Thursday, September 11, 2008

சிக்கன் பாக்ஸ்-3

பகுதி 1

பகுதி 2


“சில நேரங்கள்ள நாம பேச முடியாத பல வார்த்தைகள நம்ம மெளனம் பேசிடும். அன்னிக்கு முழுக்க அவ என்கிட்ட பேசவே இல்ல…”

“ஹ்ம்ம், அப்புறம் எப்ப பேசினா?”

“அவ என்கிட்ட பேசலைன்னாலும், என் மேல கோவப்பட்டு வந்த மெளனம் இல்ல அது, என் மனசு புண்படாம என்கிட்ட எப்படி மறுக்கறதுன்னு அவ யோசிச்சுட்டு இருந்தனால வந்த மெளனம்ன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது”

“எப்படிடா?”

“ஏன்னா, எனக்கு நிருவ பத்தி தெரியும்…அதனால, அன்னிக்கு வேலை முடிஞ்சதுமே, அவள ஆஃபிஸ் பக்கத்துல இருக்க ஒரு அழகான, அமைதியான, தெருவுக்கு ஒரு வாக் கூட்டுட்டு போனேன்…”

“ஹ்ம்ம்…”

“கொஞ்ச நேரம் அமைதியா ரெண்டு பேரும் நடந்தோம். நான் பேச ஆரம்பிக்கனும்ன்னு அவளும், அவ ஏதாவது பேச ஆரம்பிக்க மாட்டாளான்னு நானும்…இப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் கரைஞ்சுது.”

“ஒரு பொண்ண பாக்கறப்ப இருக்குற தைரியம்…அவளோட பேசி, பழகறப்ப இருக்குற தைரியம்…அவள தான் காதலிக்கறோம்ன்னு முடிவு பண்ணறப்ப இருக்குற தைரியம்…ஏனோ, அவ கிட்ட காதல சொல்றப்ப மட்டும் இருக்க மாட்டேங்குது…அவளா எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே, அவ கண்டிப்பா தன்னை நிராகரிச்சுடுவாங்கற குழப்பமும், பயமும் நம்ம ஊர்ல பாதி பசங்களுக்கு இருக்கு…நான் மட்டும் விதி விலக்கா என்ன? அவளுக்கு நான் பொறுத்தமானவன் இல்லைன்னு, அவ சொல்லாமலே, நானே முடிவு பண்ணிகிட்டேன்… ’ஏன்னா எனக்கு அவள பத்தி நல்லா தெரியும்…’ ன்னு என் முடிவுக்கு ஒரு காரணமும் தேடிகிட்டேன்.”

“அதனால, நான் பேச ஆரம்பிக்கறப்பயே, ஒரு ’ப்ரோபோஸல்’ மாதிரி இல்லாம, ஒரு ’கன்ஃபஷன்’ மாதிரி தான் ஆரம்பிச்சேன்…”

“நிரு, உனக்கு நிஜமாவே என்கேஜ்மெண்ட் ஆகி இருந்தா, என்னோட வாழ்த்துக்கள்…அப்படி இல்லன்னாலும், ஒரு அழகான உணர்வ…ஒரு சுகமான வலிய….எனக்கு தந்ததுக்காக, தேங்ஸ்…என் கிட்ட என்ன சொல்றதுன்னு நீ ஸ்பெஷலா எதுவும் யோசிக்க வேண்டாம், எனக்கு உன்ன பத்தி தெரியும், உன் விருப்பு, வெறுப்புகள், தெரியும்…I m not your cup of tea ன்னு எனக்கு நல்லா தெரியும்…அதனால, என் உணர்வுகள புரிஞ்சுக்கோ, என்ன ஏத்துக்கோன்னு நான் உன்ன கேக்க போறதில்லை.”

அதுக்கு நிரு, “ஷிவா…எனக்கு தெரியும்…நீ புரிஞ்சுக்குவன்னு எனக்கு தெரியும்...ஆனாலும் உன் ஃபீலிங்ஸோட விளையாடிட்டனோன்னு எனக்கு கஷ்டமா இருக்கு” ன்னு சொன்னா.

இல்லமா, அப்படி எல்லாம் இல்ல, ன்னு சொல்ல முடியல, ஆனா, ’அதுக்கு நீ பொறுப்பில்ல நிரு’ ன்னு மட்டும் சொன்னேன்.

“என்னடா, ரொம்ப நேரமா அமைதியா இருக்க? தூங்கிட்டியா?” ரொம்ப நேரமா ப்ரவீன் அமைதியாவே இருந்தான்.

“ஒன்னும் இல்ல டா, சும்மா நினைச்சு பாத்தேன்…அந்த அழகான தெரு, அதுல நீங்க ரெண்டு பேர் மட்டும்…ஹ்ம்ம்”



“ஆமா, ரொம்ப அழகா இருக்கும்…அதே தெருவில இன்னொரு விஷயம் கூட நடந்துச்சு…ஆனா, இதெல்லாம் நடக்கறதுக்கு கொஞ்சம் முன்னாடி”

“என்னது?”

“அன்னிக்கு நிருவோட பிறந்த நாள்…காலைல இருந்து ஒரு கிஃட்டு கூட கொடுக்காம, சாய்ந்தரம் அந்த தெருவுக்கு அவள ஒரு வாக் கூட்டுட்டு போனேன்…என்னோட ஃபோட்டோஸ்லயே அவளுக்கு ரொம்ப பிடிச்ச ஃபோட்ட ஒன்ன அவளுக்கு கிஃப்டு பண்னேன்”

“என்னது? உன்னோட போட்டோவா? நீ எடுத்த ஃபோட்டோவா?”

“இல்ல, இல்ல, என்னோட ஒரு சோலோ ஸ்னாப்”

“ஓஹ்ஹ்”

“அத அவ கிட்ட குடுத்தேன், ’ஹே இத வச்சுகிட்டு நான் என்ன பண்றது’ன்னு கேட்டா…”

ப்ரவீன், “அதேயே தான் நானும் கேக்கனும்ன்னு நினச்சேன்”

“இந்த ஃபோட்டவ நீ பாட்டி ஆகுற வரைக்கும் பத்திரமா வச்சுட்டு இரு, இந்த ஃபோட்டோவில இருக்கறது, யாருன்னு உன் பேரன் வந்து கேட்கும் போது, ’இது என் ஃப்ரெண்டு ஷிவா’ ன்னு சொல்லு போதும்னு சொன்னேன்.

“ஓஹ்…அவ்ளோ வருஷத்துக்கு அப்புறமும் கூட அவ ஃப்ரெண்டா இருப்பேன்னு சொல்லாம சொல்லிட்ட, சரி தான?”

“ஆமா…”

“இப்படி எல்லாம் நல்ல ஃப்ரெண்டா இருந்துட்டு, மனசுல காதலோட இருக்கமேன்னு உனக்கு ஒரு நாள் கூட உறுத்தலா இல்லயா?”

“ஆமா, ஒரு நாள் அப்டி தோனுச்சு, அவளுக்காக, ஆசை ஆசையா வாங்கி வச்சிருந்த ஒரு கிஃப்ட அந்த உறுத்தல் காரணமா அவ கிட்ட ரொம்ப நாள் குடுக்காமலே வச்சிருந்தேன்…”

“அப்படியா? என்ன கிஃப்டு அது?”

[தொடரும்]

45 comments:

Raghav said...

அட்டெண்டன்ஸ் பர்ஸ்ட், பதிவு நெக்ஸ்ட்.. ஸோ.. மீ த ஃப்ர்ஸ்ட்..

Divyapriya said...

அடப் பாவமே? எப்படி? போட்டு ஒரு நிமிஷம் கூட ஆகல...great raghav :)படிச்சிட்டு நல்லா கமெண்ட்டுங்க...

Raghav said...

அழகான படம், அழகான வார்த்தைகள், அழகான கதை நாயகர்கள், அழகான காதல் மொத்தத்தில் ரொம்பவே அழகான பதிவு..

( ராகவா, இதை யாராவது கவிதைன்னு நினைச்சு ரிப்பீட்டேய் சொல்லப் போறாங்க, காப்பிரைட் பண்ணி வைச்சுக்கோ..)

Raghav said...

//அடப் பாவமே? எப்படி? போட்டு ஒரு நிமிஷம் கூட ஆகல...great raghav :)படிச்சிட்டு நல்லா கமெண்ட்டுங்க...//

ஆபீஸ்ல, 7 மணிக்கு அப்புறம் வேற வேலை என்னன்னு நினைச்சீங்க.. அதுலயும் நான் மொத்தமா 7 அல்லது 8 பிளாக்ஸ் தான் போவேன்.

Divyapriya said...

raghav
//அழகான படம், அழகான வார்த்தைகள், அழகான கதை நாயகர்கள், அழகான காதல் மொத்தத்தில் ரொம்பவே அழகான பதிவு.. //

அடடா, கவித, கவித...

//அதுலயும் நான் மொத்தமா 7 அல்லது 8 பிளாக்ஸ் தான் போவேன்.//

நன்றி சொல்ல எனக்கு, வார்த்தை இல்ல ;-)

MSK / Saravana said...

//அவளுக்கு நான் பொறுத்தமானவன் இல்லைன்னு, அவ சொல்லாமலே, நானே முடிவு பண்ணிகிட்டேன்… ’ஏன்னா எனக்கு அவள பத்தி நல்லா தெரியும்…’ ன்னு என் முடிவுக்கு ஒரு காரணமும் தேடிகிட்டேன்.”//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

இந்த மாதிரி எதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து மனதை தேற்றி கொள்வது ஒரு கோழைத்தனம்..

MSK / Saravana said...

இந்த பகுதி கொஞ்சம் இயல்பாகவும், கொஞ்சம் செயற்கையாகவும் இருக்கு திவ்யப்ரியா.

அன்றைய மாலைக்குள், நாயகன் இயல்பாக அந்த பெண்ணிடம் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்..

MSK / Saravana said...

//அதுக்கு நிரு, “ஷிவா…எனக்கு தெரியும்…நீ புரிஞ்சுக்குவன்னு எனக்கு தெரியும்...ஆனாலும் உன் ஃபீலிங்ஸோட விளையாடிட்டனோன்னு எனக்கு கஷ்டமா இருக்கு” ன்னு சொன்னா.//

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்பா..

Raghav said...

//அன்றைய மாலைக்குள், நாயகன் இயல்பாக அந்த பெண்ணிடம் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்//

Why not MSK? நாயகன் தப்பா எதுவும் செய்யலயே, இருவருக்குள்ளும் உள்ள புரிதலை தான் காட்டுகிறது.

வெட்டிப்பயல் said...

ஹும்...

Divya said...

\\அவ என்கிட்ட பேசலைன்னாலும், என் மேல கோவப்பட்டு வந்த மெளனம் இல்ல அது, என் மனசு புண்படாம என்கிட்ட எப்படி மறுக்கறதுன்னு அவ யோசிச்சுட்டு இருந்தனால வந்த மெளனம்ன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது”\\


இந்த அளவிற்கு ஒரு பெண்ணின் மனதை புரிந்துக்கொள்ள முடியுமா??
அந்த நண்பனுக்கு[ஷிவா] ஒரு சல்யூட்!!

MSK / Saravana said...

Beacuse Raghav..
புரிதலை காட்டிலும் வலியின் வீரியம் மிக மிக அதிகம்..

Divya said...

கதை நல்லா போயிட்டிருக்கு திவ்யப்ரியா!

என்ன கிஃப்ட் ஷிவா வைச்சிருக்கார்னு பார்க்க , அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!!

Unknown said...

//“இந்த ஃபோட்டவ நீ பாட்டி ஆகுற வரைக்கும் பத்திரமா வச்சுட்டு இரு, இந்த ஃபோட்டோவில இருக்கறது, யாருன்னு உன் பேரன் வந்து கேட்கும் போது, ’இது என் ஃப்ரெண்டு ஷிவா’ ன்னு சொல்லு போதும்னு சொன்னேன்.//

Seriousaana nerathula konjam comedya irukku

Ramya Ramani said...

அடடே இப்படி கூட ஒரு பொண்ணு மனச புரிஞ்சிக்க முடியுமா?? ரொம்பவே ஆச்சிரியமா இருக்குப்பா.. இப்படி ஒருத்தர மிஸ் பண்ணறது ரொம்பவே கஷ்டம்..

கதை ஓட்டம் நல்லா இருக்கு அப்படியே பீல் பண்ணவைக்குது உங்க வார்த்தை..வாழ்த்துக்கள்

நாடோடி said...

திவ்யப்ரியா, நல்ல முயற்சி..

//“நல்லா ஏமாந்தியா?” வண்ணங்கள் ஏதுமற்ற தன் கைகளை இரு புறமும் ஆட்டி,ஆட்டி, முகத்தை கோனித்து பழிப்பு காட்டி, சிரித்த படியே ஓடினாள், என் தேவதை! //
கொஞ்சம் அழகான கற்பணை..

//காலேஜ்ல பசங்களோட சேந்துகிட்டு, ஆண்டி கடலை ஃபோர்ஸ் அது இதுன்னும் சும்மா கெத்து காட்டிட்டு திரிஞ்சதுல, எந்த பொண்ணோட நட்புமே முழுசா கிடைக்கல… //
கொஞ்சம் உண்மை..

//“என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்” ன்னு சொன்னேன்.//
கொஞ்சம் காதல்..

//“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man”//
கொஞ்சம் டச்சிங்..

//“இந்த ஃபோட்டவ நீ பாட்டி ஆகுற வரைக்கும் பத்திரமா வச்சுட்டு இரு, இந்த ஃபோட்டோவில இருக்கறது, யாருன்னு உன் பேரன் வந்து கேட்கும் போது, ’இது என் ஃப்ரெண்டு ஷிவா’ ன்னு சொல்லு போதும்னு சொன்னேன்.//
இன்னும் கொஞ்சம் நட்பு..

//“அப்படியா? என்ன கிஃப்டு அது?”//
கொஞ்சமா சஸ்பன்ஸ்..

மொத்ததுல ரொம்பவே நல்லாயிருக்கு!
மூனு பாகத்தையும் ஒன்னா படிச்சதுல கொஞ்சம் எக்ஸ்ட்ரா சந்தோஷம்.. :-) மீண்டும் அடுத்த வாரம் வரேன்..

ஆயில்யன் said...

//வெட்டிப்பயல் said...
ஹும்...
//

பெருமூச்சு! (இதை எப்படிப்பா டிபைன் பண்றது இது காதலோட கஷ்டமா இருக்கும் போல இருக்கே!? )

அப்புறமா வெட்டியோட இந்த ”ஹும்” இதுதான் தோணுச்சு படிச்சு முடிச்சதும்! :)

ஆயில்யன் said...

//Raghav said...
அழகான படம், அழகான வார்த்தைகள், அழகான கதை நாயகர்கள், அழகான காதல் மொத்தத்தில் ரொம்பவே அழகான பதிவு..
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

//( ராகவா, இதை யாராவது கவிதைன்னு நினைச்சு ரிப்பீட்டேய் சொல்லப் போறாங்க, காப்பிரைட் பண்ணி வைச்சுக்கோ..)//

காப்பிரைட்டு போட்டாலும் நானெல்லாம் ரிப்பிட்டேய்ய்ய்!சொல்வேனாக்கும்!: )))

வெட்டிப்பயல் said...

/ ஆயில்யன் said...

//வெட்டிப்பயல் said...
ஹும்...
//

பெருமூச்சு! (இதை எப்படிப்பா டிபைன் பண்றது இது காதலோட கஷ்டமா இருக்கும் போல இருக்கே!? )

அப்புறமா வெட்டியோட இந்த ”ஹும்” இதுதான் தோணுச்சு படிச்சு முடிச்சதும்! :)//

அது கதை கேட்டுட்டு இருக்கேனு சொல்றதுக்காக சொன்னது.. வித்தியாசமா ஏதாவது பண்ண விடமாட்டாங்களே :)

அடுத்த பகுதியை படிச்சிட்டு ஏதாவது கருத்து சொல்ல வேண்டி இருந்தா சொல்லலாம் :)

வெட்டிப்பயல் said...

//Saravana Kumar MSK said...

இந்த பகுதி கொஞ்சம் இயல்பாகவும், கொஞ்சம் செயற்கையாகவும் இருக்கு திவ்யப்ரியா.

அன்றைய மாலைக்குள், நாயகன் இயல்பாக அந்த பெண்ணிடம் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்..//

பறவைகள்... பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் :)))

MSK / Saravana said...

திண்ணை தொடர்பதிவு போட்டுவிட்டேன்.. வந்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்க..
:)))

Raghav said...

//Saravana Kumar MSK said...
Beacuse Raghav..
புரிதலை காட்டிலும் வலியின் வீரியம்//

நட்பை விடவா? காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதேநேரம் அவன் நட்பையும் விட முடியவில்லை, அந்தப் பெண்ணின் நிலை எப்படி இருந்திருக்கும். அதுலயும் நம்ம ஹீரோ நல்லா அழுது முடிச்சுட்டு தான் பேச வர்றார். ஒருத்தர் மனசுல எவ்வளவு பாரம் இருந்தாலும் நல்லா அழுதுட்டோம்னா, கண்டிப்பா மனசு லேசாகும், வலியின் வீரியமும் குறையும்.

Raghav said...

//ஆயில்யன் said...
காப்பிரைட்டு போட்டாலும் நானெல்லாம் ரிப்பிட்டேய்ய்ய்!சொல்வேனாக்கும்!//

சூப்பர் தலை.. இப்புடி சொன்னாலாவது நம்ம கருத்துக்கு( என்ன கருத்துன்னு கேக்கக்கூடாது) ரிப்பீட்டேய்ய்ய் வருதான்னு பாத்தேன்.. :)

Unknown said...

//சில நேரங்கள்ள நாம பேச முடியாத பல வார்த்தைகள நம்ம மெளனம் பேசிடும். அன்னிக்கு முழுக்க அவ என்கிட்ட பேசவே இல்ல//

கரெக்ட் தான் அக்கா..!! :)) ஆனா மௌனம் சம்மதம்கறதுல எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்ல..!! :)

//அவ என்கிட்ட பேசலைன்னாலும், என் மேல கோவப்பட்டு வந்த மெளனம் இல்ல அது, என் மனசு புண்படாம என்கிட்ட எப்படி மறுக்கறதுன்னு அவ யோசிச்சுட்டு இருந்தனால வந்த மெளனம்ன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது//

100% true..!!பெண்கள் மட்டுமே புரிஞ்சிக்கற விஷயம் இது. உங்க ஷிவா இதை புரிஞ்சிகிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு..!! :))

//ஒரு பொண்ண பாக்கறப்ப இருக்குற தைரியம்…அவளோட பேசி, பழகறப்ப இருக்குற தைரியம்…அவள தான் காதலிக்கறோம்ன்னு முடிவு பண்ணறப்ப இருக்குற தைரியம்…ஏனோ, அவ கிட்ட காதல சொல்றப்ப மட்டும் இருக்க மாட்டேங்குது…அவளா எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே, அவ கண்டிப்பா தன்னை நிராகரிச்சுடுவாங்கற குழப்பமும், பயமும் நம்ம ஊர்ல பாதி பசங்களுக்கு இருக்கு…நான் மட்டும் விதி விலக்கா என்ன? அவளுக்கு நான் பொறுத்தமானவன் இல்லைன்னு, அவ சொல்லாமலே, நானே முடிவு பண்ணிகிட்டேன்… ’ஏன்னா எனக்கு அவள பத்தி நல்லா தெரியும்…’ ன்னு என் முடிவுக்கு ஒரு காரணமும் தேடிகிட்டேன்.//

ம்ம்ம்ம் இப்படியும் இருக்காங்க. இந்த ச்சின்ன விஷயத்தக் கூட புரிஞ்சிக்காம டார்ச்சர் பண்றவங்களும் இருக்காங்க..!! :))

Unknown said...

//நிரு, உனக்கு நிஜமாவே என்கேஜ்மெண்ட் ஆகி இருந்தா, என்னோட வாழ்த்துக்கள்…அப்படி இல்லன்னாலும், ஒரு அழகான உணர்வ…ஒரு சுகமான வலிய….எனக்கு தந்ததுக்காக, தேங்ஸ்…என் கிட்ட என்ன சொல்றதுன்னு நீ ஸ்பெஷலா எதுவும் யோசிக்க வேண்டாம், எனக்கு உன்ன பத்தி தெரியும், உன் விருப்பு, வெறுப்புகள், தெரியும்…I m not your cup of tea ன்னு எனக்கு நல்லா தெரியும்…அதனால, என் உணர்வுகள புரிஞ்சுக்கோ, என்ன ஏத்துக்கோன்னு நான் உன்ன கேக்க போறதில்லை//

Cho chweeeeeeet.....!! ;))

Unknown said...

அஸ் யூசுவல் டயலாக்ஸ் சூப்பர்..!! :))வெய்டிங் பார் யுவர் நெக்ஸ்ட் பார்ட்..!! ;))

Hariks said...

//“ஒரு பொண்ண பாக்கறப்ப இருக்குற தைரியம்…அவளோட பேசி, பழகறப்ப இருக்குற தைரியம்…அவள தான் காதலிக்கறோம்ன்னு முடிவு பண்ணறப்ப இருக்குற தைரியம்…ஏனோ, அவ கிட்ட காதல சொல்றப்ப மட்டும் இருக்க மாட்டேங்குது…//

இந்த‌ ஆம்ப‌ள‌ ப‌ச‌ங்க‌ளே இப்ப‌டி தான் ;)

Hariks said...

//“இந்த ஃபோட்டவ நீ பாட்டி ஆகுற வரைக்கும் பத்திரமா வச்சுட்டு இரு, இந்த ஃபோட்டோவில இருக்கறது, யாருன்னு உன் பேரன் வந்து கேட்கும் போது, ’இது என் ஃப்ரெண்டு ஷிவா’ ன்னு சொல்லு போதும்னு சொன்னேன்.//

சூப்ப‌ர் ஐடியாவா இருக்கு. மைன்ட்ல‌ வ‌ச்சுக்க‌றேன் ;)

Hariks said...

நானும் அந்த‌ கிப்ட் என்ன‌னு பாக்க‌ற‌துக்கு ஆவ‌லா இருக்கேன். :)

gayathri said...

ஆமா, ஒரு நாள் அப்டி தோனுச்சு, அவளுக்காக, ஆசை ஆசையா வாங்கி வச்சிருந்த ஒரு கிஃப்ட அந்த உறுத்தல் காரணமா அவ கிட்ட ரொம்ப நாள் குடுக்காமலே வச்சிருந்தேன்…”

“அப்படியா? என்ன கிஃப்டு அது?”

நானும் அதே கேள்விய தான் கேக்குறேன்

அப்படியா? என்ன கிஃப்டு அது?”

ஜியா said...

:))) I liked this part too...

முகுந்தன் said...

//ஏன்னா, எனக்கு நிருவ பத்தி தெரியும்…அதனால, அன்னிக்கு வேலை முடிஞ்சதுமே, அவள ஆஃபிஸ் பக்கத்துல இருக்க ஒரு அழகான, அமைதியான, தெருவுக்கு ஒரு வாக் கூட்டுட்டு போனேன்…”
//

பைசா செலவில்லாம பாத்துக்கரார்னு சொல்லுங்க :-)

முகுந்தன் said...

//“இந்த ஃபோட்டவ நீ பாட்டி ஆகுற வரைக்கும் பத்திரமா வச்சுட்டு இரு, இந்த ஃபோட்டோவில இருக்கறது, யாருன்னு உன் பேரன் வந்து கேட்கும் போது, ’இது என் ஃப்ரெண்டு ஷிவா’ ன்னு சொல்லு போதும்னு சொன்னேன்.
//

புல்லரிச்சிடுச்சு :-)

முகுந்தன் said...

அடுத்த பார்ட் எப்போ?

Vijay said...

\\“ஒரு பொண்ண பாக்கறப்ப இருக்குற தைரியம்…அவளோட பேசி, பழகறப்ப இருக்குற தைரியம்…அவள தான் காதலிக்கறோம்ன்னு முடிவு பண்ணறப்ப இருக்குற தைரியம்…ஏனோ, அவ கிட்ட காதல சொல்றப்ப மட்டும் இருக்க மாட்டேங்குது…அவளா எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே, அவ கண்டிப்பா தன்னை நிராகரிச்சுடுவாங்கற குழப்பமும், பயமும் நம்ம ஊர்ல பாதி பசங்களுக்கு இருக்கு…நான் மட்டும் விதி விலக்கா என்ன? \\
Absolutely Beautiful. இந்த வரிகளை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்........ படித்தேன்


திவ்யப்ரியா,
பாகத்துக்குப்பாகம் கதை மெருகேறிட்டே போகுது. ரணமான மனதை அமைதிப் படுத்துவது எவ்வளவு கடினம். ப்ரவீணுடைய characterization is absolutely amazing. எனக்குக் கதைகள் படிக்கும் போது, கதையவிட வசனங்களை விட, அதில் வரும் கதாபாத்திரப் படைப்பு ரொம்ப பிடிக்கும். சில நல்ல கதைகள் கவிதை போல் இருக்கும். மனதிற்கு ரொம்ப இதமாக இருக்கும். ஆனால் பாத்திரங்கள் மனதில் தங்கி விடாது. ஆனால் இந்த கதையில் வரும் நிருவும் சரி ப்ரவீணும் சரி, அவர்களது பாத்திரப்படைப்பு ரொம்பவே முதிர்ந்த பாத்திரப்படைப்பு.
This story of yours is a manifestation of how matured characterization you can offer to ordinary individuals, we encounter in our daily lives.
Hats off!!!

Divyapriya said...

//saravana kumar msk said...

//அவளுக்கு நான் பொறுத்தமானவன் இல்லைன்னு, அவ சொல்லாமலே, நானே முடிவு பண்ணிகிட்டேன்… ’ஏன்னா எனக்கு அவள பத்தி நல்லா தெரியும்…’ ன்னு என் முடிவுக்கு ஒரு காரணமும் தேடிகிட்டேன்.”//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

இந்த மாதிரி எதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து மனதை தேற்றி கொள்வது ஒரு கோழைத்தனம்..//

கோழைத்தனம் ன்னு சொல்லிட முடியாது, ஒரு விதமான இயலாமை, இல்ல பயன்னு வச்சுக்கலாம்…

//இந்த பகுதி கொஞ்சம் இயல்பாகவும், கொஞ்சம் செயற்கையாகவும் இருக்கு திவ்யப்ரியா.

அன்றைய மாலைக்குள், நாயகன் இயல்பாக அந்த பெண்ணிடம் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்..//

அப்படியா சொல்றீங்க? தப்பு பண்ணிட்டோம்ன்னு அவன் நினைக்கல, அவ தப்பா நினைச்சுப்பாளோன்னு பயமும் இல்ல, So, அன்னிக்கு மாலையே பேசுறதுல என்ன தயக்கம் இருக்க முடியும்?

Divyapriya said...
This comment has been removed by the author.
Divyapriya said...

//raghav said...
//அன்றைய மாலைக்குள், நாயகன் இயல்பாக அந்த பெண்ணிடம் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்//

Why not MSK? நாயகன் தப்பா எதுவும் செய்யலயே, இருவருக்குள்ளும் உள்ள புரிதலை தான் காட்டுகிறது.//

Exactly Raghav :)

-------------------------------
// வெட்டிப்பயல் said...
ஹும்...//

கதை கேக்குறீங்களா? முதல்ல இந்த reaction அர்த்தம் எனக்கும் புரியல…thanks to ஆயில்யன்

Divyapriya said...

// divya said...
\\அவ என்கிட்ட பேசலைன்னாலும், என் மேல கோவப்பட்டு வந்த மெளனம் இல்ல அது, என் மனசு புண்படாம என்கிட்ட எப்படி மறுக்கறதுன்னு அவ யோசிச்சுட்டு இருந்தனால வந்த மெளனம்ன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது”\\


இந்த அளவிற்கு ஒரு பெண்ணின் மனதை புரிந்துக்கொள்ள முடியுமா??
அந்த நண்பனுக்கு[ஷிவா] ஒரு சல்யூட்!!//

உங்க சல்யூட்ட நண்பன் ஷிவாக்கு convey பண்ணிடறேன் :))

//divya said...
கதை நல்லா போயிட்டிருக்கு திவ்யப்ரியா!

என்ன கிஃப்ட் ஷிவா வைச்சிருக்கார்னு பார்க்க , அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!!//

இன்னிக்கே அடுத்த பகுதி :)

-----------------------------
// saravana kumar msk said...
Beacuse Raghav..
புரிதலை காட்டிலும் வலியின் வீரியம் மிக மிக அதிகம்..//

என்ன சரவணா? அனுபவமா ;-)

Divyapriya said...

// vishnu said...
//“இந்த ஃபோட்டவ நீ பாட்டி ஆகுற வரைக்கும் பத்திரமா வச்சுட்டு இரு, இந்த ஃபோட்டோவில இருக்கறது, யாருன்னு உன் பேரன் வந்து கேட்கும் போது, ’இது என் ஃப்ரெண்டு ஷிவா’ ன்னு சொல்லு போதும்னு சொன்னேன்.//

Seriousaana nerathula konjam comedya irukku//

காமடியா இருக்கா? அட டா…நான் touchings ன்னு இல்ல நினைச்சேன் :(

------------------------------------
// ramya ramani said...
அடடே இப்படி கூட ஒரு பொண்ணு மனச புரிஞ்சிக்க முடியுமா?? ரொம்பவே ஆச்சிரியமா இருக்குப்பா.. இப்படி ஒருத்தர மிஸ் பண்ணறது ரொம்பவே கஷ்டம்..

கதை ஓட்டம் நல்லா இருக்கு அப்படியே பீல் பண்ணவைக்குது உங்க வார்த்தை..வாழ்த்துக்கள்//

Thanks ramya…ஷிவா கிட்ட உங்க ஆச்சர்யத்த சொல்லிடறேன் ;-)
------------------------------------

// நாடோடி said...
திவ்யப்ரியா, நல்ல முயற்சி..

மொத்ததுல ரொம்பவே நல்லாயிருக்கு!
மூனு பாகத்தையும் ஒன்னா படிச்சதுல கொஞ்சம் எக்ஸ்ட்ரா சந்தோஷம்.. :-) மீண்டும் அடுத்த வாரம் வரேன்..//

ரொம்ப நன்றி நாடோடி…அடுத்த வாரம் எல்லாம் இல்லை, இன்னிக்கே போட்டுடறேன்…மூணு பாகத்தையும் ஒன்னா படிச்சிட்டீங்களா? Thanks a lot :)

------------------------------------

// ஆயில்யன் said...
//வெட்டிப்பயல் said...
ஹும்...
//

பெருமூச்சு! (இதை எப்படிப்பா டிபைன் பண்றது இது காதலோட கஷ்டமா இருக்கும் போல இருக்கே!? )

அப்புறமா வெட்டியோட இந்த ”ஹும்” இதுதான் தோணுச்சு படிச்சு முடிச்சதும்! :)
//
\\ ஆயில்யன் said...
//Raghav said...
அழகான படம், அழகான வார்த்தைகள், அழகான கதை நாயகர்கள், அழகான காதல் மொத்தத்தில் ரொம்பவே அழகான பதிவு..
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!\\

ரொம்ப நன்றி ஆயில்யன்…

Divyapriya said...

// வெட்டிப்பயல் said...
/ ஆயில்யன் said...

//வெட்டிப்பயல் said...
ஹும்...
//

பெருமூச்சு! (இதை எப்படிப்பா டிபைன் பண்றது இது காதலோட கஷ்டமா இருக்கும் போல இருக்கே!? )

அப்புறமா வெட்டியோட இந்த ”ஹும்” இதுதான் தோணுச்சு படிச்சு முடிச்சதும்! :)//

அது கதை கேட்டுட்டு இருக்கேனு சொல்றதுக்காக சொன்னது.. வித்தியாசமா ஏதாவது பண்ண விடமாட்டாங்களே :)

அடுத்த பகுதியை படிச்சிட்டு ஏதாவது கருத்து சொல்ல வேண்டி இருந்தா சொல்லலாம் :)//

கண்டிப்பா படிச்சு முடிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்கண்ணா…:)


// வெட்டிப்பயல் said...
//Saravana Kumar MSK said...

இந்த பகுதி கொஞ்சம் இயல்பாகவும், கொஞ்சம் செயற்கையாகவும் இருக்கு திவ்யப்ரியா.

அன்றைய மாலைக்குள், நாயகன் இயல்பாக அந்த பெண்ணிடம் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்..//

பறவைகள்... பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் :)))//

ரிப்பீட்டேய் :)
----------------------------------------

// saravana kumar msk said...
திண்ணை தொடர்பதிவு போட்டுவிட்டேன்.. வந்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்க..
:)))//

சூப்பர் பதிவு…நேத்தே படிச்சுடன், இப்ப தான் கமென்ட்டினேன்…

----------------------------------------
// raghav said...
//Saravana Kumar MSK said...
Beacuse Raghav..
புரிதலை காட்டிலும் வலியின் வீரியம்//

நட்பை விடவா? காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதேநேரம் அவன் நட்பையும் விட முடியவில்லை, அந்தப் பெண்ணின் நிலை எப்படி இருந்திருக்கும். அதுலயும் நம்ம ஹீரோ நல்லா அழுது முடிச்சுட்டு தான் பேச வர்றார். ஒருத்தர் மனசுல எவ்வளவு பாரம் இருந்தாலும் நல்லா அழுதுட்டோம்னா, கண்டிப்பா மனசு லேசாகும், வலியின் வீரியமும் குறையும்.//

ரொம்ப சரியா சொன்னீங்க ராகவ்! மனசு விட்டு அழுதா ஒரு தனி தெளிவே பிறக்குமே…

Divyapriya said...

// sri said...
//சில நேரங்கள்ள நாம பேச முடியாத பல வார்த்தைகள நம்ம மெளனம் பேசிடும். அன்னிக்கு முழுக்க அவ என்கிட்ட பேசவே இல்ல//

கரெக்ட் தான் அக்கா..!! :)) ஆனா மௌனம் சம்மதம்கறதுல எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்ல..!! :)

//அவ என்கிட்ட பேசலைன்னாலும், என் மேல கோவப்பட்டு வந்த மெளனம் இல்ல அது, என் மனசு புண்படாம என்கிட்ட எப்படி மறுக்கறதுன்னு அவ யோசிச்சுட்டு இருந்தனால வந்த மெளனம்ன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது//

100% true..!!பெண்கள் மட்டுமே புரிஞ்சிக்கற விஷயம் இது. உங்க ஷிவா இதை புரிஞ்சிகிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு..!! :))

//ஒரு பொண்ண பாக்கறப்ப இருக்குற தைரியம்…அவளோட பேசி, பழகறப்ப இருக்குற தைரியம்…அவள தான் காதலிக்கறோம்ன்னு முடிவு பண்ணறப்ப இருக்குற தைரியம்…ஏனோ, அவ கிட்ட காதல சொல்றப்ப மட்டும் இருக்க மாட்டேங்குது…அவளா எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே, அவ கண்டிப்பா தன்னை நிராகரிச்சுடுவாங்கற குழப்பமும், பயமும் நம்ம ஊர்ல பாதி பசங்களுக்கு இருக்கு…நான் மட்டும் விதி விலக்கா என்ன? அவளுக்கு நான் பொறுத்தமானவன் இல்லைன்னு, அவ சொல்லாமலே, நானே முடிவு பண்ணிகிட்டேன்… ’ஏன்னா எனக்கு அவள பத்தி நல்லா தெரியும்…’ ன்னு என் முடிவுக்கு ஒரு காரணமும் தேடிகிட்டேன்.//

ம்ம்ம்ம் இப்படியும் இருக்காங்க. இந்த ச்சின்ன விஷயத்தக் கூட புரிஞ்சிக்காம டார்ச்சர் பண்றவங்களும் இருக்காங்க..!! :))//

ஹ்ம்ம்…நீ சொல்றதும் சரி தாம்மா…ஆனா, இன்னும் சில பேர் இப்படி தான இருக்காங்க :)

----------------------------------------
// sri said...
//நிரு, உனக்கு நிஜமாவே என்கேஜ்மெண்ட் ஆகி இருந்தா, என்னோட வாழ்த்துக்கள்…அப்படி இல்லன்னாலும், ஒரு அழகான உணர்வ…ஒரு சுகமான வலிய….எனக்கு தந்ததுக்காக, தேங்ஸ்…என் கிட்ட என்ன சொல்றதுன்னு நீ ஸ்பெஷலா எதுவும் யோசிக்க வேண்டாம், எனக்கு உன்ன பத்தி தெரியும், உன் விருப்பு, வெறுப்புகள், தெரியும்…I m not your cup of tea ன்னு எனக்கு நல்லா தெரியும்…அதனால, என் உணர்வுகள புரிஞ்சுக்கோ, என்ன ஏத்துக்கோன்னு நான் உன்ன கேக்க போறதில்லை//

Cho chweeeeeeet.....!! ;))//

நானும் பாத்துட்டே வரேன், எனக்கு பிடித்தமான வரிகள் எல்லாம் கரெக்ட்டா உனக்கும் புடிக்குது தங்கச்சி :) ச்சோ ச்வீட் :-D

Divyapriya said...

// ஜி said...
:))) I liked this part too...//

நன்றி தல ;)

----------------------------------
//முகுந்தன் said...
பைசா செலவில்லாம பாத்துக்கரார்னு சொல்லுங்க :-)//

அது என்னவோ உண்மை தான் முகுந்தன் :)

---------------------------------
// முகுந்தன் said...

புல்லரிச்சிடுச்சு :-)//

;-)

-------------------------------
// முகுந்தன் said...
அடுத்த பார்ட் எப்போ?//

இன்னைக்கு தான் ;)

Divyapriya said...

// விஜய் said...
Absolutely Beautiful. இந்த வரிகளை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்........ படித்தேன்//

அப்படியா? ரொம்ப நன்றி விஜய்…இந்த வரிகள கடைசியா கதை எல்லாம் எழுதி முடிச்சப்புறம் தான் சேத்தேன் ;)

Divyapriya said...

விஜய் said...

//திவ்யப்ரியா,
பாகத்துக்குப்பாகம் கதை மெருகேறிட்டே போகுது. ரணமான மனதை அமைதிப் படுத்துவது எவ்வளவு கடினம். ப்ரவீணுடைய characterization is absolutely amazing. எனக்குக் கதைகள் படிக்கும் போது, கதையவிட வசனங்களை விட, அதில் வரும் கதாபாத்திரப் படைப்பு ரொம்ப பிடிக்கும். சில நல்ல கதைகள் கவிதை போல் இருக்கும். மனதிற்கு ரொம்ப இதமாக இருக்கும். ஆனால் பாத்திரங்கள் மனதில் தங்கி விடாது. ஆனால் இந்த கதையில் வரும் நிருவும் சரி ப்ரவீணும் சரி, அவர்களது பாத்திரப்படைப்பு ரொம்பவே முதிர்ந்த பாத்திரப்படைப்பு.
This story of yours is a manifestation of how matured characterization you can offer to ordinary individuals, we encounter in our daily lives.
Hats off!!!//

கமெண்ட்ட படிச்சு அப்படியே புல்லரிச்சு போச்சு விஜய்…நீங்க முதல்ல என் ப்ளாக உங்க பக்கத்துல add பண்ணலைன்னா, இவ்வளவு interest எனக்கு வந்துருக்கவே வந்துருக்காது…என்னோட archives எல்லாம் பாத்தாலே தெரியும், சமீப காலமா தான் அதிக பதிவுகள் போட்டுட்டு இருக்கேன்…அதுக்கு readers அதிகமானது தான் காரணம், so, முதல்ல உங்களுக்கு தான் நன்றி சொல்லனும் :)
ஆனா, உங்க கமெண்ட்ல கதை ஹீரோவ ஷிவான்னு போட்றதுக்கு பதிலா அவன் ஃப்ரெண்டு ப்ரவீன் பேர போட்டு கவுத்துட்டீங்களே விஜய்…கவுத்துட்டீங்களே :-(