Friday, December 28, 2007

மார்கழி திங்கள்-6

கதிரவனின் செங்கதிர்கள் பரவி,
வையமெங்கும் இருள் நீங்கி,
பொன்ஒளிரும் வேளையிலே!

மகரந்தம் தேடும் தேனீக்கள் உலவும்,
மனம் கமலும் மலர்கள்
பூத்துக் குலுங்கும் சோலையிலே!

ஈரகூந்தல் தான் முடிந்து,
பூக்கள் கொணரும் கோபியரெல்லாம்,
பார்த்தன் அவன் பார்வையிலே!

உளம் கனிந்து நின்றனரே!
எமக்கும் அத்தகைய வரம் தாராயோ!
எம் குறை தீர்க்க, ஓடோடி வாராயோ!

0 comments: