Friday, December 21, 2007

மார்கழி திங்கள்-5

சலசலக்கும் மரங்கள்,
பாய்ந்தோடும் நதி,
சிறகடிக்கும் சில்வண்டு,
படபடக்கும் பட்டாம்பூச்சி,
துள்ளி திரியும் மான்கள்,
அடிஒடும் சிறுவர்கள்,
சிரித்து மகிழும் கோபியர்,
சிலுசிலுவென்று அடிக்கும் காற்று கூட
சிலிர்த்து நின்றது கண்ணா!
உன் குழலோசை கேட்டு!
எமக்கும் உன் குழோசை கேட்கும் வரம் தாராயோ!
எம் கோரி தீர்க்க ஓடோடி வாராயோ!

0 comments: