ஆடிப் பாடி அகமகிழ்ந்து,
அன்பில் திளைத்தோம்,
நினைவில்லையா?
பூவில் இருவர் பெயரெழுதி,
பார்த்து ரசித்தோம்,
நினைவில்லையா?
சிரித்து சிரித்து கண்களிலே,
கண்ணீர் துளிர்த்தோம்,
நினைவில்லையா?
கண்னோடு கண் உறவாடி,
பல கதைகள் பகர்ந்தோம்,
நினைவில்லையா?
கைகள் கோர்த்து இருவருமே,
உலகம் மறந்தோம்,
நினைவில்லையா?
விரல் நுனியின் ஸ்பரிசத்திலே,
உடல் சிலிர்த்தோம்,
நினைவில்லையா?
இருவர் இதயம் பரிமாறி,
உயிரோடு உயிரானோம்,
நினைவில்லையா?
ஒரு விரல் வந்து எனைத் தீண்ட,
என் வசம் நான் தோற்று…
மறுவிரல் வந்து தீண்டவும்,
என்னிடமிருந்து விடைபெற்று…
உன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,
உன்னிடமே தஞ்சமடைந்தேன்!
நீ சூடி வந்த பூக்களின் வாசத்தைக் கூட மறக்க முடியவில்லை,
பின்பு எப்படியடி நீ அள்ளித் தெளித்த நேசத்தை மறப்பேன்?
நிறம் மாறினாலும் மனம் மாறவில்லையடி இந்த பூக்கள்
உன் சுவாசத்தை இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறது!
என் அன்பை நீ மறுத்தாலும்,
என்னை அடியோடு வெறுத்தாலும்,
ஏதோ ஒரு உலகத்தில்…
ஏதோ ஒரு தருணத்தில்…
வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்,
நம் கடந்த காலத்தை!
அன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…
தேனில் தோய்த்த கனியாய்,
கடைந்தெடுத்த அமுதாய்,
பாலைவனத்து நீராய்,
என் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…
