அதோ அந்த ஏணி மீது ஏற வேண்டும்…!!!
ஒரு நாள் நான் கோவையில இருந்து பெங்களூர் வரதுக்காக, ரயில்ல ஏறினேன். வழக்கம் போல அன்னிக்கும் அப்பர் பர்த் தான். நிறைய மக்கள் இங்கிட்டும், அங்கிட்டும் அலஞ்சிகிட்டு இருந்ததால, சரி, எல்லாரும் அவங்க அவங்க இடத்துல போய் உக்காரட்டும், அப்புறமா நம்ம மேல ஏறிக்கலாம்னு நானும் நின்னுட்டு இருந்தேன்.
அப்ப தான் அதே பர்த்துல உக்காந்திருந்த நம்ம தலைவரு என்கிட்ட, “எச்சூஸ்மீ…” ன்னாரு.
நான் ’என்ன?’ ங்கற மாதிரி ஒரு லுக் மட்டும்…
எதோ திருவிழாவுல காணாம போன குழந்தை கணக்கா என்னை பாத்துட்டு “you know tamil?” ன்னாரு.
நான்,”ஹ்ம்ம்…Yeah…” (மனசுக்குள்ள: கோயம்பத்தூர்ல வந்து என்ன கேள்வி இது!!! why this peter?)
உடனே முகத்துல பல்பு எறிய, நம்ம தலைவரு, “அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”
அதிர்ச்சி, சிரிப்பு, நக்கல் விக்கல் எல்லாம் என்னை ஒரே நேரத்துல தாக்க, “yeah…” ன்னு மட்டும் சொல்லிட்டு அமைதியாட்டேன் :( (ஆனா மனசுக்குள்ள: அவனா நீ? எத்தன வருஷமா ட்ரெயின்ல வந்து போய்ட்டு இருக்கோம்? என்னை பாத்தா எப்படி தெரியுது? இவ்ளோ நேரமா உன் தலை மேல கால் வைச்சு ஏறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னா நினச்ச? :-D)
******
ஆர்யபட்டா!!!
வழக்கம் போல தூங்கி வழிந்து கொண்டிருந்த மற்றுமொரு மதிய வேளையில், என்னோட டீம்மேட் என்கிட்ட, “திவ்யா! இந்த ஆர்யபட்டா எங்க இருக்கு?” ன்னு கேட்டா.
நானும் ஒரு நிமிஷம், இவ எதுக்கு திடீர்ன்னு இப்படி ஒரு கேள்விய கேக்குறான்னு யோசிச்சாலும், நம்ம அறிவுக்கு வந்த சவால சந்திச்சே தீருவோம்ன்னு ஒரு சபதத்தோட, “ஆர்யபட்டா ஒரு ஸாட்டிலைட், அதனால அது எங்க இருக்கும்? ஸ்பேஸ்ல தான் இருக்கும்!!!” ன்னு அந்த தூக்கத்திலையும் தெளிவா சொன்னேன்.
நான், "அவ்வ்வ்வ்வ்" :((
