Thursday, April 3, 2008

என்றென்றும்...


என் தாயோடு சேர்த்து எனக்கும் ஒரு தாயாய்,
எப்போதும் என்னுடன் இருந்த உற்ற தோழியாய்,
சிரிப்பும், சந்தோஷமும், கேலியும், கிண்டலுமாய்,
நேற்று வரை என்னுடன் இருந்த நீ!
இப்போது அந்த ஆறடி குழிக்குள் அமைதியாய் உறங்கிக்கொண்டிருப்பதாய்,
மனதை தேற்றிக் கொள்ள முடியாமல் கண்மூடி கிடந்த போதுதான்,
மூடிய விழித்திரையின் கருமையையும் மீறிக்கொண்டு
வெள்ளிகீற்றாய் தெரிந்த உன் சிறு கண்கள் உணர்த்தியது...
இன்றும், என்றென்றும், நீ என்னுடன் இருக்கிறாய் என்று!!!

1 comments:

Anonymous said...

Very touching lines...