Saturday, December 6, 2008

Slip of fingers!

ஆங்கிலத்தில், “Slip of tongue” என்று ஒரு பதம் உண்டு, அதே போல், “Slip of fingers” (technically, spelling mistake :-) ) என்று ஒன்று இருந்தால், அது கீழே உள்ளவற்றுக்கெல்லாம் நன்றாக பொருந்தும்.

“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டம்…” என்று ஆரம்பித்து, 18 முறை தெளிவாக, ’வேண்டம்’ ’வேண்டம்’ என்று வெற்றி கரமாக மூன்றாம் வகுப்பில் எழுதியதில் தொடங்கி, சமீபத்தில், “பிரிவின் வழியை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்” என்று பின்னூட்டம் போட்டது முதல், என் ’slip of flngers’ பட்டியல் ஏராளம்.

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் இடை பட்ட காலத்தில் நடந்த, இப்போது நினைத்தாலும், கிச்சு கிச்சு மூட்டக் கூடிய, சில ’slip of fingers’ இங்கே…

“மதிப்பிற்குறிய ஐயா!
என் மதிவண்டியை காணவில்லை…”
என்று காம்போஷிஷன் புத்தகத்தில், எழுதிய கடிதம் முழுக்க மிதிவண்டிக்கு பதில் மதிவண்டியை தேடியது…

“சங்க காலத்தில், மன்னர்கள், புலவர்களை வெகுவாக மிதித்தனர்…” என்று எழுதி சங்க காலத்துப் புலவர்களை டேமேஜ் செய்தது…

“சிவபெறுமான்”, “சிவபெறுமான்” என்று பரிட்சை பேப்பரில், கட்டுரை முழுக்க எழுதி, பின் தமிழ் மிஸ்ஸிடம் அசிங்கப்பட்டு, “சிவபெருமான்” என்று இருபது முறை imposition எழுதி புண்ணியம் தேடிக் கொண்டது…

இதெல்லாம் கூட பரவாயில்லை, என் தோழி ஒருத்தி பரிட்சை பேப்பரில், “நளன் சோலைக்குள் புகுந்தான்” என்பதற்கு பதில், “நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்…:-D

சரி, “Slip of fingers” பத்தி சொல்லிட்டு, ’Slip of tongue’ பத்தி சொல்லாட்டா எப்படி?

ஒரு நாள்…இங்கிலிஷ் க்ளாஸ்ல, அடியேன் தான் டிக்டேட்டர் (நான் தான் நோட்ஸ் டிக்டேட் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்ல வந்தேன் ;-) )

அப்ப Japanese என்று ஒரு வார்த்தை வந்தது, அப்போ இங்கிலிஷ் மிஸ், “Divya! Better spell Japanese once” அப்படீன்னாங்க.

சரின்னு நானும் உடனே ரொம்ப ஸ்டைலா சொன்னேன், “Japanese…ஜே…ஏ…பே…ஏ”

“பி. ஏ” ங்கறது என் வாயில எப்படி “பே. ஏ’ ன்னு வந்துச்சுன்னு எனக்கு இன்னும் விளங்கல…அதுக்கப்புறம், க்ளாஸே ஒரு பத்து நிமிஷம் ஓயாம சிரிச்சதையும், குறைஞ்சது ஒரு வருஷமாவது அத சொல்லி, சொல்லியே என்னை எல்லாரும் ஓட்டி எடுத்தையும், நான் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்குறேன் :-)

49 comments:

Vijay said...

Very interesting :-)
முதல்ல என்னடா இது, நிறைய தட்டச்சு பிழைகள் இருக்கேன்னு நினைச்சேன். அப்புறம் தான் தெரிந்தது, இந்த பதிவே தட்டச்சு பிழைபற்றியது தான்னு அப்புறம் தான் தெரிஞ்சது.

Unknown said...

thottil pazhakkam sudukadu mttum grada prove pannita.. ippo mattum neenga spelling mistake illama ezhudureenganu nenapo? ;) ;)

Vijay said...

Me the first !!!!!

சிம்பா said...

வேணாம் பழசெல்லாம் கிளறாதீங்க...

imposition ல தப்பு பண்ணி, அதுக்கே imposition எழுதின பெருமை என்னை சாரும்...

இப்போ கூட பதிவு எழுதி முடித்தவுடன் அம்மா கிட்ட காட்டுவேன்... போற மானம் வீட்டுக்குள்ள போகட்டும்னு.. :))

Poornima Saravana kumar said...

//“பி. ஏ” ங்கறது என் வாயில எப்படி “பே. ஏ’ ன்னு வந்துச்சுன்னு எனக்கு இன்னும் விளங்கல…அதுக்கப்புறம், க்ளாஸே ஒரு பத்து நிமிஷம் ஓயாம சிரிச்சதையும், குறைஞ்சது ஒரு வருஷமாவது அத சொல்லி, சொல்லியே என்னை எல்லாரும் ஓட்டி எடுத்தையும், நான் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்குறேன் :-) //

he he he he

Poornima Saravana kumar said...

//“நளன் சோலைக்குள் புகுந்தான்” என்பதற்கு பதில், “நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்//

சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குததுங்க

Anonymous said...

//இதெல்லாம் கூட பரவாயில்லை, என் தோழி ஒருத்தி பரிட்சை பேப்பரில், “நளன் சோலைக்குள் புகுந்தான்” என்பதற்கு பதில், “நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்…//

இதே சம்பவம் எங்க வகுப்பிலையும் நடந்ததுங்கோ ....

ஆனா அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சத்தியமா நான் பண்ணலீங்க ....

G3 said...

Nalla sirichen unga post padichu :))))

Idhu pola pala thavarugal naangalum panni irukkomilla :D [Enna oru perumai paarunnu neenga soldradhu enakku kekkala :P]

MSK / Saravana said...

யப்பா.. முடியலடா சாமி..

ROTFL.. :)))))))))))))))))))))))))))

MSK / Saravana said...

மதிப்பிற்குறிய ஐயா! ???

மதிப்பிற்குரிய...


இப்போவும் இப்படி தப்பா அடிக்கறீங்களே.. LOL.. :)

MSK / Saravana said...

இதுநாள் வரை.. உங்களுக்கு ஹியூமர் சென்ஸ் ஜாஸ்தின்னு நெனச்சேன்.. அதனால்தான் காமெடியா பதிவு எழுதறீங்கன்னு நெனச்சேன்..

//இதெல்லாம் கூட பரவாயில்லை, என் தோழி ஒருத்தி பரிட்சை பேப்பரில், “நளன் சோலைக்குள் புகுந்தான்” என்பதற்கு பதில், “நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்…:-D//

ஆனா.. இப்போதான் தெரியுது நீங்களே செம காமெடின்னு.. he.. he.. ;)

MSK / Saravana said...

//“சிவபெறுமான்”, “சிவபெறுமான்” என்று பரிட்சை பேப்பரில், கட்டுரை முழுக்க எழுதி, பின் தமிழ் மிஸ்ஸிடம் அசிங்கப்பட்டு, “சிவபெருமான்” என்று இருபது முறை imposition எழுதி புண்ணியம் தேடிக் கொண்டது…//

உம்மாச்சி கண்ண குத்தலையா.. ;)

MSK / Saravana said...

//ஒரு நாள்…இங்கிலிஷ் க்ளாஸ்ல, அடியேன் தான் டிக்டேட்டர் (நான் தான் நோட்ஸ் டிக்டேட் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்ல வந்தேன் ;-) )//

திஸ் இஸ் கியூட்..

ஒத்துகறேன்.. உங்களுக்கு ஹியூமர் சென்ஸ் ரொம்ப என்பதை ஒத்துகறேன்..

MSK / Saravana said...

//சரின்னு நானும் உடனே ரொம்ப ஸ்டைலா சொன்னேன், “Japanese…ஜே…ஏ…பே…ஏ”

“பி. ஏ” ங்கறது என் வாயில எப்படி “பே. ஏ’ ன்னு வந்துச்சுன்னு எனக்கு இன்னும் விளங்கல…அதுக்கப்புறம், க்ளாஸே ஒரு பத்து நிமிஷம் ஓயாம சிரிச்சதையும், குறைஞ்சது ஒரு வருஷமாவது அத சொல்லி, சொல்லியே என்னை எல்லாரும் ஓட்டி எடுத்தையும், நான் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்குறேன் :-) //

ஹி..ஹி..ஹி..ஹி..
ஹா..ஹா..ஹா..ஹா..
ஹு..ஹு..ஹு..ஹு..

MSK / Saravana said...

Me the 15th.. :)

MSK / Saravana said...

போன மாதத்தில் ஒரே ஒரு பதிவு தான் போட்டீங்க.. இனிமேல் அந்த மாதிரி எல்லாம் பண்ண கூடாது.. இதுமாதிரி நெறைய பதிவு போடணும்..

Anonymous said...

"Slip of fingers" எங்கியோ பாத்த ஞாபகம். இந்த கதைய ஏற்கனவே படிச்ச ஞாபகம்.. எப்போ அனுப்பினீங்கனு தெரியல.. :)

எப்படியிருந்தாலும் எல்லோருடைய கடந்தகால நினைவுகளையும் அசைபோட வச்சுட்டீங்க. ஆனாலும் அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் பெரிசா ஒன்னும் வித்தியாசமில்லைன்னு நினைக்கிறேன். ;) ;)

priyamudanprabu said...

“சிவபெறுமான்”, “சிவபெறுமான்” என்று பரிட்சை பேப்பரில், கட்டுரை முழுக்க எழுதி, பின் தமிழ் மிஸ்ஸிடம் அசிங்கப்பட்டு, “சிவபெருமான்” என்று இருபது முறை imposition எழுதி புண்ணியம் தேடிக் கொண்டது…
//////////

புண்ணியம்?????????????
(என்னவிடவா?????? மோசம்)

priyamudanprabu said...

நல்ல காமெடி

Divya said...

நமக்குள் 'பெயர்' பொருத்தம் மட்டும்மில்லை.........'slip of fingers' பொருத்தமும் நிறையவே இருக்குது திவ்யப்ரியா;)))

Divya said...

sema intresting flow of writing........sirichutey padichein unga post:))


kalakkals!

முகுந்தன் said...

//நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்…//

இதெல்லாம் நினைக்க கூடாது , ரொம்ப தப்பு :))

Ramya Ramani said...

Wow DP Kalakkare.. 2 months blog spelling kooda marandhitten pa.. re entry podalamannu yosikkum bodu semma post oda start panren.. :)

தாரணி பிரியா said...

சூப்பர் திவ்யா.


//சரின்னு நானும் உடனே ரொம்ப ஸ்டைலா சொன்னேன், “Japanese…ஜே…ஏ…பே…ஏ”

“பி. ஏ” ங்கறது என் வாயில எப்படி “பே. ஏ’ ன்னு வந்துச்சுன்னு எனக்கு இன்னும் விளங்கல…அதுக்கப்புறம், க்ளாஸே ஒரு பத்து நிமிஷம் ஓயாம சிரிச்சதையும், குறைஞ்சது ஒரு வருஷமாவது அத சொல்லி, சொல்லியே என்னை எல்லாரும் ஓட்டி எடுத்தையும், நான் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்குறேன் :‍)//

சிரிக்க ஆரம்பிச்சு கண்ணு நிறைய தண்ணியோட டைப் செய்யறேன்.

_____________________

எப்பவும் படிச்சமா கமெண்ட் டைப் செஞ்சமான்னு போயிட்டே இருப்பேன். இந்த தடவைதான் எல்லாம் படிச்சு பார்த்து பப்ளிஷ் பட்டனை அழுத்தறேன். :)

Shiva.G said...

ammmmaaazing!!!
especially the part where u brought in ur 'so called frend' instead of u to publish ur kaamadi :D
btw .. nalana romba visaarichadha sollu ;)
idhellaa padichu enakke en mela sirippu varudhu .. actually adha padicha apparam dhaan sivaperumaan spelling laa enakku therinujdhu :D also i still get the 2nd one - so .. u can feel good tht unakku keelayum silar irukkaangoo!! u know which is d wostu comedy .. #1. u don even realize u ve made a mistake wen ppl laugh at u.. 2. After a looong time even if u realize it - u end up knowing with the only clue tht u ve made some mistake some where n have no idea abt wat n where it is..
Then u get reminded of the saying "Ignorance is Bliss" !!
:)

Unknown said...

அக்கா ஆபீஸ் வந்ததும் உங்க போஸ்ட் தான் படிச்சேன்.. நல்லா சிரிக்க வெச்சீங்க.. :)))) நன்றி.. :)))

Vijay said...

\\Ramya Ramani said...
Wow DP Kalakkare.. 2 months blog spelling kooda marandhitten pa.. re entry podalamannu yosikkum bodu semma post oda start panren.. :)\\

ஹலோ, யாரது. எங்கேயோ கேட்ட குரலா இருக்கே!!

புதியவன் said...

//“பி. ஏ” ங்கறது என் வாயில எப்படி “பே. ஏ’ ன்னு வந்துச்சுன்னு எனக்கு இன்னும் விளங்கல…அதுக்கப்புறம், க்ளாஸே ஒரு பத்து நிமிஷம் ஓயாம சிரிச்சதையும், குறைஞ்சது ஒரு வருஷமாவது அத சொல்லி, சொல்லியே என்னை எல்லாரும் ஓட்டி எடுத்தையும், நான் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்குறேன் :-) //

செம காமெடி, இத நெனச்சு இன்னும் ஒரு வருசத்துக்குக் கூட சிரிக்கலாங்க...

உங்களுக்கு காமெடி ரொம்ப நல்லா வருது...

முகுந்தன் said...

//ஸ்ரீமதி said...
அக்கா ஆபீஸ் வந்ததும் உங்க போஸ்ட் தான் படிச்சேன்.. நல்லா சிரிக்க வெச்சீங்க.. :)))) நன்றி.. :)))
//


கமெண்ட் மற்றும் உங்கள் அனைத்து படைப்புகளையும் ஆபீஸில் இருந்து தான் வெளியிடுகிறீர்களா? :)

Unknown said...

//முகுந்தன் said...
//ஸ்ரீமதி said...
அக்கா ஆபீஸ் வந்ததும் உங்க போஸ்ட் தான் படிச்சேன்.. நல்லா சிரிக்க வெச்சீங்க.. :)))) நன்றி.. :)))
//


கமெண்ட் மற்றும் உங்கள் அனைத்து படைப்புகளையும் ஆபீஸில் இருந்து தான் வெளியிடுகிறீர்களா? :)//

ம்ம்ம் ஆமா அண்ணா :))

Anonymous said...

அப்படியென்றால் இந்த நிலமை எனக்கு மட்டும் இல்லையா :D?

Divyapriya said...

விஜய்
இல்லன்னாலும் நிறைய பிழைகள் இருக்கும் தான். என்ன பண்றது :((

--------

sundar
நான் அப்டி எல்லாம் சொல்லவே இல்லையே ;)

--------

சிம்பா
ஹை எனக்கும் ஒரு கம்பனி :))

--------

PoornimaSaran

thanks poornima...
தொடர்ந்து படிங்க...நல்லா சிரிங்க :)
--------

sriram
நாங்க நம்பிட்டோம்...ஹீ ஹீ ;)


--------

Divyapriya said...


G3
நீங்க சொன்னது எனக்கு கேக்கவே இல்லீங்கக்கா :))

---------

Saravana Kumar MSK
இதுலையும் spelling mistake ஆ ? :(((
spelling mistakes பத்தி பதிவு போட்டு, அதுலையும் அசிங்கப் படனும்னு என் தலைல எழுதி இருக்கு...நல்ல வேலை, தமிழ் exam paper மாதிரி இத எங்க அப்பா பாக்க மாட்டாரு :))

---------

மதி
நீங்க படிச்ச பல பதிவுகள்ள இதுவும் ஒன்னு :))

---------

பிரபு
நீங்க எல்லாம் இந்த பதிவுலையே தப்பு கண்டுபிடிச்சு சொன்னதுல, எனக்கு ரொம்ப சோகம் :((

---------

Divya
Thanks a lot Divya
சிரிச்சிட்டு படிச்சாலும் சரி தான், சிரிச்சிட்டு படிச்சாலும் சரி தான் :))
---------

Divyapriya said...


முகுந்தன்
வாங்க முதலாளி...கேசவன் பிறந்த நாளுக்கு ஒரு chocolate கூட குடுக்கல :((

---------
Ramya Ramani
ரம்யா!!! welcome welcome :))
blog spelling மறந்து போயிடுச்சா? அதெப்படி மறக்க முடியும்? நீ மறந்தாலும் நாங்க விட மாட்டோம் :)) கலக்கலான ஒரு பதிவ சீக்கரம் போட்டுடுங்க :))

----------
தாரணி
:)) நன்றி தாரணி...

----------
Shiva.G
என்னது ? so called friendaa? ஊய்...அது நானில்ல...

----------
ஸ்ரீமதி
:))

----------
புதியவன்
ஒரு வருசத்துக்கு சிரிக்க போறீங்களா? சூப்பர் :))

----------
(unknown blogger)
உங்களுக்கு அப்டி இரு நிலைமை இல்லையா? அப்ப நீங்க தமிழ் புலியா?

Anonymous said...

//சரின்னு நானும் உடனே ரொம்ப ஸ்டைலா சொன்னேன், “Japanese…ஜே…ஏ…பே…ஏ”//- ayoayo mudiyala vayuru valikuthu pa... hahahhahaha
//என் தோழி ஒருத்தி பரிட்சை பேப்பரில், “நளன் சோலைக்குள் புகுந்தான்” என்பதற்கு பதில், “நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்// - chinna mistake but total change...hahahhaha

நாகை சிவா said...

:))

Smriti said...

No one to surpass you Div ... u jus simply RULE!

Raghav said...

ம்.. ரொம்ப நாள் கழித்து வர்றதால, மக்கள்ஸ் எல்லாம் கோபமா இருப்பாங்கன்னு சிரிக்க வைக்கிறீகளாக்கும்.. நல்லா சிரிச்சேன்.. :)

எப்புடி இருக்கீக?

Sateesh said...

//சங்க காலத்தில், மன்னர்கள், புலவர்களை வெகுவாக மிதித்தனர்…” //

இது தான் டெரர்

ஜியா said...

//மதிப்பிற்குறிய ஐயா!
என் மதிவண்டியை காணவில்லை…”
//

Mathi vandi mattumaa?? ;))

ஜியா said...

// Saravana Kumar MSK said...
மதிப்பிற்குறிய ஐயா! ???

மதிப்பிற்குரிய...


இப்போவும் இப்படி தப்பா அடிக்கறீங்களே.. LOL.. :)
//

Oh cool!! I meant the same in my earlier comment :))

Divyapriya said...

Gowtham
அட அட என்ன ஒரு தத்துவம் ;)

-------
நாகை சிவா

:)))
-------
Smriti

U mean rule in making mistakes :(

------
Raghav
ரொம்ப நாளா ஒரு கதை எழுதிட்டு இருக்கேன் ராகவ், அத போஸ்ட் பண்ணலாம்னு பாத்தா, அதே மாதிரி கதை பூ படமா வந்துடுச்சு :(
இந்த போஸ்ட் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதினது, ரொம்ப மொக்கையா இருக்குன்னு போடாமையே வச்சிருந்தேன்…இப்ப பதிவு பற்றாக்குறைனால இத போட வேண்டியதா போய்டுச்சு :(
எல்லாரும் சிரிச்சதா கமெண்ட் போட்ருக்கறத பாத்தா, சுமாரான மொக்கை தான் போல இருக்கு…அப்ப, அடுத்து இதே போல காலேஜ்ல நடந்த கூத்த எழுத வேண்டியது தான் :)

------
இத்யாதி

ஆமாம் இத்யாதி, ரொம்ப பாவம் தான் புலவர்கள், அத விட பாவம் தமிழ் மிஸ் :))

------
ஜி
சரி விடுங்க விடுங்க…அது தான் சரவணனே சொல்லிட்டாரே…
இந்த பதிவுக்காக ஸ்பெஷலா வேணும்னே spelling mistakes ஓட போட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

good one :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

good one :)

Karthik said...

nalla sirippoda eludureenga!!!

MSK / Saravana said...

//இந்த பதிவுக்காக ஸ்பெஷலா வேணும்னே spelling mistakes ஓட போட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க :))//

மாட்டேன்.. :)

GAYATHRI said...

hahahaha!!hilarious!!scene post:p

Anonymous said...

j.a.paye.a :D :D nalla spelling :D :D chanceleenga :D en thangai oru thadava kattabommana kettabommanaki tamizh paperla kalakitu vantha :D oru masam otinom atha soliye :D nice post

Karthik Krishna said...

//“சிவபெறுமான்”, “சிவபெறுமான்” என்று பரிட்சை பேப்பரில், கட்டுரை முழுக்க எழுதி, பின் தமிழ் மிஸ்ஸிடம் அசிங்கப்பட்டு, “சிவபெருமான்” என்று இருபது முறை imposition எழுதி புண்ணியம் தேடிக் கொண்டது…//

wooooooooooooowwwwwwwww