்சீங்களா?

அப்பா: எங்க? உங்கம்மா தான் கம்ப்யுட்டர் போடறா…எனக்கு காட்டறதே இல்ல ஒன்னும்…

நான்: அப்டீன்னா, நானே இப்ப சொல்றேன்…கேளுங்க….

அப்பா: ஹ்ம்ம்ம்….நான் அப்டியே ஒரு வாக் போய்ட்டு வந்துடறேனே…

இப்டியே இது வரைக்கும் எஸ்கேப்பு…

Monday, June 16, 2008

Some more Mokkais…

Ladder...
One day I was traveling from Coimbatore to Bangalore, I boarded the train and as usual it was an UB ticket. People were crossing here n there to settle down in their berths, so I just thought I wud better wait for makkal to settle down before climbing up to my berth. I kept waiting near my berth for a while, and there came this gentleman of the century... he looked at me as if I am a kid who got lost in some thiruvizha and said

"Excuse me..."

I said, "Yes..."

"You know Tamil?"

"Hmm, yeah" (manasukkulla: Coimbatore la vandhuttu ennadaa kelvi idhu?)

"Indha ladder mela kaala vachu...appram upper berthukku yeranum!!!"

I was like what!!! I didn't know how to react only. I just gave him a shocked look and said, "Yeah..." (manasukkulla: Dei!!! naan evlo varushamaa trainla vandhuttu irukken? ivlo neram un thala mela kaala vachu yerlaamnu wait pannittu irukkennaa ninache?)


One other sleepy afternoon at office...

My team mate asked me, "Divya, Where is this aryabhatta?"

"What? Why do u want to know?"

"Hey, tell me no? Where s aryabhatta???"

I gave a very clever reply, "Aryabhatta...It’s a satellite, so where will it be? It'll be in space only"

She cast one stunned look and said, "Divya, what happened? I am asking you about the conference room ARYABHATTAAAA"

No need to say how I felt after that :-)

Thursday, May 22, 2008

என் செல்ல பேரு...

i've one friend whose nick name is chikku, yest. i started to sing the first 2 lines just to tease him and rest of the lines followed instantly... and it should be sung in en chella peru apple tune :-)

என் செல்ல பேரு சிக்கு
என்ன ஜூஸ் போட்டு குடிசிக்கோ!

என் செல்ல பேரு தொக்கு
என்ன தோசைக்கு தொட்டுக்கோ!

என் செல்ல பேரு மக்கு
என்ன மண்டைல கொட்டிக்கோ!

என் செல்ல பேரு சுக்கு
என்ன காபில கலந்துக்கோ!

Monday, April 28, 2008

Modus operandi!!!

Some of the strategies guys follow to propose a girl


Strategy no. 1 – "சோனா! ஓஹ்ஹ் சோனா..."

  • See a girl.
  • Befriend her.
  • Then invent some story that you love someone else so deeply and tell her just one line of your invention (most of the girls are crackpots, they’ll believe!!! And its an old technique to make the girl feel secure)
  • Obviously the girl will be so much interested to know more about your so called girlfriend.
  • Result – you both will tend to become close friends.
  • Start writing verses n poems on that imaginary character and send it to her.
  • She may even start giving u some tips and tricks for your love. (யானை தானே தன் தலையில மண்ண வாரி போடறது இது தான்!)
  • Finally tell her that that the girl you love is actually her and leave her totally perplexed!!!

Strategy no 2 – நீ வருவாய் என (Legacy technique)

  • See a girl.
  • First start contacting her through orkut or some common friends
  • Start scrapping in orkut
  • Slowly place a g-talk request
  • Then start mailing/chatting frequently
  • Try to get her phone no. casually
  • Then start asking her to meet somewhere outside every now and then
  • Try the previous step like ghajini till the girl finally accepts (no other go for her)
  • After the meeting, call her daily over phone and start, “then, wat else, hee hee”
  • Finally on one fine day, tell her through all possible indirect ways that you love her.
  • Result – wat else? Get nice scolding from her and start again from step 1, ofcourse with a new girl.


Strategy no. 3 – பளேட்ட திருப்பு

  • See a girl
  • Become her friend
  • Start talking all crap things to her.
  • One day start a topic abt girlfriends and crushes.
  • Tell her that she s ur crush/ love.
  • See how she reacts.
  • If she gets angry, tell her, “hee hee, you believed? I was just kidding :-)”
  • Also act as though u r really angry on her, tell her, “how can you ever think of me in such a way? I was just kidding yaar, how can u think of me like this? நம்ம அப்படியா பழகி இருக்கோம்???” (அடிச்சான் பாரு பல்டி, எல்லாம் போன ஜென்மத்து பழக்கம் தான்!!!)
  • Tell her all possible close friend, true friend dialogues and close the chapter. (again some crackpot girls will believe this too!!!)
  • Btw, if she accepts??? Well...I’ve never heard of such stories so far ;)

So Guys, follow some different strategies and Gals, Beware!!!

Note: Any resemblance to real life incidents are definitely not coincidental ;)